எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 29 - மகன் ஹரியை மீட்டுத்தரக்கோரி நடிகை வனிதா கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார். பின்னர் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அறிவித்தார் . போலீசார் அவரை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது குறித்த விபரம் வருமாறு:
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பது தொடர்பாக அவருக்கும், அவரது முதல் கணவர் ஆகாசுக்கும் இடையே nullண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது. விஜய் ஸ்ரீஹரியை வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் விஜய் ஸ்ரீஹரி, வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். தற்போது விருகம்பாக்கத்தில் ஆகாசுடன் வசித்து வருகிறான்.ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த பல மாதங்களாக வனிதா போராடி வருகிறார்.
இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றில் வனிதா புகார் செய்துள்ளார். விஜய் ஸ்ரீஹரி தன்னுடன் வராதது குறித்து வனிதா கூறும்போது, அவனை மிரட்டி வைத்துள்ளனர். என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குகிறான் என்று குற்றம் சாட்டினார். தனது தந்தை விஜயகுமார் மீதும், ஆகாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக அடங்கிப் போய் இருந்த வனிதா விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வனிதா புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கோர்ட்டு உத்தரவின் பேரில் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கர் ஆலோசனையின் பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஜெபகர்சாலி நேற்று மாலை வனிதாவிடம் விசாரணை நடத்தினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள ஆகாசின் வீட்டுக்கு பெண் போலீசார் வனிதாவுடன் சென்றனர். அங்கிருந்த விஜய் ஸ்ரீஹரி, வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். இதனால் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர். வனிதாவும் வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வனிதா திடீரென வந்தார். எனது மகனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கூறிய அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். இதையடுத்து போலீசார் மீண்டும் ஆகாசின் வீட்டுக்கு வனிதாவை அழைத்துச் சென்றனர். அப்போதும் விஜய் ஸ்ரீஹரி அவருடன் செல்ல மறுத்து விட்டான். இதுதொடர்பாக வனிதா கூறியதாவது:-
வாரத்தில் 3 நாட்கள் (வெள்ளி, சனி, திங்கள்) விஜய் ஸ்ரீஹரி என்னுடன் இருக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை நான் ஓயமாட்டேன். ஆகாசிடமிருந்து அவனை மீட்காமல் விடமாட்டேன். நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நேற்று வனிதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் உங்களை சோதனை செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிப்போம் என்று கூறினர். இதற்கு வனிதா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர் மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கரை சந்தித்து பேசினார். அப்போது நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அவர் விளக்கி கூறினார்.
பின்னர் மதியம் 12.45 மணி அளவில் வெளியே வந்த அவர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மகன் ஸ்ரீஹரியை கூடிய விரைவில் என்னிடம் மீட்டு ஒப்படைக்க வேண்டும். கடந்த 7 மாதமாக குழந்தையை மீட்க போராடுகிறேன். விருகம்பாக்கம் போலீசார் குடிவிட்டு வந்து கலாட்ட செய்வதாக பொய்யான புகார் தெரிவித்துள்ளனர். இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்தஒரு தாய்கும் தீங்கு ஏற்படாது. என் மகன் எனக்கு கிடைக்காவிட்டால் துளிகூட தண்ணீர் குடிக்காமல் உண்ணாவிரதம் இருப்பேன் என்று வனிதா விஜயகுமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: தமிழகத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
26 Dec 2025சென்னை, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.1,045 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு
-
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கி
-
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2025.
26 Dec 2025 -
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்
26 Dec 2025புதுடெல்லி, பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகள்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, ரூ.10 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை
26 Dec 2025ஒட்டாவா, கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து
26 Dec 2025புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர்
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு
26 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ.
-
அ.தி.மு.க.வில் விருப்பமனு பெற அவகாசம் டிச. 31-வரை நீட்டிப்பு
26 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
26 Dec 2025திண்டுக்கல், விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மதவெறி ஆட்டத்துக்கு இடமில்லை: கள்ளக்குறிச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது.
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
தமிழகத்தில் ஜனவரி 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.
-
தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2025சென்னை, தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
அதிபர் ட்ரம்ப்பை விரைவில் சந்திப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
26 Dec 2025கீவ், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம்.
-
குஜராத்தில் நிலநடுக்கம்
26 Dec 2025காந்தி நகர், குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் வெள்ளிக்கிழமை(டிச.26) அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம


