எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நடப்பு தொடரில் களம் இறங்கிய 11 ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து 11 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்காக 10 ஆட்டங்களில் தொடர்ந்து 25 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும் இந்த ஐ.பி.எல்.-ல் சூர்யகுமாரின் ரன் எண்ணிக்கை 467-ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத்தின் சாய் சுதர்சனிடம் (456 ரன்) இருந்து தட்டிப்பறித்தார்.
____________________________________________________________________________________________________________
சாய் சுதர்சனுக்கு பாராட்டு
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 தரவரிசைக்கான போட்டிகள் ஜுன் மாதம் முதல் தொடங்க விருக்கின்றன. இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
ஐ.பி.எல். தொடரில் அற்புதமாக விளையாடிவரும் சாய் சுதர்சனை இந்தத் தொடரில் தேர்வு செய்ய வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இளைஞர் சாய் சுதர்சனை நான் அனைத்து வடிவிலான (டி20, ஒருநாள், டெஸ்ட்) ஆட்டத்துக்கும் ஏற்றவராகப் பார்க்கிறேன். அவர் மிகவும் கிளாஸான வீரராக இருப்பதால் எனது கவனம் அவர் மீதே இருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் கம்பேக் தரலாம். ஆனால், அதுவும் போட்டி நிறைந்ததாக இருக்கும். வெள்ளைப் பந்தில் கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்ற வீரர்களையும் பார்க்க வேண்டும் என்றார்.
____________________________________________________________________________________________________________
சர்ச்சையான அம்பயர் தீர்ப்பு
ஐ.பி.எல். போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 7 ரன்களில் இருக்கும்போது பசல்ஹக் பரூக்கி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. 15 நொடிகள் நேரத்துக்குப் பிறகு ரோஹித் சர்மா டிஆர்எஸ் ரிவிவ் எடுத்ததால் அதை நடுவர் ஏற்றுக்கொண்டு மூன்றாம் நடுவரிடம் சென்றார்.
பிறகு ரோஹித் சர்மாவுக்கு நாட் அவுட் என தீர்ப்பு கிடைத்தது. பிறகு ரோஹித் சர்மா 53 ரன்களை குவித்தார். இது போட்டியில் முக்கியமானதாக மாறியது. இது குறித்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் காலதாமதமானப் பிறகு எப்படி நடுவர் ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே, இந்த சீசனில் ஒருமுறை பந்துவீச்சாளர் (தீபக் சஹார்) விக்கெட் கேட்காதபோதே நடுவர் கையை உயர்த்தியது சர்ச்சையானது. ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது பொதுவாகவே நடுவர்கள் சாதகமாக இருப்பதாகப் பலமுறை குற்றச்சாட்டுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________________________________
ஐ.பி.எல்.: சந்தீப் சர்மா விலகல்
மும்பைக்கு எதிரான போட்டியில் களம்காணாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா தனது விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார். நடப்பு சீசனில் சந்தீப் சர்மா 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த சீசனில் சிறப்பான பந்துவீச்சாக 2 விக்கெட்டுகள் 21 ரன்களை கொடுத்திருந்தார்.
ராஜஸ்தான் அணி இந்த சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியதும் கவனிக்கத்தக்கது. மிகவும் அனுபவமிக்க சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளரான இவருக்கு மாற்றாக யாரைத் தேர்ந்தெடுப்பார்கள் என இதுவரை ராஜஸ்தான் நிர்வாகம் அறிவிக்கவில்லை.
____________________________________________________________________________________________________________
வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா
ஐ.பி.எல். போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது. இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் மும்பை இந்தியனஸ் அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
இந்த வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது: நாங்கள் மிகவும் தன்னடக்கமாகவும் ஒழுக்கமாகவும் போட்டியில் முழு கவனமாகவும் இருக்க விரும்புகிறேன். நாங்கள் கூடுதலாக 15 ரன்களை பெற்றிருக்கலாம். நானும் சூர்யாவும் பேசிக்கொண்டது என்னெவென்றால் குறைவான ரிஸ்க் உள்ள ஷாட்டுகளை ஆட வேண்டுமென்பதே. ஒவ்வொரு ஷாட்டுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமென நாங்கள் பேசிக்கொண்டோம். ரோஹித் சர்மாவும் ரியான் ரிக்கல்ட்டும் அதேமாதிரிதான் விளையாடினார்கள். இது முற்றிலும் சிறப்பானது. வீரர்கள் மீண்டும் தங்களது பேட்ஸ்மேன்ஷிப்புக்கு (திறமை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆடுவது) திரும்புகிறார்கள். அணியாக நாங்கள் சரியான பேட்மேன்ஷிப்பில் விளையாடுகிறோம் என்றார்.
