எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் தொடங்கிய தர்மயுத்ததிற்கு கிடைத்த முதல் வெற்றி என முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் முடிவு
ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற தினகரன் உட்பட அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக ( புரட்சித்தலைவி) அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், செம்மலை, மாபா.பாண்டியராஜன், முன்னாள் எம்எல்ஏ, ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது, இந்த ஆலோசனைக்கு பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி அதை மக்கள் இயக்கமாக வளர்த்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் 29 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்து பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு அதிமுகவை, மக்களின் இயக்கமாக மாற்றி எம்.ஜி.ஆர். வழியில் கட்சியை நடத்தினார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்று விட்டது. இதை தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே சசிகலா குடும்பத்தை தடுக்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு பெரும் தலைவர்களின் கொள்கைபடி இந்த கட்சி இயங்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையை முன்வைத்து தர்மயுத்தம் நடத்தப்பட்டது.
முதல் வெற்றி
இன்று அ.தி.மு.க.வை இணைப்பதற்கான அந்த தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைப்பதாக அவர்கள் முடிவு எடுத்துள்ளனர். எங்கள் தர்மயுத்தம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, எந்த நோக்கத்திற்காக அறப்போராட்டம் நடந்ததோ அதன்படி தொடர்ந்து மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து நடைபெறும்.இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம்தான் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டுவோம். நாங்கள் இரு தரப்பினரும் பேசி தொண்டர்கள் விருப்பம், மக்கள் விருப்பம் எதுவோ அதை நடைமுறைப்படுத்துவோம். இதற்காக இரு தரப்பினரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுப்போம்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
தொண்டர்கள் உற்சாகம்
அதிமுகவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவதாக அறிவித்து அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு காலை 8 மணி முதலே ஏராளமான அதிமுக தொண்டர்கள் வருகை தருவதை காணமுடிந்தது. அப்போது ஜெயலலிதா வாழ்க, ஓபிஎஸ் வாழ்க என தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டவாறு இருந்தனர்.
பேச்சுவார்த்தை
அதிமுக அணிகள் இணைவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்கள் கொண்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் நேற்று இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் மாபா பாண்டியராஜன், செம்மலை உட்பட 4 எம்எல்ஏக்கள், மைத்ரேயன், சுந்தரம் ஆகிய 2 எம்பிக்கள் என 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைச்சர்களுடன் இன்று தங்களது முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவார் என தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
மீண்டும் ஆலோசனை
ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
27 Oct 2025கோலாலம்பூர் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்தார்.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்
27 Oct 2025கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆப்கான் எல்லையில் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி
27 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் சம்பவத்தில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
-
எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும்: பேச்சாளர்களுக்கு அமைச்சர் அறிவுரை
27 Oct 2025மதுரை : பேச்சாளர்கள் தங்களது பேச்சு மீளாய்வு செய்யப்படும் என்ற எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும், ’’ என்று உலகத்தமிழ் சங்க விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவி
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
27 Oct 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
தெருநாய் விவகாரம்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாத 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
27 Oct 2025புதுடெல்லி : தெருநாய் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத


