எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் காத்தாடி மட்டம் மற்றும் அதிகரட்டி கிராம பகுதிகளில் இன்று தோட்டக்கலைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளியின் செயல்முறைகளை மாவட்ட கலெக்டர் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு செய்தியாளர்களிடையே கூறியதாவது,
“நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். அதனை கருத்திற்கொண்டு வேளாண் தொழிலை மேம்படுத்துவதையும், விவசாயிகளின் நலனை காக்க வேண்டுமென்பதையும் தமது கடமையாக கொண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆசியுடன், தமிழக அரசு முழு முயற்சியுடன் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரநிலை என்பது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களையே சார்ந்துள்ளது. தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் மேம்பாட்டிற்கு தோட்டக்கலைத்துறையின் மூலமாக பல்வேறு மானிய திட்டங்கள் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்கறி மற்றும் மலர்கள் உற்பத்தியை அதிக அளவில் ஊக்குவிக்கும் திட்டங்கள் வாயிலாக காய்கறிகளின் உற்பத்தி திறன் 20 சதவீதமாகவும், மலர்கள் உற்பத்தியை 30 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் மலைப்பகுதி சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், ஓருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் என விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், பூகோஸ், புருக்கோலி போன்ற பயிர்கள் 240 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.உணவாக பயன்படுத்தும் இந்த காய்கறி பயிர்களில் வைரமுதுகு பூச்சியினை கட்டுபடுத்த விவசாயிகள் அதிக அளவு பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். நேரடி உணவாக பயன்படுத்தப்படும் இப்பயிர்களில் தெளிக்கப்படும் இரசாயன பூச்சி கொல்லிகளின் நச்சுதன்மை உடலில் சேர்ந்து சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இதனை கட்டுபடுத்தும் வகையில் சில தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத்துறை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே குறிப்பாக வைரமுதுகு பூச்சி விரும்பி உண்ணும் தாவரங்களான கடுகு, செண்டுமல்லி பயிர்களை ஊடுபயிராக முட்டைகோஸ் நடவு செய்வதற்கு 20 நாட்களுக்கு முன்பு 20 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதை மற்றும் செண்டுமல்லி விதை வரப்பு ஓரங்களிலும், நடவு செய்து 20 நாட்கள் கழித்து 10 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதைக்கவும், செண்டு மல்லி சுற்றிலும் நடவு செய்ய ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனால் முட்டைகோஸ் பயிரினை தாக்கும் பூச்சிகள் கடுகு மற்றும் செண்டுமல்லி பயிரினை உட்கொள்ளுவதால் முட்டை கோஸ் பயிர் பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றப்படுகிறது மேலும் இரசாயன பூச்சி கொல்லிகளினால் ஏற்படும் கெடுதல் குறைவதோடு அதற்கான செலவும் மிச்சமாகிறது
இத்தொழில் நுட்பத்தினை விவசாயிகளிடம் எடுத்துக்காட்டும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.உதகை வட்டாரம் பாலக்கொலா கிராமத்திற்குட்பட்ட பரமூலை பகுதியில் ராஜன் என்ற விவசாயி 1.50 ஏக்கர் பரப்பிலும், குன்னூர் வட்டாரம் அதிகரட்டி கிராமத்தில் உமாதேவி என்ற விவசாயி 0.30 ஏக்கர் பரப்பிலும் செயல் விளக்க திடல் அமைத்திருந்தனர். இத்திடல்களில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மான்ய விலையில் வழங்கப்பட்ட விளக்குபொறி, இனக்கவர்ச்சிபொறி, மஞ்சள் வண்ண பொறிகள் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுபாடு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 140 விவசாயிகளுக்கு பயிற்சியும், 120 விவசாயிகளுக்கு விளக்குபொறி, இனகவர்ச்சி பொறியும் மற்றும் மஞ்சள் வண்ண பொறிகளும் ரூ.7.09 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்து குறைந்த செலவில் நஞ்சற்ற உணவு பொருள் உற்பத்தியினை பெருக்க வேண்டும்”. ஏன மாவட்ட கலெக்டர் பேசினார்.
இச்செய்தியாளர் பயணத்தின்போது, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ந.மணி, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்டம்
13 May 2025பீஜிங் : பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
-
மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில்100-க்கும் மேற்பட்டோர் பலி
13 May 2025பமாகோ : மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
எல்லை வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
13 May 2025புதுடில்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார
-
கேரளாவில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்
13 May 2025திருவனந்தபுரம் : அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கோழிக்கோடு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
-
எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
13 May 2025ஸ்ரீநகர் : சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அதிமையான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டிக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை
13 May 2025உதகை : உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆன்மிக குருவுடன் கோலி சந்திப்பு
13 May 2025இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார்.
-
திடீர் ஓய்வு அறிவிப்பு: கோலி மீது பி.சி.சி.ஐ. அதிருப்தி
13 May 2025மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி கோலியின் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
13 May 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
எங்களை சீண்ட வேண்டாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
13 May 2025பிஜீங் : அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
-
நியூயார்க்கில் சாலை விபத்து: 2 இந்திய மாணவர்கள் பலி
13 May 2025நியூயார்க் : நியூயார்க்கில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: ஆஸி. - தென்ஆப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
13 May 2025மெல்போர்ன் : 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
-
தங்கம் விலை ரூ.400 சரிவு
14 May 2025சென்னை : சென்னையில் நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2025
14 May 2025 -
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மே 17-ல் தொடங்கும் : பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
13 May 2025மும்பை : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
-
நாளை வெளியாகும் சூரியின் மாமன்
14 May 2025காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
'தி வெர்டிக்ட்' முன்னோட்டம் வெளியீடு
14 May 2025கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்'. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
14 May 2025ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
14 May 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.