எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.19 - இந்தியாவுடன் இரண்டாவது கட்டமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் உயர்மட்டக்குழுவுடன் நேற்று இரவு புதுடெல்லி வந்தார். மாறிவரும் உலக சூழ்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு கட்டாய தேவையாக மாறி வருகிறது. ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து நட்புறவு இருந்து வருகிறது. அதேசமயத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்பில் தொய்வு ஏற்பட்டது. இந்த தொய்வு காலம் மாற மாற குறைந்து மீண்டும் நட்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலப்பட்டு வருகிறது. மேலும் இருநாடுகளும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் தீவிரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டியுள்ளது. அதேசமயத்தில் இந்தியாவில் மின்சார தேவை அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க மரபு சாரா வழிமுறைகளை இந்தியா கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது. மேலும் இரு நாடுகளும் ஜனநாயக நாடுகளாக இருப்பதால் இதர உலக நாடுகளில் ஜனநாயகத்தை காப்பாற்ற காவலாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்ட இரு நாடுகளும் வர்த்தகம், பொருளாதாரம், விஞ்ஞானம் ஆகிய துறைகளையும் தாண்டி இதர துறைகளிலும் ஒத்துழைத்து செயல்பட வேண்டியுள்ளது. இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்தியாவுக்கு நேற்று இரவு வந்தார். அவருடன் உயர்மட்டக்குழுவினரும் வந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், அதிபர் ஒபாமாவின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஜான் ஹோல்ட்ரன், அமெரிக்க எரிசக்தி துறை துணை செயலாளர் டேனியல் போனிமேன், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை துணை செயலாளர் ஜனி லுதே மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களும் அதிகாரிகளும் ஹில்லாரியுடன் வந்துள்ளனர்.
இன்று காலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை கிளிண்டன் சந்தித்து பேசுகிறார். அதனையடுத்து அமெரிக்க உயர்மட்ட குழுவானது ஹில்லாரி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்திய தரப்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் உயர்மட்டக்குழு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறது. இந்திய தரப்பில் எஸ்.எம். கிருஷ்ணா, திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா, பிரதமரின் ஆலோசகர் டாக்டர் சம் பித்ரோடா,வெளியுறவு செயலாளர் நிரூபாமா ராவ், வெளியுறவு செயலாளர் பொறுப்பை ஏற்கவிருக்கும் ரஞ்சன் மதாய், வர்த்தகத்துறை செயலாளர்,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், கல்வித்துறை செயலாளர், சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், புலனாய்வுத்துறை இயக்குனர், மத்திய அரசின் இணை செயலாளர் ஜவெத் உள்பட உயரதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம், தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவது, கடந்த 13-ம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் எல்லைப்பகுதி விவகாரம், சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் இருந்து சலுகை பெறுவது ஆகியவைகள் இடம் பெறும் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஹில்லாரியும் எஸ்.எம். கிருஷ்ணாவும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்களையும் சந்தித்து பேசுகிறார். அதனையடுத்து நாளை மறுநாள் சென்னை வருகிறார். சென்னையில் பல்வேறு இடங்களுக்கு ஹில்லாரி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
கணவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்: ‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
09 Jul 2025சென்னை : கணவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை அடுத்து 1980-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.