எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடனடியாக வழங்கும் நிலை உள்ளது என கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.திருவைகுண்டம் வட்டம் அணியாபரநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் செல்வபிரசாத் வரவேற்புரையாற்றினார். முகாமிற்கு தலைமைதாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் எம்.ரவி குமார் பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தில் மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. வருடத்திற்கு 12 முகாம்கள் ஆட்சித்தலைவரால் நடத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் 403 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்த எத்தனை வருடங்கள் ஆகும் என்பதனை பொது மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். முகாம் உடனடியாக நடத்தப்படவில்லை ஒரு மாதத்திற்கு முன்பே பொது மக்களிடம் கோரிக்ககை மனுக்கள் வாங்கப்பட்டு அதிகாரிகள் பரீசிலனைக்குப் பின்னர் தான் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சமந்தப்பட்ட கிராமத்தில் பொது மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லை என்ற நிலையினை அதிகாரிகள் உருவாக்க வேண்டும். அரசு நிர்வாகம் மக்களுக்கானது. எனவே அரசு அதிகாரிகள் தியாக உணர்வுடன் செயல்பட வேண்டும். அரசை நோக்கி மக்கள் என்ற நிலையினை மாற்றி மக்களை நோக்கி அரசு செயல்படுகிறது என்பதற்காக இது போன்ற முகாம்கள் நடைபெறுகின்றன. கிராமத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதே மனுநீதி நாள் முகாமின் நோக்கம் ஆகும். முகாம்கள் தவிர்த்து ஒவ்வொரு திங்கக்கிழமை அன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளித்து பொது மக்கள் தங்களுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். நமது மாவட்டத்தில் குடும்ப அட்டையில் ஆதார்கார்டு, செல் நம்பர் இணைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் 3 இலட்சுதுத 90 ஆயிரம் நபர்களின் பெயர்கள் நீக்ககப்பட்டுள்ளது. 40 ஆயிரம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடன் வழங்கும் நிலை உள்ளது. சுகாதாரத்தில் மாநிலத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் நமது மாவட்டம் சுகாதாரத்தில் முதல் இடத்தில் உள்ளது. அணியாபரநல்லூர் கிராமத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் இல்லாத நிலையினை அடைந்திட பொது மக்கள் அதிகாரிகளிடம் உடன் இணைந்து பணியாற்றி, அணியாபரநல்லூர் கிராமத்தினை முழு சுகாதார கிராமமாக மாற்ற வேண்டும் என்றார்.முன்னதாக வருவாயத்துறையின் கீழ் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கான ஆணையினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரணத்தொகை 1 பயனாளிக்கு ரூ.102500-க்கான காசோலையினையும் நலிந்தோர் உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000- விதம் ரூ.80,000- க்கான காசோலையினையும், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை என 32 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வீதம் பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் மூலம் பாரத மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், பசுமை வீடுகள் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.2,10,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழு 10 பயனாளிகளுக்கு வேலை அடையாள அட்டையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துiறின் மூலம் 1 பயனாளிக்கு தையல் இயந்திரம் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறைக்கட்டுவதற்கான கடனுதவியினையும் கலெக்டர் எம்.ரவி குமார், அவர்கள் வழங்கினார்.மேலும் விளையாட்டுத்துறையின் சார்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இம்முகாமில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், பயிற்சி ஆட்சியர் ராஜகோபலசங்கரா, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பிச்சை, மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) காமராஜ், இணை இயக்குநர் (கால்நடை) ராமசாமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முத்து எழில், துணை இயக்குநர் (நிலம்) பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாத்திமா, ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், தாட்கோ மேலாளர் யுவராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் -ஊரகவளர்ச்சிதிட்டம்) மைக்கேல், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் செல்வபிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பி.வி.சிந்துவுக்கு பொறுப்பு
25 Dec 2025உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.


