எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குழந்தைகளுக்கு தாய்பால் தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்து சொல்வதுண்டு. இது தங்கள் அழகை கெடுத்துவிடும் என நினைத்து பல பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு பால் தர மறுக்கின்றனர்.
தாய்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன என்று குழந்தை பெற்ற எல்லா பெண்களுக்கும் தெரிந்து வைத்துள்ளனரா? என்றால் ஒரு சிலர் இல்லை என்றே சொல்லுவர். தாய்பால் குழந்தைக்குத் தேவையான சத்துக்களை எப்படி ஈடு செய்கிறது? ஒரு குழந்தைக்கு தாய்பால் பற்றாக்குறைகூட ஏற்படுமா? என்கிற கேள்விகளுக்கு சென்னை இசபெல்லா மருத்துவமனையில் பணிபுரியும் நியோ நேட்டால ஜிஸ்ட் மருத்துவர் சுப்பிரமணியன் இவ்வாறு பதில் அளிக்கிறார்.
தாய்பாலில் மட்டும் தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும் பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது. அது போலத்தான் பசும்பாலில் கேசின் வே (caesin-whey) புரோட்டீன் தான் இருக்கிறது.
பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ 'வே' (whey) புரோட்டீன். இந்த 'வே' (whey) புரோட்டீன் தாய்பாலில் மட்டும்தான் உள்ளது. இந்த புரோட்டீன் தான் பச்சிளம் குழந்தைகளுக்கு பொருத்தமான வகை புரோட்டீன். பசும்பாலில் இப்படி பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் மெத்தென்ற குடலில் அலர்ஜி உண்டாகும். இதனால் வயிற்றுப்போக்கு ஆகும்.
மலத்தில் கண்ணுக்குத் தெரியாமல் பிளீடிங் கூட ஆகும். தாய்பாலால் குழந்தைக்கு மேற்சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்பாலில் உள்ள மைக்ரோ நியுட்ரிஷியன்ஸ் குழந்தைக்குத் தேவையான இன்பெக்ஷன் எதிர்ப்புச்சக்தியைத் தரும். தாய்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்று வலிவருவதற்கான வாய்ப்புக்கள் மிக, மிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிக, மிக அதிகம். வேலைக்குப்போகும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது எப்படி ?
குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தாய்க்கு அலுவலகத்திலிருந்து கட்டாய ஓய்வு தேவை. தவிர இந்த மூன்று மாதகால அவகாசம் குழந்தைக்கு தாய்பால் முழுமையாக கொடுக்கவும் பயன்படுகிறது. அதன் பின் தாய் ஒரு வாரம், பத்துநாளில் வேலைக்குப் போக வேண்டும் என்றால், தாய்பாலை முன் கூட்டியே எடுத்து வைத்து விட்டால் நான்கு மணி நேரம் வரை அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். குளிர்சாதன பெட்டியில் பத்திரமாக வைத்தால் 7 முதல் 10 நாள் வரை தரலாம். தாய்பாலை குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியில் எடுத்து வைத்து, அது அறையின் சீதோஷன நிலைக்கு சரியாக வந்தவுடன் கரண்டி அல்லது பாலாடையில், குழந்தைக்குப் புகட்டலாம்.
கண்டிப்பாக பாட்டில் பழக்கப்படுத்தாதீர்கள். அப்படி பாட்டிலில் கொடுத்தால் காது வலி, அல்லது டயரியா வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். குளிர்சாதன பெட்டியில் அல்லது பிரீஷரில் வைத்திருக்கும் பாலை எடுப்பதற்குள் குழந்தை அழுகிறதென்றால் எப்படி உடனடியாக பால் ஊட்டுவது? ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் தாய்பாலை விட்டு, அதை கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் உள்ளே வைத்துவிடுங்கள். பால் வெது, வெதுப்பான நிலைக்கு வந்தவுடன் பாலை குழந்தைக்குப் புகட்டுங்கள். அலுவலக நேரங்களில் கூட, தாய்மார்கள் மார்பகத்தில் ஊறியிருக்கும் தாய்பாலை பம்ப் செய்து எடுத்து அலுவலக குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் வீட்டில் எடுத்து வந்து வைக்கலாம். எச்சரிக்கை: தாய்பாலை நேரடியாக சூடு செய்யக்கூடாது. தாய்பால் இல்லை என்கிற குற்றச்சாட்டு சரியானதா ?
