எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,ஆக.19 - முந்திய தி.மு.க.அரசின் நிர்வாக திறமையின்மையால் தமிழகத்துக்கு மின்சாரம் வாங்கியதில் மாதம் ரூ.150 கோடி அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக மின் பகிர்மான கழகம் ரூ.7200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார. அப்போது பேசியதாவது:
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1 யூனிட் மின்சாரம் ரூ.6.035 என்ற விலைக்கு 1,000 மெகாவாட் வாங்கப்பட்டது. ஆனால். ஜெயலலிதா ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.3.85க்கு வாங்கப்பட்டது. இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.150 கோடி தி.மு.க. ஆட்சியில் அதிகமாக செலவு செய்யப்பட்டது. இதன் விளைவாக முந்தைய அரசு கடந்த 4 ஆண்டுகளில் சரியாக கவனம் செலுத்தாமல் அதிக விலைக்கு முன் கொள்முதல் செய்த காரணத்தால் ரூ.7,200 கோடி மின் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா இதில் முழு கவனத்தையும் செலுத்தி கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.225 கோடி சிக்கனப்படுத்தியுள்ளார். தற்போது வாங்கப்பட்டு வரும் மின்சாரம் ரூ.3.85லிருந்து அதிகபட்சமாக ரூ.4.50க்கு வாங்கினாலும் கூட தமிழகத்திற்கு மின்சார செலவினம் மிச்சம் தான். அதிகபட்சமாக ரூ.4.50 வீதம் 500 மெகாவாட் வாங்கினால் மாதம் ஒன்றுக்கு ஆகும் தொகை ரூ.54 கோடியாகும். இதன்படி முந்தைய அரசு கணக்குப்படி 48 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 54 கோடி வீதம் 2,592 கோடி ஆகிறது. இது 500 மெகாவாட்டுக்கானதாகும். இதுவே அவர்கள் வாங்கிய 1,000 மெகாவாட்டுக்கு ரூ.5,184 கோடி அதிகம் செலவாகியிருக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க கடன் வாங்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த நிலையை சமாளிக்க வேண்டிய அவல நிலையையும் கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டார்கள். மேலும் கடன் வாங்கித்தான் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த செலவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஊதாரித்தனமாக நடந்துகொண்டதாலும், பொறுப்பற்ற நிலையில் நிர்வாகம் செய்தததாலும் ஏற்படுத்தப்பட்ட நஷ்டமாகும். அவர்கள் நிர்வாகத்திறமையோடு நடந்திருப்பார்களேயானால் இந்த 5,200 கோடி நஷ்டத்தை குறைத்திருக்க முடியும்.
எனவே, முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த குறைபாடுகள் போக்கப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் தமிழகம் ஒளிமயமாக மாறும்.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த விளக்கமும் வருமாறு:
கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்):
தி.மு.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.33,000 கோடி கடன் சுமை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறீர்கள். ரூ.3.85க்கு வாங்க வேண்டிய மின்சாரம் ரூ.6.35க்கு வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. யூனிட்டுக்கு இது ஏறக்குறைய இரண்டரை ரூபாய் அதிகம். மத்திய அரசின் வாயிலாக தான் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படியானால் இந்த கடன்சுமைக்கு மத்திய அரசு துணை போயுள்ளதா? இதில் எங்கே தவறு நடந்தது? எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமா?
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மின்சாரம் கொள்முதல் மத்திய அரசின் மூலம் இல்லை. நிலக்கரி மட்டும் தான் மத்திய அரசு தருகிறது. மின்கொள்முதல் தனியார் மூலம் தான் கொள்முதல் செய்யப்படுகிறது.
கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்): தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா? தென்தமிழ் நாட்டின் மிக முக்கியமான கைத்தொழிலாக தீப்பட்டி உற்பத்தி தொழில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலை இயந்திரமயமாக்குவதை தடை செய்யப்படுமா?
அமைச்சர் சண்முகவேலு:தீப்பெட்டி தொழிற்சாலைகளை கிளஸ்டர் அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
குணசேகரன்(சி.பி.ஐ.): மின்சாரம் விலைகொடுத்து வாங்கியதில் 7 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. நிலக்கரி வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா?
கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கக்கூடிய நிலையில் ஒருசிலர் மக்களை அச்சப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை போக்கவும், இத்திட்டத்தை காலத்தே துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
நத்தம் விஸ்வநாதன்(மின்துறை அமைச்சர்): நிலக்கரியை பொறுத்தவரை மத்திய அரசு தான் கொள்முதல் செய்கிறது. எனவே, மத்திய அரசு மீது விசாரணை கமிஷன் போட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தில் ஊழல் நடந்துள்ளது என்பது மட்டும் உண்மை.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
பெங்களூரு சாலைகளில் பள்ளங்கள்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து
20 Sep 2025பெங்களூரு, பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை யாரும் உருவாக்குவதில்லை, இயற்கை காரணங்களாலும
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் சீரமைப்பு ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
20 Sep 2025திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
வார ராசிபலன்
20 Sep 2025