முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சனிக்கிழமை, 3 மே 2025      ஆன்மிகம்
Thirunallar-2025-05-03

Source: provided

புதுச்சேரி : பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகாலை முதலே தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களுக்கு சனீஸ்வர பகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடி, எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து