எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.- 13 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ வலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக தொலைத் தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் அவரது செயலாளர்கள் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த்த பெகுரா உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறகு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ராசா அடைக்கப்பட்டுள்ள அதே திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பல நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் ஆ. ராசா, கடந்த பிப்ரவரி 2 ம் தேதி சி.பி.ஐ. ஆல் கைது செய்யப்பட்டார். கருணாநிதி மகள் கனிமொழி கடந்த மே 13 ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை நேரடியாக கண்காணிப்பதால் சி.பி.ஐ. தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ. வலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிபர்கள் ஆவர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முதல் முதலில் கடந்த ஏப்ரல் 2 ம் தேதி முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை ஏப்ரல் 25 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையில்தான் கனிமொழி ஒரு கூட்டு சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தற்போது 2 வது கூடுதல் குற்றப்பத்திரிக்கை அதாவது கணக்குப்படி 3 வது குற்றப்பத்திரிக்கை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதை தாக்கல் செய்வதற்கு சி.பி.ஐ. மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சில முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்த குற்றப்பத்திரிக்கையில் குறைந்த பட்சம் இரண்டு முக்கிய புள்ளிகள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து விட்டதாகவும், அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடந்து வருவதாகவும் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் அவர்களது பெயர் என்ன? அவர்கள் யார்? என்ற விபரத்தை கூற அவர் மறுத்து விட்டார்.
அடுத்து தாக்கல் செய்யப்படவிருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் மேலும் பல தனியார் நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்படும் என்றும் தெரிகிறது. 2001 ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. தற்போது விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரிலேயே சி.பி.ஐ. இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவை சேர்ந்த கூட்டுக் குழு ஒன்று கடந்த மாதம் மொரீசியஸ் சென்று விசாரணை நடத்தியது. தற்போது விசாரணைக் குழு லண்டன் சென்று விசாரணை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்


