முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை வந்தார் அமித்ஷா: பா.ஜ.க. நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      தமிழகம்
Amit-Shah 2023-11-17

Source: provided

மதுரை : டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று பா.ஜ.க. நிர்வாகிகளுடன்  முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற துடிப்போடு தி.மு.க.வும், எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வும் தற்போது இருந்தே தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி செயல்பாடுகள், பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். மேலும் இதர கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்ற பா.ஜ.க. இந்த முறை அ.தி.மு.க.வுடனான தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து நிர்வா கிகளிடம் ஆலோசிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று  டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு மாவட்ட கலெக்டர், கட்சியினர் வரவேற்றனர்.

தொடர்ந்து அவர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகியுள்ளார். இன்று (8-ந் தேதி) காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் 3 மணியளவில் ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.

இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மண்டல நிர்வாகிகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி, தொகுதிகளின் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு, சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் சாதக பாதகங்கள் குறித்து நிர்வாகிகளிடம் அமித்ஷா கலந்துரையாடுகிறார்.

அமித்ஷா வருகையை முன்னிட்டு  விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் செல்லும் சாலை மற்றும் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து