எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.16 - தமிழகத்தில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலபாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு பள்ளிகளை நடத்துவோமா வேண்டாமா என்ற சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.
தமிழக அரசின் சமச்சீர்கல்விக்கு பெயரளவில் நாங்கள் எதிரானவர்கள் அல்ல, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இருக்ககூடிய கல்வியின் தரத்தை குறைக்க கூடாது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். இந்த கல்வி கொள்கையில் சரியான தரம் இல்லை. மற்ற மாநிலங்களை போல நமது கல்வி கொள்கை சிறந்ததாக அமைய வேண்டும். கல்வியின் தரம் தொலை நோக்கு பார்வை கொண்டதாக அமைய வேண்டும். தற்பொழுது உள்ள கல்வி திட்டம் போதுமான தரமானதாக இல்லை. நமது கல்வி திட்டம் தேசிய அளவில் முதன்மையானதாகவும், உலக அளவில் சிறந்ததாகவும் அமைய வேண்டும்.
தமிழக வரலாற்றில் புத்தகங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு சென்ற அரசு கொண்டு வந்த கல்விக் கொள்கைதான் காரணம்.
தனியார் பள்ளிகள் சிறந்த ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுத்து வருகிறோம். ஆனால், சென்ற தமிழக அரசு தவறான கல்வி கட்டண கொள்கையினை அமல்படுத்தி எங்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கிவிட்டது. அதனால், அரசின் இக்கொள்கையினை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றோம். சென்னை உயர்நீதி மன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. ஆனால், சென்ற அரசு உடனே இடைக்காலத்தடை பெற்றுவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆணையின் படி நீதிஅரசர் ரவிராஜபாண்டியன் ஏப்ரல் 30, 2011-க்குள் அல்லது விரைவில் கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், நேற்று 14-ம் தேதிதான் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. நீதி அரசர் கோவிந்தராஜன் கொடுத்த கல்வி கட்டணத்தை விட பெரும்பாலன பள்ளிகளுக்கு கட்டணத்தை குறைத்துள்ளார்கள். 9 முதல் 12-ம் வகுப்பு வரை மிகவும் கட்டணம் மோசமான நிலையில் உள்ளது. பொதுவாக இந்த கட்டணத்தை வைத்து பள்ளிகள் நடத்தமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஆசிரியர்கட்கு போதுமான சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கொடுக்கக்கூடிய இன்கிரிமெண்ட் கொடுக்க முடியவில்லை. விலைவாசி ஏற்றம், லோன் பெற்ற பள்ளிகட்கு அதில் செலுத்தப்படும் வட்டி, நல்ல உள் கட்டமைப்பு வசதி போன்றவற்றை கணக்கில் கொள்ளப்படவில்லை.
எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு இதில் நியாயமான கல்வி கட்டண கொள்கையை உருவாக்கவேண்டும். தேர்தலின் பொழுது ஜெயலலிதா முத்தரப்பு கமிட்டி அமைப்பதாக கூறினார். இந்த முத்தரப்பு கமிட்டியை அமைத்து நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் தரமான கல்வி சி.பி.எஸ்.இ-க்கு இணையானதாகவும், உலகிலேயே தமிழ்நாட்டில் உள்ள கல்வி மிகவும் சிறந்தவையாகவும், அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்வியாளர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கல்வி கட்டணத்திலும் தலையிட்டு நியாயமான தீர்ப்பினை எங்களுக்கு வழங்குமாறு அன்புடன் அனைத்து பள்ளிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு வெங்கடாசலபாண்டியன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பி.வி.சிந்துவுக்கு பொறுப்பு
25 Dec 2025உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.


