எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில், நேற்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________________
பயிற்சியில் இந்திய அணி
இங்கிலாந்தில் 5 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி லண்டன் சென்றடைந்தது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, கோலி ஓய்வு பெற்றதால் ஷுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கெனவே பல வீரா்கள் இந்திய ஏ அணியில் இடம் பெற்று, 3 அதிகாரபூா்வமற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடி வருகின்றனா். இரண்டாம் டெஸ்ட் ஜூலை 2-6-இல் பா்மிங்ஹாமிலும், ஜூலை 10-14-இல் லாா்ட்ஸிலும், ஜூலை 23-27-இல் மான்செஸ்டரிலும், ஆக. 4-8-இல் ஓவல் திரலிலும் நடைபெறுகின்றன. இந்நிலையில், பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில் பயிற்சி விடியோவை வெளியிட்டுள்ளது.
_______________________________________________________________________________________________________________
பேட்டை தொடாத ஸ்மித்
ஆஸி. முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்டருமான ஸ்டீவ் ஸ்மித் 3 மாதங்களாக பேட்டை தொடவில்லை எனக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கடைசியாக, ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவுடன் விளையாடினார். இதனைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன்.11ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் 55 சராசரி கொண்ட ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: நான் பொதுவாகவே வீட்டுக்கு அருகில் எங்காவது பேட்டை வைத்து ஷேடோ பேட்டிங் பயிற்சி செய்து வருவேன். ஆனால், தற்போது வேண்டுமென்றே பேட்டை சிறிது காலமாக தொடாமல் இருந்தேன். அதுவும் நல்லதுதான். சாம்பியன்ஸ் டிராபியில் ஷமியின் புல் டாஸ் பந்தினை தவறவிட்டதில் இருந்து நான் பேட்டினை தொடவில்லை. பொதுவாக எப்படி இருக்குமெனில் நான் முதல் முறை அடிக்கும்போது நன்றாக விளையாடுவேன், பிறகு மோசமாக, அடுத்து அங்கிருந்து சிறப்பாக ஆடுவேன். ஆனால், இந்தமுறை முதலிரண்டுமே நன்றாக அமைந்தது. அடுத்த சில நாள்களுக்கு பல மணி நேரங்கள் பயிற்சி செய்ய தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
_______________________________________________________________________________________________________________
என் வாழ்க்கையின் சிறந்த பந்துவீசும் காலத்தில் இருக்கிறேன்: ஹேசில்வுட் பந்துவீச்சு குறித்து ஹேசில்வுட்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஹேசில்வுட் (34) இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 279 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல். கோப்பை வென்றதில் இவரது பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸி. அணி முன்னேறியுள்ள நிலையில் ஹேசில்வுட் அணியில் இணைந்தார். பயிற்சியைத் தொடங்கிய ஹேசில்வுட் பேட்டியில் கூறியதாவது: 2023-இல் இருந்தது போலவே நன்றாக இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் என்னுடைய விக்கெட்டுகள் நன்றாகவே இருக்கின்றன.
திறமையின்படி பார்த்தால் நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீசும் காலத்தில் இருக்கிறேன். என்னுடைய உடலை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது. என்னுடைய ஒரே பிரச்னையாக தீவிரத்தன்மை மட்டும் தான் இருந்தது. தினமும் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து வருகிறோம். பந்துவீச்சுப் பயிற்சியிலும் செஷன் வாரியாக செய்து வருகிறோம். முடிந்த அளவுக்கு எங்களை சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள பயிற்சி எடுத்து வருகிறோம் என்றார்.
_______________________________________________________________________________________________________________
கோகோ காப் பட்டம் வென்றார்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், 2ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காபும் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சபலென்கா 7(7)- 6(5) என முதல் செட்டை கைப்பற்றினார். 2ஆவது செட்டில் கோகோ காப் அபாரமாக விளையாடினார். கோகோ காப் ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5-2 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 6-2 என 2ஆவது செட்டை எளிதாக கைப்பற்றினார்.
இதனால் ஆட்டம் 3ஆவது செட்டிற்கு நீடித்தது. சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இந்த செட்டிலும் காப் ஆதிக்கம் செலுத்தினார். கோகோ காப் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 5-3 என முன்னிலைப் பெற்றார். 9ஆவது கேம்-ஐ சபலென்கா கைப்பற்றினார். இதனால் காப் 5-4 என முன்னிலைப் பெற்றிருந்தார். 10ஆவது கேமிற்கான சர்வீஸை காப் தொடங்கினார். இந்த கேம் "ஏஸ்" வரை சென்றாலும் காப் கைப்பற்றினார். இதனால் 2-1 {6(5)-7(7), 6-2, 6-4} என அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
_______________________________________________________________________________________________________________
வேதனை அளிக்கிறது: சபலென்கா
பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கோகோ காப். இந்நிலையில், அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய அரினா சபலென்கா, இந்த தோல்வி வேதனை அளிப்பதாக பேசியுள்ளார். .
“இந்த தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது கேரியரில் மிகவும் மோசமான பைனல் இது. கடந்த இரண்டு வார காலம் முழுவதும் சிறந்த முறையில் டென்னிஸ் விளையாடினேன். இகா ஸ்வியாடெக் போன்ற சிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக கடினமான ஆட்டத்தில் விளையாடி இருந்தேன். இந்த வெற்றிக்கு கோகோ காப் தகுதியானவர். இருந்தாலும், அரையிறுதியில் என்னை இகா ஸ்வியாடெக் வீழ்த்தி இருந்தால் சாம்பியன் பட்டம் வென்று இருப்பார் என நினைக்கிறேன். என்னால் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். நிச்சயம் நான் வலுவாக மீண்டு வருவேன்” என அரினா சபலென்கா தெரிவித்தார்.
ஹொரெசியோ, மார்செல் சாம்பியன்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-ஜோ சாலிஸ்பரி ஜோடி, அர்ஜென்டினாவின் ஹொரெசியோ ஜெபெல்லோஸ்-ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய ஹொரெசியோ-மார்செல் ஜோடி 6-0, 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
_______________________________________________________________________________________________________________
ஷாஹித் அப்ரிடி உயிரிழப்பா..?
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம். இருப்பினும், அது குறித்து உண்மைச் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அது உண்மையல்ல என்று தெரியவந்தது.
வீடியோவில் உள்ள படங்கள் மற்றும் பிற கூறுகள் ஏ.ஐ. ஆல் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது. ஷாஹித் அப்ரிடி உண்மையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும்,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ உண்மைக்குப் புறம்பானது என்றும் உண்மைச் சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.