____________________________________________________________________________________________________________
'செஸ்' குறித்து கபில் தேவ்
செஸ் விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு கிடையாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஸ்கில்ஹப் ஆன்லைன் விளையாட்டுகள் கூட்டமைப்பின் விளம்பர தூதரான கபில் தேவ் செஸ் விளையாட்டு குறித்து பேசியதாவது: செஸ் போன்ற விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு மட்டும் கிடையாது. அவை அறிவாற்றலையும், நினைவாற்றலையும் மேம்படுத்துபவை. இதுபோன்ற விளையாட்டுகள் மன அழுத்தத்தை குறைக்கும் என்றார்.
மற்றொரு விளம்பர தூதரான இரண்டு முறை உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கொனேரு ஹம்பி பேசியதாவது: விளையாட்டுத் துறையில் நாம் பொற்காலத்தை நம் கண் முன்னால் பார்த்து வருகிறோம். உலக செஸ் சாம்பியன் குகேஷ் மற்றும் டாப் 10 வரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் உள்ளனர். இந்தியாவில் செஸ் விளையாட்டின் எதிர்காலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரகாசமாக உள்ளது என்றார்.
____________________________________________________________________________________________________________
சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ், டக் அவுட்டில் வெளியேறினார். 14 வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளின் சதம் விளாசி உலக அளவில் பிரபலமானார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் வைபோவை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:- வைபவ் ஏலத்திற்குள் நுழைந்த போது அவர் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். அதே சமயம் வைபோவை தேவையில்லாமல் ஒரே நாளில் தூக்கி ரொம்ப கொண்டாடக்கூடாது. மேலும் அவர் இளம் வயது என்பதால் தன்னுடைய விளையாட்டை மென்மேலும் அவர் வளர்த்துக் கொள்வார் என்று நினைக்கின்றேன். அதுவும் இல்லாமல் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானுடன் அமர்ந்து இன்னிங்சை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக் கொள்வார். அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 days ago |
-
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
02 May 2025சென்னை : அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார
-
கள்ளழகர் இறங்கும் வைபவம்: பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
02 May 2025மதுரை, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும்போது பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் மண்டபங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
02 May 2025திருவேற்காடு, பூந்தமல்லி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன்
-
ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
02 May 2025வாஷிங்டன், ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷ்யா
02 May 2025மாஸ்கோ, ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
-
நடிகர் சங்க கட்டட திறப்பு விழா: தேதியை அறிவித்தார் விஷால்
02 May 2025சென்னை, நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதியை விஷால் அறிவித்துள்ளார்.
-
கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம்
02 May 2025சென்னை : கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
-
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்
02 May 2025புதுடில்லி : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது.&nbs
-
கேதார்நாத் கோவில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02 May 2025டேராடூன் : கேதார்நாத் கோயிலின் நடை நேற்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: அதிக விசைத்திறன் கொண்ட குழாய்களை பயன்படுத்த வேண்டாம்: கோவில் நிர்வாகம்
02 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது என அழகர் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியு
-
ரேடியோக்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்
02 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ரேடியோக்களில் இந்திய பாடல்களை ஒலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
7 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேச ஆசாமி: போலீஸ் விசாரணையில் சிக்கினார்
02 May 2025திருப்பூர் : பல்லடம் அருகே நிதி நிறுவனத்தால் 7 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அதன் உரிமையாளர் சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் கை
-
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா எச்சரிக்கை
02 May 2025பெய்ஜிங், வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மும்பை அணிக்காக 6,000 ரன்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை
02 May 2025ஜெய்பூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 6,000 ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
சூர்யகுமார் யாதவ் சாதனை
02 May 202518-வது ஐ.பி.எல்.
-
குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த முதியோர் நல்வாழ்வு அவசியம் : ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
02 May 2025புதுடெல்லி : ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் தூண்களாக மூத்த குடிமக்கள் விளங்குவதாகவும், குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த அவர்களின் நல்வாழ்வு அவசியம் என்றும் ஜனாதிபதிதிரவுப
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறை: விருதை பகிர்ந்து கொண்ட மும்பை வீரர்கள்
02 May 2025மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இரு வீரர்கள் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
02 May 2025சென்னை : தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
-
தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
02 May 2025சென்னை, தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளதாக உயர் நீதி மன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
-
போக்சோ புகார்களில் இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 நாட்களில் இடைநீக்கம்
02 May 2025சென்னை : தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக
-
சி.எஸ்.கே. வெளியேற்றம்: பயிற்சியாளர் ஹஸி கருத்து
02 May 2025சென்னை ஐ.பி.எல்.
-
கொலை வழக்கில் குவைத்தில் இந்தியருக்கு தூக்கு
02 May 2025அகமதாபாத், கொலை வழக்கில் இந்தியர் ஒருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
-
அடுத்த மாதம் தேர்தல்: தென்கொரிய அதிபர் ராஜினாமா
02 May 2025சியோல், அடுத்த மாதம் தென்கொரியவில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.