முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சானியா - ஷமி திருமணம்?

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      விளையாட்டு
Sania-Shami 2024-06-21

Source: provided

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்துள்ளார். இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த தகவல் வைரலானது. 

இதுதொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் கூறுகையில், இது முற்றிலும் வதந்தி. இதுவரை முகமது ஷமியை சானியா மிர்சா சந்தித்ததுகூட கிடையாது என தெரிவித்தார். டென்னிசில் இருந்து ஓய்வுபெற்ற சானியா மிர்சா மதிப்புமிக்க பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார் என்பதும், முகமது ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி செல்ல முக்கிய காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________

2-வது டெஸ்ட்டில் ஆர்ச்சர்?

இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது, முதல் டெஸ்ட் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்தின் அதிவேக பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று ஆதாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. 30 வயதாகும் ஆர்ச்சர் முதல் தர கிரிக்கெட் ஆடியே 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக 2-வது போட்டியில் ஆடுவதாக இருந்தார், ஆனால் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இந்திய அணி உடனான தொடருக்கு ஆர்ச்சர்  4 டெஸ்ட் போட்டிகள் ஆடி நிரூபித்து விட்டார் என்றால் இங்கிலாந்தின் கனவுத் தொடரான ஆஷஸ் தொடரிலும் அவர் இருப்பார். இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள் ஆடி 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஆர்ச்சர். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருமுறை 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

____________________________________________________________________________

பிரீத்தி ஜிந்தா உருக்கம்

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.  இந்நிலையில் இந்த சீசனில் 2-வது இடம் பெற்றது குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா தனது எக்ஸ் தளத்தில் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்த சீசன் நாங்கள் விரும்பியபடி முடிவடையவில்லை. ஆனால் இந்த பயணம் அற்புதமாக இருந்தது. இந்த தொடர் உற்சாகமாகவும், பொழுதுபோக்காகவும் ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. 

எங்களது இளம் வீரர்கள் தொடர் முழுவதும் காட்டிய போராட்டம், மனஉறுதி, அவர்களின் தைரியம் என்னை வெகுவாக கவர்ந்தது. இதே போல் எங்களது கேப்டன் முன்னின்று வழிநடத்திய விதம், சர்வதேச போட்டியில் ஆடாத இந்திய வீரர்கள் இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்திய விதம் மிகவும் பிடித்திருந்தது! ஒரு தசாப்தத்திற்குப் பிறகு நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தோம், ஒரு அற்புதமான இறுதிப்போட்டியில் இறுதி வரை போராடினோம். பஞ்சாப் அணியில் ஆடிய ஒவ்வொரு வீரரையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.  அடுத்த சீசனில் இன்னும் வலுவாக மீண்டு வந்து சாதிப்போம் என்று உறுதி அளிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

____________________________________________________________________________

சேவாக் அணியில் ஸ்ரேயாஸ் 

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு பல முன்னாள் வீரர்கள் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சேவாக் தான் தேர்வு செய்த சிறந்த அணியை அறிவித்துள்ளார். இந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்துள்ளார்.

சேவாக் தேர்வு செய்த அணி விவரம்: சாய் சுதர்சன், விராட் கோலி, நிக்கோலஸ் பூரன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஹென்றிச் கிளாசென், ஜோஷ் ஹேசில்வுட், பிரசித் கிருஷ்ணா, நூர் அகமது, ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ். இம்பேக்ட் வீரர்: ஜித்தேஷ் சர்மா

____________________________________________________________________________

நார்வே செஸ்: குகேஷ் 3-வது இடம்

நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடந்தது. இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து குகேஷ் விளையாடினார். சிறு சிறு தவறுகள் காரணமாக, குகேஷ் கருவானாவிடம் வீழ்ந்தார். கடந்த சுற்றில் சிறப்பாக விளையாடிய, குகேஷ் கடைசி சுற்றில் தோல்வி அடைந்தார். 

அதேநேரத்தில், 10வது சுற்றில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால் கார்ல்சன் 7வது முறையாக பட்டம் வென்றுள்ளார். 10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளார். கருவானா 15.5 புள்ளிகளுடனும் (2வது இடம்), குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் (3வது இடம்) உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து