எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஆக.- 29 - அன்னா ஹசாரே நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார் என்று இந்தி நடிகர் அமீர்கான் பேசியுள்ளார். டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் அன்னாஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் அன்னா ஹசாரேவை சந்திப்பதற்காக பிரபல இந்தி நடிகர் அமீர்கான் ராம்லீலா மைதானத்துக்கு வந்தார். அவருடன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹீரானி மற்றும் பின்னணி பாடகர் சோனு நிகாம் ஆகியோரும் வந்திருந்தனர். நேற்றுமுன்தினம் மதியம் சுமார் 4 மணிக்கு அமீர்கான் மேடையில் காட்சியளித்தார். அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் மேடையை நோக்கி திரளாக வர ஆரம்பித்தனர். ஆனால் பாதுகாப்பு காரணமாக தடுப்புகள் வைக்கப்பட்டதால் மக்களால் மேடைக்கு அருகில் செல்லமுடியவில்லை. ராம்லீலா மைதானத்தில் வெயிலாக இருந்தது. அங்கு எழுச்சியுடன் கூடியிருந்த மக்கள் முன்பு சுமார் 20 நிமிடம் அமீர்கான் உரைநிகழ்த்தினார். அப்போது அவருக்கு வியர்ந்து கொட்டியது. ராம்லீலா மைதானத்தில் அமீர்கான் பேசியதாவது; அன்னா ஹசாரே நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாம் அனைவரும் அவருடன் இணைந்துளோம். லோக்பால் மசோதாவின் அனைத்து ஷரத்துகளையும் நான் பார்த்தேன். ஜன லோக்பால் மசோதாவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த மசோதாவை பாராளுமன்றம் நிறைவேற்றும் என்று தெளிவாக தெரிகிறது. ஒரு கடுமையான லோக்பால் சட்டத்தை அவர்கள் கொண்டு வரவேண்டும். தேர்தல்கள் மற்றும் நமது வாக்குகளின் முக்கியத்துவத்தை இன்று நாம் உணர்ந்துள்ளோம். பெரும்பாலான மக்கள் வாக்களிக்கசெல்வதில்லை. ஜன லோக்பால் மசோதாவை ஆதரிக்கும்படி எங்களது எம்.பி.பிரியாதத் இடம் நான் கேட்டுக்கொள்வேன். இதே போல் நீங்கள் அனைவரும் உங்கள் எம்.பி.க்களிடம் இந்த மசோதாவை ஆதரிக்கும் படி கூறவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.