முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 10 மே 2025      விளையாட்டு
Neeraj-Chopra 2023 08 19

Source: provided

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டி பெங்களூரூவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் தேதி நடக்க இருந்தது.

இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவுவதால் இந்த போட்டி மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. 

__________________________________________________________________________________________________________________

ரிஷப் பண்ட் தடுமாறுவது ஏன்? சஞ்சய் பங்கர் விளக்கம்

 நடப்பு ஐ.பி.எல்.  தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ.27 கோடி என்ற ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பில் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சொதப்பிய பண்ட் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதன் காரணமாக லக்னோ அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் தடுமாறி வருகிறது.  

இந்நிலையில் ரிஷப் பண்ட் தடுமாற்றம் குறித்து  பேசிய இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர்  கூறுகையில், "ரிஷப் பண்ட்  டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த ஐ.பி.எல். சீசனில் பெரும்பாலான போட்டிகளில் அவர் ஸ்டப்புகளுக்கு பின்னே அடிக்க முயற்சித்து அவுட்டானதை கவனித்தேன். ரிஷப் பண்ட் விளையாடிய சிறந்த  போட்டிகளில் எல்லாம் அவர் கவர்  திசையில் அல்லது இறங்கி சென்று நேராக அல்லது மிட் விக்கெட் அல்லது ஸ்கொயர் திசைகளில் அடித்திருப்பார். ஆனால் இப்போது அவர் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை அதிகம் முயற்சிக்கிறார். அந்த வகையில் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை மறந்துள்ள பண்ட் குழப்பத்தில் சிக்கியுள்ளார் என்று நான் கருதுகிறேன்" என கூறினார்.

__________________________________________________________________________________________________________________

ரசிகர்களுக்கு சி.எஸ்.கே.  வீரர் பிரேவிஸ் நன்றி

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.  இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம்  அறிவித்தது. இந்திய வீரர்களில் பலர் உடனடியாக தங்களது வீடுகளுக்கு திரும்பியதாகவும், வெளிநாட்டு வீரர்களும் விமானம் மூலம் தங்களது நாட்டுக்கு புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இந்த நிலையில் ரசிகர்களுக்கு சென்னை வீரர் டெவால்ட் பிரேவிஸ் நன்றி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது, சென்னை அணிக்கும், பயிற்சியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனுபவம் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்தியா முழுவதும் இருந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இங்கு செலவழித்த நாட்கள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. சென்னையில் இருந்த நாட்கள் என் வாழ்நாள் முழுமைக்குமானவை. மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன். என தெரிவித்துள்ளார் . 

__________________________________________________________________________________________________________________

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சபலென்கா முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பொடபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து