எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பாண்டியம்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
நாட்டு ரக முருங்கை
மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
இலவசமாக வழங்கப்படும்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 29.05.2017 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாக 1,20,000 நாட்டு ரக முருங்கை மரக்கன்றுகள் மற்றும் 1,20,000 பப்பாளி மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக 03.06.2017 முதல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் மரக்கன்றுகள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது பெயரினை பதிவு செய்து ஊராட்சி செயலரை அணுகி இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் வரும் ஜூலை 2017-க்குள் 2,00,000 நாட்டுரக முருங்கை மற்றும் 2,00,000 பப்பாளி மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாற்றங்கால் தோட்டங்கள் அமைத்து வளர்க்கப்பட்டு வருகிறது.
மரக்கன்றுகள்
மேலும் முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறுகின்றோம். முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ப்ரோட்டின் மற்றும் அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளது. 100 கிராம் முருங்கை இலையில் 75 சதவீதம் இரும்புச் சத்து உள்ளது. இதில் ஈரப்பதம் 75.9 சதவீதம், புரதம் 6.7 சதவீதம், கொழுப்பு 1.7 சதவீதம், தாதுக்கள் 2.3 சதவீதம், கார்போஹைட்ரேட்டுகள் 12.5 சதவீதம், கால்சியம் 400 மி.கி பாஸ்பரஸ் 70 மி.கி உள்ளது. சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இம்முருங்கை மரக்கன்றை வளர்க்கும் பொழுது முருங்கை இலை, முருங்கை காய், முருங்கை பூ என அனைத்தையும் நாம் உட்கொள்வதன் மூலம் பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
இரண்டு மடங்கு புரோட்டின்
முருங்கை இலையில் பாலாடையை விட இரண்டு மடங்கு புரோட்டின் இருக்கிறது. ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது, பாலை விட 4 மடங்கு கால்சியம் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் முருங்கை இலையில் உள்ளது.
வருடம் முழுவதும் பப்பாளி
வருடம் முழுவதும் கிடைக்கும் பப்பாளிப்பழம் இனிப்பான சுவையை தருவதோடு, கரோட்டீன்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ.பி,சி, ப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாச்சியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது.இருதயம் வலிமை பெறத் தேவையான சத்துக்களையும், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது. நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பொருந்திய பப்பாயின் என்ற என்சைமினையும் தருகிறது. இது கண்பார்வைத் திறனை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கனியாத பப்பாளிப்பழத்தை 250 கிராம் உணவுக்கு முன் தொடர்ச்சியாக மூன்று மாத காலம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து ஆரம்ப நிலை சர்க்கரை நோய் முற்றிலும் நீங்கி விடும்.
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ.சி. மற்றும் ஈ சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன. இதனால் கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுத்து மாரடைப்பு வராமலும், இருதயம் பாதிப்பில்லாமல் இயங்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் பீட்டா கரோட்டீன் போன்றவை நுரையீரல், இரைப்பை, கருப்பைபுற்று நோய் ஏற்படுவதை தடுக்கின்றது. இது உடலில் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து, சளி, காய்ச்சல் வராமல் தடுக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளிக்காயை தோல் நீக்கி சாப்பிடுவதால் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.
ஆர்வம் உள்ளவர்கள்
இத்தனை நன்மைகள் வழங்கக்கூடிய நாட்டுரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இலவசமாகப் பெற்று, தங்களது வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
25 யூனிட் வரை
மேலும் அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித கட்டமணமுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தவும், அரசுக்கு கட்டணம் செலுத்தி பிற பயன்பாடுகளுக்காக பயன்படுத்தவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு வண்டல்மண் ஒரு ஏக்கர் நஞ்சை உள்ள விவசாயிக்கு 25 யூனிட் வரையும், ஒரு ஏக்கர் புஞ்சை உள்ள விவசாயிக்கு 30 யூனிட் வரையும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள்.
14 ஊராட்சியில்
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,030 குளங்களில் 539 குளங்களுக்கு வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட குளங்கள் மூலம் சுமார் 6,857 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அனுமதி வழங்கப்பட்ட பல்வேறு குளங்களில் நசியனூர் பேரூராட்சிக்குட்பட்ட 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுவலசு குளம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாச்சி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருக்குமடைகுளம் ஆகிய குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
விவசாயம் மற்றும் தொழில்துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
28 Oct 2025கோவை : விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது : மாமல்லபுரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
28 Oct 2025சென்னை : தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.