ஒரு பெண்ணிடம் தாய்பால் போதுமான அளவு சுரப்பு இல்லை என குற்றம் சுமத்த முடியாது. குழந்தைக்கு தவறான நிலையிலிருந்து பாலூட்டினாலோ, நிப்புள் வலிக்கும் படியாக வெறும் நிப்புளை மட்டும் குழந்தையின் வாயில் வைத்து பாலூட்டினாலோ, தாய்க்கு தாய்பால் ஊறாது. இதற்கு சரியான ஆலோசனை பெற்று, தாய்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய் பால் ஊறும். தாய்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணுக்கு தாய்பால் ஊற மருந்துகள் பரிந்துரைப்பதில்லை. உணவின் மூலமே இயற்கையாக தாய்பால் ஊறுவதே சரி. உண்மையில் தேவைப்பட்டால், நம் உணவையே மையமாகக் கொண்ட சித்த ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரைப்பார்கள். தாய்பாலில் இல்லாத சத்துக்கள் ஏதேனும் உண்டா ஆம். ஒரு குறை உண்டு. தாய்பாலில் வைட்டமின் 'டி' இல்லை என்பது இரண்டு வருடத்திற்கு முன் நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் 'டி' சொட்டு மருந்தும் தரவேண்டும். குழந்தை பெற்ற பெண்களும் இதை கேட்டு வாங்க வேண் டும்.
நமது நாட்டு சீதோஷண நிலையில் தான் வெயில் அதிகமாயிற்றே. நமக்கு இயற்கையாகவே வைட் ட மின் டி கிடைக்குமே என நீங்கள் நினைத்தால் அது தவறு. நமது கருந்தோல் அவ்வளவு விரைவில் வைட் டமின் “டி”யை உள்வாங்கும் தன்மை வாய்ந்ததாக இல்லை என்பதுதான் உண்மை. ஒரு தாய்க்கு வைட்டமின் டி பற்றாக்குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் டி பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் டி சொட்டு மருந்தும் கொடுத்துப் பழக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: 2 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
12 Mar 2026ராமேஸ்வரம், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வடக்கு மன்னார் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் இலங்கை கடற்படை கை
-
சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் விருந்து வழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
12 Mar 2026சென்னை, சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி இப்தார் விருந்து வழங்குகிறார்.
-
குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
12 Mar 2026சென்னை, குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற புதிய திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Mar 2026சென்னை, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்
-
ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை: பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் கண்டனம்
12 Mar 2026சென்னை, பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட ஓ.டி.டி. உரிமம் ஒப்பந்தம் ரத்தால் மேலும் சிச்கல்
12 Mar 2026சென்னை, ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ம
-
தமிழ்நாட்டில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை: த.வெ.க. தலைவர் விஜய் காட்டம்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை என்ற நிலை உள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
12 Mar 2026புதுடெல்லி, யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்: முதல்வர்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என்றும், மாபெரும் தமிழ்க்கனவை சாத்தியப்படுத்துவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக இந்தியா வந்த எண்ணெய்க் கப்பல்
12 Mar 2026மும்பை, ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக சவுதி அரேபியாவில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு எண்ணெய்க் கப்பல் வந்தடைந்துள்ளது.
-
சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 3 நிபந்தனைகள்
12 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
-
பெட்ரோல் -டீசல் தட்டுப்பாடு என வதந்தி: எரிபொருள் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளாள் பரபரப்பு..!
12 Mar 2026சென்னை, 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியதால், அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோ
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
12 Mar 2026சென்னை, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனையானது.
-
மிரட்டி, பணம் கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய்தான்: ஆதவ் அர்ஜூனா பேச்சால் பரபரப்பு
12 Mar 2026சென்னை, எல்லாரையும் விலை கொடுத்து வாங்கலாம். எல்லாரையும் மிரட்டலாம். மிரட்டமுடியாத, பணம் கொடுத்து வாங்க முடியாது ஒரே தலைவர் என்றால் அது த.வெ.க.
-
வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்கு - கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலால் பதற்றம்
12 Mar 2026தெஹ்ரான், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஈரானின் தொடர் தாக்குதல்களால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
12 Mar 2026சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
-
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
12 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
விவசாயிகளின் வருமானம் தொடர்பான பிரதமர் நரேந்திரமோடியின் வாக்குறுதி என்னவானது...? அமைச்சர் ரகுபதி கேள்வி
12 Mar 2026சென்னை, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்
12 Mar 2026திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று.
-
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் டீ, காபி விலை உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி
12 Mar 2026சென்னை, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை; குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஆறு தனிப்படைகள் அமைப்பு: நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தகவல்
12 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் த
-
பிரதமரையும் காணவில்லை, சிலிண்டரையும் காணவில்லை; பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்
12 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Mar 2026- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கண்ட பேரண்ட பட்சிராஜ அலங்காரம்.
-
இன்றைய நாள் எப்படி?
12 Mar 2026


