எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல்-2017 பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க விழா, கலெக்டர் மு.கருணாகரன், தலைமையில், சங்கரன்கோவில், காந்திநகரில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் மு.கருணாகரன், 100 நபர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.பின்னர், கலெக்டர் பேசியதாவது-
ஏழை, எளிய மற்றும் நடுத்தர பொதுமக்கள் பொங்கல் பண்டிகையன்று பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தமிழக அளவில் பொங்கல்-2017 பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் சென்னையில் இன்று துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 1454 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், கூட்டுறவுத் துறையின் மூலும் 807 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 375 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும், ஆக மொத்தம் 1182 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு 2017ன்படி, அரிசி பெறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.110/- மதிப்பிலான பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 7,94,023 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,57,31,035/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சங்கரன்கோவில், கழுகுமலை ரோடு (27ஊஊ004ஞலு) நியாயவிலைக் கடையில் 1,124 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் ரூ.3 கோடி செலவில் 10 இடங்களில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.14.25 கோடி செலவில் 59 கண்மாய்கள் இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்களின் பாசன பரப்பு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரும் உயரும். திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவரையும் வாழ்த்துகிறேன் என கலெக்டர் மு.கருணாகரன், பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டாட்சித் தலைவர் செல்வி பெர்மிவித்யா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, ஆவின் நிறுவனத் தலைவர் ரமேஷ், சங்கரன்கோவில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வேலுசாமி, சௌந்தர் என்ற சாகுல்ஹமீது, துணைப் பதிவாளர் (பொ.வி.தி) அ.ரியாஜ்அகமது, சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் எஸ்.பி.சுடலைமுத்துபாண்டியன், குடிமைப் பொருள் வட்டாட்சியர் சுப்புராயன், சங்கரன்கோவில் கூட்டுறவு சார் பதிவாளர் (பொ.வி.தி) சக்திவேல், அக்ரோ மாவட்ட துணைத் தலைவர் சண்முகையா, குடிமைப் பொருள் வழங்க வருவாய் ஆய்வாளர் பெருமாள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.