எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை உங்களில் ஒருவனான நான் மேற்கொண்டு வருகிறேன். இரண்டு நாட்களாக வேலூர் - திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். அந்த விமர்சனங்களில் உண்மை இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம்.
பொதுமக்களுக்கான அரசாகத் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வரும் நிலையில், இப்படியொரு அரசு அமைந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பத்தாண்டுகளாகப் பாடுபட்ட கழகத் தொண்டர்களின் அளப்பரிய உழைப்பே, உங்களில் ஒருவனான நான் முதல்வர் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ஒருபோதும் மறந்ததில்லை. மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது போல. கழகத்தினரின் மனக்குரலை அறிந்துகொள்வதற்காகத்தான் அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் 'ஒரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை உங்களில் ஒருவனான நான் தொடங்கி வைக்கிறேன். தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஜூன் 25 அன்று அண்ணா அறிவாலயத்தில் சிறப்பான முறையில் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.
இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள கழகத்தின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட ஒன்றிய நகர - பகுதி - பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து. ஒரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. கழகத்தின் தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பார்கள். இந்த செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட (நேற்று - ஜூன் 28) மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பு அணிச் செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலிக் கூட்டம் நடைபெற்றது.
ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், கழக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன். தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. பெருமைமிக்க கழகத்தின் உடன்பிறப்பே வா. உன்னால் உருவாகும் ஒரணியில் தமிழ்நாடு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 day ago |
-
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
28 Jun 2025சென்னை : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
28 Jun 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மேட
-
வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம்: 10 மாவட்டங்களில் தொடங்க அரசு முடிவு
28 Jun 2025சென்னை, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.
-
'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் 3 மாவட்ட தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
28 Jun 2025சென்னை : 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் மேட்டுப்பாளையம், அந்தியூர், மொடக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.
-
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 34 பேர் உயிரிழப்பு
28 Jun 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி : புதுச்சேரி முதல்வர் பேட்டி
28 Jun 2025புதுச்சேரி : பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்து உள்ளார்.
-
குற்றால அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு..!
28 Jun 2025தென்காசி, குற்றால அருவியில் திடீரென அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பால் பெண்கள் பயந்து ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவு: வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு
28 Jun 2025சென்னை, எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவை அடுத்து வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
-
விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்க திட்டமா..? மத்திய அரசு விளக்கம்
28 Jun 2025புதுடெல்லி, விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'இனி 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்' மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு
28 Jun 2025புதுடெல்லி : புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம் வழங்க மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
ஓரணியில் தமிழ்நாடு எனும் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம்: ஜூலை 1 முதல் தொடங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
28 Jun 2025சென்னை, ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை: இஸ்ரேல் மீது ஈரான் காட்டம்
28 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேலுக்கு 'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் காட்டமாக தெரிவித்துள்ளது.
-
சிறு, குறு நிறுவனங்களின் புகாருக்கு விரைவில் தீர்வு : ஜனாதிபதி திரெளபதி முர்மு பேச்சு
28 Jun 2025புதுடெல்லி : சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
-
தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு : மாற்றுத்திறனாளி விவரம் சேகரிப்பு
28 Jun 2025சென்னை : அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது.
-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
28 Jun 2025மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
-
இனி கனடாவுடன் வர்த்தக பேச்சு கிடையாது: ட்ரம்ப் திட்டவட்டம்
28 Jun 2025வாஷிங்டன், கனடாவுடன் வர்த்தகம் இனி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
-
ஈரான் உச்ச தலைவர் கமேனியை காப்பாற்றியது நான்தான்: அதிபர் ட்ரம்ப்
28 Jun 2025வாஷிங்டன், ஈரான் உச்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருநது காப்பாற்றினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
-
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: வரும் 1-ம் தேதி யாகசாலை பூஜை
28 Jun 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கிய நிலையில், வரும் 1-ம்தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது.
-
அந்தமானில் நிலநடுக்கம்
28 Jun 2025புதுடெல்லி : அந்தமானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
-
தற்கொலைப்படை தாக்குதல்: 16 பாக். ராணுவ வீரர்கள் பலி
28 Jun 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-06-2025.
28 Jun 2025 -
தொடர்ந்து சரியும் தங்கம் விலை
28 Jun 2025சென்னை : தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1, 400 குறைந்துள்ளது.
-
புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்
28 Jun 2025புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்தலுக்கு இன்று காலை 10 முதல் 12 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் நடைபெற இருக்கிறது.
-
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
28 Jun 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாட்டு செய்யப்பட்டுவரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்
-
பாகிஸ்தானியர்கள் 40 பேர் தமிழகத்தில் தங்கியுள்ளனர் : மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
28 Jun 2025மதுரை : தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.