எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.29 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாடி2 அண்ணா சாலை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தையும், எளிதில் எடுத்துச் செல்லத்தக்க சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையையும் நேற்று தொடங்கி வைத்தார்.
கையடக்கமான மின்னணு இரசீது வழங்கும் கருவி வழங்கும் திட்டம் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இக்கருவியின் மூலம் தொடர்ச்சியாக
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளையும், திருட்டு வாகனங்களையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இந்த கையடக்க மின்னணு கருவியில் வாகன எண்ணை பதிவு செய்து மீறப்பட்ட போக்குவரத்து விதி, விதியை மீறிய இடம், அபராதத் தொகை, நேரம் மற்றும் தேதி ஆகிய அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இக்கருவியிலேயே வாகன ஓட்டிகளின் கையொப்பம் பெற்றபின் வெளிவரும் ரசீதைக் கொடுத்து அபராதத் தொகை வசூலிக்கப்படும்.
அடுத்த கட்டமாக கிரிடிட் கார்டு மூலம் அபராதம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். இந்த கையடக்க மின்னணு கருவி சென்னை நகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்படும். இந்த கருவியிலுள்ள தகவல்கள் அனைத்தும் சென்னை எழும்nullரில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை சர்வரில் பதிவு செய்யப்பட்டு கணினி திரைகள் மூலம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருவார்கள். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இக்கருவி மூலம் உடனடி அபராதம் விதிக்கப்படும்.
எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் 20 எண்ணிக்கையில் 26 லட்சம் ரூபாய் செலவில் காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் அமைக்கப்படாத இடங்களில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் பயன்படுத்தப்படும். இந்த சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி, மின்சாரம் இல்லாத பகுதிகளிலும், பாதுகாப்பு பணியின்போதும், அதிக வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களிலும் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த மின்னணு இரசீது வழங்கும் முறை திட்டத்தை தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மடிக்கணினி மூலம் தொடங்கி வைத்து, 10 போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் கருவிகளை வழங்கினார்.
இந்த எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகளை உபயோகப்படுத்துவதால் மின்சார இணைப்பு மற்றும் சாலையில் பள்ளம் தோண்டுவது தவிர்க்கப்படும். மேலும், சூரிய ஒளி இல்லை என்றாலும் மின்சாரம் மூலம் இதை பயன்படுத்தலாம்.
சூரிய சக்தியால் இயங்கும் எளிதில் எடுத்துச் செல்லத்தக்க இந்த போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த இரு திட்டங்களைத் தொடங்கி வைத்த பின், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஈ2 காவல் நிலையத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் பின்வரும் குறிப்பினை எழுதினார்.
“I am happy to launch the Electronic Challan System and the portable Traffic Signal System for the Chennai City Police today.
Technology plays an important role in administration. This technology driven initiative of the Chennai City Police will go a long way towards better enforcement of traffic rules. The utility of these systems depends on the persons who handle them. The Police, as Law Enforcement Agents, should always strive to fulfil the aspirations of the people by serving them effectively. The Police are the visual symbols of authority.
Therefore, your priority should be maintenance of Law and Order with a humane approach to the people whom you serve.”
பின்னர், அரியானாவில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை தடகளப் போட்டியில் 10,000 மீட்டர் மற்றும் 5,000 மீட்டர் போட்டிகளில் தங்கம் வென்ற எப்2, எழும்nullர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ரகுநாத்துக்கு ரூபாய் 1 இலட்சம் ரொக்கப் பரிசும், போல் வால்ட் போட்டியில் வெள்ளி வென்ற சென்னை புற நகர ஆயுதப் படை பெண் காவலர் டி. தமிழரசிக்கு ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப் பரிசும், 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் வெண்கலம் வென்ற திருச்சிதமிழ்நாடு சிறப்பு காவல் 1-வது அணி காவலர் ஆர். வீரமணிக்கு ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப் பரிசும், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் போட்டிகளில் வெண்கலம் வென்ற சென்னை கமாண்டோ படை பெண் காவலர் பாப்பாத்திக்கு ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப் பரிசும், போல் வால்ட் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சிதமிழ்நாடு சிறப்பு காவல் 1வது அணி முதுநிலை காவலர் எம். முகேஷுக்கு ரூபாய் 20 ஆயிரம் ரொக்கப் பரிசும், உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற சென்னை ஆயுதப்படை பெண்
காவலர் கிருஷ்ணரேகாவுக்கு ரூபாய் 20 ஆயிரம் ரொக்கப் பரிசும், மொத்தம் ரூபாய் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசினை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். வடசென்னை மாவட்ட செயலாளர் பாலகங்கா, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ வளர்மதி உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காவல் துறை உயரதிகாரிகள் டிஜிபி ராமானுஜம், கமிஷனர் திரிபாதி, கூடுதல் ஆணையர் தாமரைகண்ணன், இணை ஆணையர்கள் செந்தாமரை கண்ணன், சங்கர், சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெறும் அண்ணா சாலையில் பொதுமக்கள் இடையூறு ஏற்படா வண்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது. எளிய முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுயர பேனர்கள் எதுவும் இல்லை.
முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வர்ணணை செய்த பெண் காவலரின் வர்ணனை சிறப்பாக இருப்பதை கவனித்த முதல்வர் போகும்போது ஓரமாக நின்றிருந்த பெண் காவலர் கோமதியை அழைத்து நன்றி கூறிவிட்டு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் திரிபாதி மின்னணு எந்திரம் எழும்பூரிலுள்ள கட்டுபாட்டு அறையுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து தவறு செய்வது பதிவாகிவிடும். இதன் மூலம் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-07-2025.
31 Jul 2025 -
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது
31 Jul 2025திருநெல்வேலி: கொலையான கவின் செல்வகணேஷ், கொலை செய்ததாக சரணடைந்த சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணனை போலீசார் கைது செய்தனர்.
-
உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியீடு
31 Jul 2025நெல்லை, என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என்று சுர்ஜித்தின் சகோதரி தெரிவித்துள்ளார்.
-
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
31 Jul 2025சென்னை, தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கோவையில் ஆக.5-ல் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
31 Jul 2025சென்னை, காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: பிரியங்கா தலைமையில் போராட்டம்
31 Jul 2025புதுடெல்லி, கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரத்தில், பிரியங்கா காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார்.
-
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ்...!
31 Jul 2025சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
பாக்.கிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் சூழல் வரலாம்: ட்ரம்ப்
31 Jul 2025வாஷிங்டன், ஒருநாள் இந்தியாவுக்குக்கூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்வார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார் இ.பி.எஸ்.
31 Jul 2025ராமநாதபுரம், ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அ.தி.மு.க.
-
இந்திய பொருளாதாரத்தை பா.ஜ.க. அழித்து விட்டது: ராகுல் குற்றச்சாட்டு
31 Jul 2025புதுடெல்லி, அதானிக்கு உதவுவதற்காக பா.ஜ.க. அரசு இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
யு-19: சூரியவன்ஷிக்கு வாய்ப்பு
31 Jul 2025ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
-
உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வரை நேரில் சந்தித்தேன் தே.மு.தி.க. பிரேமலதா பேட்டி
31 Jul 2025சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
-
இந்தியாவும் - ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்கள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
31 Jul 2025புதுடில்லி: இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
-
ஆணவ கொலைகளுக்கு சாதி பெருமைதான் காரணம்: திருமாவளவன் பேட்டி
31 Jul 2025சென்னை, சாதிப் பெருமைதான் ஆணவக் கொலைகளுக்கு காரணம் என்று திருமாவளவன் கூறினார்.
-
ஒரே நாளில் 2-வது முறையாக முதல்வருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு
31 Jul 2025சென்னை, காலையில் பூங்காவில் நடைபயிற்சியின்போது சந்தித்த நிலையில், மீண்டும் முதல்வரை ஓ.
-
கீவ் நகரம் மீது ரஷ்யா தாக்குதல்: 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் பலி
31 Jul 2025உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவில் கனமழைக்கு 44 பேர் பலி
31 Jul 2025பீஜிங்: சீனாவில் தொடரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் 44 பேர் பலியானதாகவும் 9 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மக்களவையில் தீர்மானம்
31 Jul 2025புதுடெல்லி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
2-வது நீண்டகால இந்திய பிரதமர்: மோடிக்கு அமீரக அதிபர் வாழ்த்து
31 Jul 2025அபுதாபி: இந்திய பிரதமர் மோடிக்கு அமீரக அதிபர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
-
மாலேகான் குண்டுவெடிப்பு: பிரக்யா சிங் உள்பட 7 பேரும் விடுதலை
31 Jul 2025மும்பை, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.
-
தொடர்ந்து முடங்கும் பாராளுமன்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
31 Jul 2025புதுடெல்லி: அமெரிக்க வரி விதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பட
-
இரண்டு அடுக்கு டெஸ்ட்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
31 Jul 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும்.
-
கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை
31 Jul 2025புதுடெல்லி: கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த திட்டம்: நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
31 Jul 2025சென்னை: “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களை நாளை (ஆகஸ்ட் 2-ம் தேதி) முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
இந்திய நலன்களில் சமரசம் இல்லை: அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
31 Jul 2025புதுடில்லி, இந்திய நலன்களில் சமரசம் இல்லை என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.