எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் காத்தாடி மட்டம் மற்றும் அதிகரட்டி கிராம பகுதிகளில் இன்று தோட்டக்கலைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளியின் செயல்முறைகளை மாவட்ட கலெக்டர் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு செய்தியாளர்களிடையே கூறியதாவது,
“நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். அதனை கருத்திற்கொண்டு வேளாண் தொழிலை மேம்படுத்துவதையும், விவசாயிகளின் நலனை காக்க வேண்டுமென்பதையும் தமது கடமையாக கொண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆசியுடன், தமிழக அரசு முழு முயற்சியுடன் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரநிலை என்பது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களையே சார்ந்துள்ளது. தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் மேம்பாட்டிற்கு தோட்டக்கலைத்துறையின் மூலமாக பல்வேறு மானிய திட்டங்கள் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்கறி மற்றும் மலர்கள் உற்பத்தியை அதிக அளவில் ஊக்குவிக்கும் திட்டங்கள் வாயிலாக காய்கறிகளின் உற்பத்தி திறன் 20 சதவீதமாகவும், மலர்கள் உற்பத்தியை 30 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் மலைப்பகுதி சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், ஓருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் என விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், பூகோஸ், புருக்கோலி போன்ற பயிர்கள் 240 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.உணவாக பயன்படுத்தும் இந்த காய்கறி பயிர்களில் வைரமுதுகு பூச்சியினை கட்டுபடுத்த விவசாயிகள் அதிக அளவு பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். நேரடி உணவாக பயன்படுத்தப்படும் இப்பயிர்களில் தெளிக்கப்படும் இரசாயன பூச்சி கொல்லிகளின் நச்சுதன்மை உடலில் சேர்ந்து சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இதனை கட்டுபடுத்தும் வகையில் சில தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத்துறை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே குறிப்பாக வைரமுதுகு பூச்சி விரும்பி உண்ணும் தாவரங்களான கடுகு, செண்டுமல்லி பயிர்களை ஊடுபயிராக முட்டைகோஸ் நடவு செய்வதற்கு 20 நாட்களுக்கு முன்பு 20 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதை மற்றும் செண்டுமல்லி விதை வரப்பு ஓரங்களிலும், நடவு செய்து 20 நாட்கள் கழித்து 10 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதைக்கவும், செண்டு மல்லி சுற்றிலும் நடவு செய்ய ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனால் முட்டைகோஸ் பயிரினை தாக்கும் பூச்சிகள் கடுகு மற்றும் செண்டுமல்லி பயிரினை உட்கொள்ளுவதால் முட்டை கோஸ் பயிர் பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றப்படுகிறது மேலும் இரசாயன பூச்சி கொல்லிகளினால் ஏற்படும் கெடுதல் குறைவதோடு அதற்கான செலவும் மிச்சமாகிறது
இத்தொழில் நுட்பத்தினை விவசாயிகளிடம் எடுத்துக்காட்டும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.உதகை வட்டாரம் பாலக்கொலா கிராமத்திற்குட்பட்ட பரமூலை பகுதியில் ராஜன் என்ற விவசாயி 1.50 ஏக்கர் பரப்பிலும், குன்னூர் வட்டாரம் அதிகரட்டி கிராமத்தில் உமாதேவி என்ற விவசாயி 0.30 ஏக்கர் பரப்பிலும் செயல் விளக்க திடல் அமைத்திருந்தனர். இத்திடல்களில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மான்ய விலையில் வழங்கப்பட்ட விளக்குபொறி, இனக்கவர்ச்சிபொறி, மஞ்சள் வண்ண பொறிகள் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுபாடு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 140 விவசாயிகளுக்கு பயிற்சியும், 120 விவசாயிகளுக்கு விளக்குபொறி, இனகவர்ச்சி பொறியும் மற்றும் மஞ்சள் வண்ண பொறிகளும் ரூ.7.09 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்து குறைந்த செலவில் நஞ்சற்ற உணவு பொருள் உற்பத்தியினை பெருக்க வேண்டும்”. ஏன மாவட்ட கலெக்டர் பேசினார்.
இச்செய்தியாளர் பயணத்தின்போது, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ந.மணி, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி
25 Dec 2025மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2025.
25 Dec 2025 -
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.


