எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஜூலை.20 - மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மதுரை திமுக நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான ஆவணங்களை அள்ளிச்சென்றனர். தமிழகம் முழுவதும் கடந்த திமுக ஆட்சியில் நில மோசடி, ரவுடியிசம், கொள்ளை, கொலை என பல்வேறு சம்பவங்கள் தினந்தோறும் நடந்தன. இதில் குறிப்பாக அப்போதைய ஆளும் கட்சியான திமுகவினரே அதிகமாக ஈடுபட்டு வந்தனர். அதிலும் நில மோசடியில் திமுகவின் மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமே அதிகமாக ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அப்போது போலீசாரிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலத்தை திமுகவினரிடம் இருந்து மீட்டுத்தருவேன் என்று உறுதி அளித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள நில மோசடி புகார்களை விசாரிக்க தனப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். இந்த தனிப்பிரிவு தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்ளிடம் புகார்களை வாங்கி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த வருகிறது. இதில் முதற்கட்டமாக மதுரை திமுக பிரமுகரும், முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவருமான அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் திமுக பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ராமலிங்கத்தின் தம்பி ஆர்.எஸ்.கணேசன் ஜெய்கிந்துபுரத்தில் 20 சென்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் தயாரித்து அபகரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதும் நில மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்த சிவனாண்டி அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை புறநகர் மாவட்ட குற்றப்பிரிவு நில அபகரிப்பு தனிப்படையிடம் ஒரு புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்துஅதில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி.சந்திரசேகரன், திருப்பரங்குன்றம் முன்னாள் திமுக நகர செயலாளர் கிருஷ்ண பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரின் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களாகவும், மதுரையில் மு.க.அழகிரியின் நிழலாக செயல்பட்டு வந்த தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், மற்றொரு தலைமை செயற்குழு உறுப்பினர் வில்லாபுரத்தை சேர்ந்த எஸ்.ஆர்.கோபி ஆகியோர் வீடுகளில் நேற்று மதியம் முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 1.30 மணி அளவில் மதுரை ஆயுதப்படை டிஎஸ்பி கோவிந்தராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் வில்லாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.கோபி வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பெண்கள் போலீசாரை சோதனை நடத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் பிறகு எஸ்.ஆர்.கோபியின் தம்பியும், அவனியாபுரம் நகராட்சி தலைவருமான போஸ் முத்தையா வந்த பிறகு போலீசார் சோதனை நடத்தினர். இதே போல் எஸ்.ஆர்.கோபியின் தோட்டத்தில் உள்ள பங்களாவிலும் மதுரை திருப்பரங்குன்றம் டிஎஸ்பி முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வீக பாண்டியன், வேல்முருகன் ஆகியோர் சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது வில்லாபுரத்தில் உள்ள எஸ்.ஆர் கோபி வீட்டில் 6 ஆவணங்களும், தோட்டத்தில் உள்ள பங்களாவில் 7 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
சோதனையின் போது எஸ்.ஆர். கோபி, பொட்டு சுரேஷ் ஆகியோர் வீடுகளில் இடம், வீடுகள் ஆக்கிரமிப்பு, சொத்துக்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி அள்ளிச்சென்றனர். ஏற்கனவே இட மோசடியில் கைதாகி இருக்கும் பொட்டு சுரேஷ் மீது இந்த ஆவணங்கள் மூலம் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதே போல் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். கோபி மீதும் கைப்பற்றப்பட்ட ஏஆவணங்கள் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025