எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, செப்.24 - அண்ணா வழியில் ஜெயலலிதா தலைமையில் மத்திய அரசு பறித்த உரிமைகளை மீட்போம் என்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார். மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் 103 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எம்.முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது:-
முதல்வரின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 103 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட அரசியல் வரலாற்றில் அண்ணா ஒரு அத்தியாயம். தனது இறுதி மூச்சுவரை தமிழினத்திற்கு வழிகாட்டியாக, தமிழ்மொழி வளர்ச்சிக்கு காரணமாக, தமிழினத்திற்கு பாதுகாப்பாக விளங்கியவர் அண்ணா. இதனைத் தொலைநோக்கு பார்வையில் எண்ணிப்பார்த்த நமது தலைவர் எம்.ஜி.ஆர். அவருடைய உருவத்தை கழகக் கொடியில் இணைத்தார். பெயரை கட்சியிலும் இணைத்தார். அண்ணாவுக்கு நிரந்தர புகழாரம் சூட்டியவர் எம்.ஜி.ஆர்.
அண்ணா 1909 செப்டம்பர் திங்கள் 15 ம் நாள் வரலாற்று புகழ்மிக்க காஞ்சியில் பிறந்து காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் முடித்தார். 1929 ல் தமது 20 வது வயதில் செங்கல்பட்டில் நடைபெற்ற பெரியாரின் சுயமரியாதை மாநில மாநாட்டில் பார்வையாளராக கலந்துகொண்டார் அண்ணா. 1935 ல் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டில் முதன்முதலாக தந்தை பெரியாரை சந்தித்து பேசிய அண்ணா, தாம் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் என்று கூறினார். 1939 ல் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் அண்ணா பொதுச் செயலாளராகவும் ஆனார்கள். 1944 ல் சேலம் மாநாட்டில் அண்ணா கொண்டுவந்த தீர்மான அடிப்படையில் நீதிக்கட்சி திராவிடர் கழகமானது. உலக வரலாறு மற்றும் அரசியலைப் பற்றி கற்றறிந்த அண்ணா, அரசியல் அதிகாரத்தை பெற்றால்தான் தந்தை பெரியாரின் கொள்களைகளை நிறைவேற்ற முடியும் என்றும் அத்தோடு ஏழை எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டுவர முடியும் எனும் ஆழமான கருத்தை தனது இதயத்தில் கொண்டிருந்த அண்ணா, புதிய இயக்கமான தி.மு.க.வை 1949 ல் துவக்கினார்.
தனது இயக்கத்திற்கு தலைவர் பதவி காலியிடமாகவே இருக்கும் என்றும் தன் வாழ்நாள் முழுவதும் அதனை காலியிடமாகவே வைத்திருந்தார் அண்ணா. ஆனால் திராவிட இயக்கத்தின் கரும்புள்ளியான கருணாநிதி, முதல் அமைச்சர் ஆன பிறகு கட்சி தலைவர் பதவியையும் எடுத்துக்கொண்டார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தாரை கருணாநிதி எட்டிப்பார்க்கவில்லை. எனவே கருணாநிதிக்கு அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட எந்த தகுதியும் இல்லை. அண்ணாவுக்கும் நமது முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இயற்கையான பல அரசியல் ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். இருவருக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கை எண் 185. 1962 ல் அண்ணாவின் கன்னிப்பேச்சை கேட்ட பிரதமர் நேரு, அண்ணாவைப் பாராட்டியதுபோல மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் சரளமான ஆங்கிலப்பேச்சைக் கேட்ட இந்திரா காந்தி அவரை பெரிதும் பாராட்டினார்.
அண்ணா மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் தேவை என்று வலியுறுத்தினார். திட்டங்களைப் பெற்று வளர்ச்சி பெறுவதில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று மத்திய ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்டி பேசினார். அதைப்போல மேலும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்பதையும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளான பெரியாறு அணை பிரச்சனை, கச்சத்தீவை திரும்பப் பெறும் பிரச்சனை போன்றவற்றில் போர்க்குரல் எழுப்பி, மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர் நமது ஜெயலலிதா. தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமலும், மீனவர் பிரச்சனையிலும், ஈழத் தமிழர் பிரச்சனையிலும் பாராமுகமாய் இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிற மத்திய காங்கிரஸ் தலைமையிலான தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை கைவிட வேண்டும் என்று முதல்வர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும்போது பர்மாவையும், இலங்கையையும் தனி நாடுகளாக பிரித்துக் கொடுத்தார்கள். இலங்கையை சிங்களர் வசம் ஒப்படைத்தார்கள். சிங்கள அரசு புதிய அரசமைப்பு சட்டம் கொண்டுவந்தது. இதன்மூலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு இருந்துவந்த அடிப்படை உரிமைகள், கல்வி உரிமை, மத உரிமை மற்றும் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஈழத்தந்தை சிவா பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக அகிம்சை வழியில் 25 ஆண்டுகாலம் போராடியும் எந்த பயனும் இல்லாததால், போராளிக் குழுக்கள் போராட்டங்களை நடத்தின. இலங்கையின் குடியரசு தலைவராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஈழத் தமிழர்களின் மொழி உரிமையை பறித்தபோது தமிழக முதல்வராக இருந்த அண்ணா, ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்க ஐ.நா. சபை தலையிட வேண்டுமென வலியுறுத்தி அதன் பொதுச் செயலாளருக்கு தந்தி அனுப்பினார். ஈழத் தமிழர் உரிமை மீட்க எம்.ஜி.ஆர். கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் நிதியுதவி வாங்கித் தந்தும், போராளிகள் உரிய பயிற்சி பெறவும் உதவினார். ஈழத் தமிழர்களை கொன்று குவித்து தமிழினப் படுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜ பக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், உலக நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார். கச்சத்தீவை திரும்பப் பெறவும் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி உள்ளார். சட்டமன்றத் தீர்மானத்தை விமர்சித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய அரசு இந்திய தூதர் மூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தம்மைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்க அரசை வலியுறுத்தும்படியும் கேட்டுக்கொண்டார். அதற்கு பயனும் கிடைத்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய ஜனாதிபதி மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா, ஒரு சாதாரண ஏழை, உழைக்கும் மக்கள், விவசாய பெருமக்கள் எல்லாம் அரசியல் அதிகாரம் பெற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக மத்திய மாநில அமைச்சர் பெருமக்களாகவும் வருவதற்கு அடித்தளம் வகுத்தவர் பெருந்தகை அண்ணா. அண்ணா, எம்.ஜி.ஆர். வழியில் தமிழக மக்களின் நலன்காக்கவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவரவும் அல்லும் பகலும் கண் துஞ்சாது உழைத்துவரும் தமிழ்நாட்டின் பொற்கால முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் கரத்தை வலுப்படுத்துவோம். என்றென்றும் ஜெயலலிதாவின் தலைமையில் அண்ணாவின் கொள்கை வழி நடப்போம். மத்திய அரசு பறித்த உரிமைகளை மீட்போம்.
இவ்வாறு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
கர்நாடகாவில் விநாயகா் சிலை ஊா்வல விபத்தில் 9 போ் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
13 Sep 2025புதுதில்லி : கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனி
-
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
13 Sep 2025சென்னை : திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.