எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க முதன் முதலாக சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கானோர்
உலக சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் வார இறுதி மற்றும் தொடர்விடுமுறை நாட்களில் இதன் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். அதிலும் கோடை சீசன் காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை சார்பில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா, பூங்கா, தேயிலை பூங்கா போன்ற பூங்காக்களும், சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் போன்ற இடங்களும் உள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூங்காக்களில் மலர்வகைகளையும், தேயிலை தோட்டங்களையும், மலைமுகடுகளையும் பார்த்து ரசித்து வந்தனர்.
சாகச விளையாட்டு
சமீபகாலமாக சுற்றுலா பல மாற்றங்களை கண்டு வருகிறது. உதாரணமாக தேயிலை தோட்டங்கள், தேயிலை தொழிற்சாலைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேயிலையை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது குறித்த தகவல்களும், தேயிலை தயாரிக்கும் முறையையும் சுற்றுலாப் பயணிகளுக்கு காண்பிக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஊட்டியிலிருந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் தி டீ மியூசியம் அருகில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை அனுமதியுடன் தமிழகத்திலேயே முதன் முதலாக சாகச விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 120 அடி உயரம் கொண்ட கோபுரத்தை அடைந்திட 300 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பிகளில் தொங்கியவாறே ஒருபுறம் இருந்து மறுபுறம் வரை செல்லும் திரில் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொங்கியவாறே ஊட்டி நகரின் அழகை கண்டு ரசிக்கலாம். அதோடு தொங்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது அந்தரத்தில் கால் ஊன்றி நடந்து செல்வது ஒரு சாகசப் பயணம். அதேபோல் 60 அடி உயரம் கொண்ட கயிறினால் ஆன சுவற்றில் ஏறுவது என 7 வகையான விளையாட்டுகள் இங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தி டீ மியூசியத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தேயிலை உற்பத்தியை கண்டு ரசிப்பதோடு இந்த சாகச விளையாட்டிலும் பங்குபெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மனதில் பயத்தை போக்கும்
இது குறித்து இந்த சாகச விளையாட்டு அமைப்பின் மேலாளர் வரதராஜ் கூறுகையில், தென்னிந்தியாவிலேயே மிக உயரமான டவர் இங்குதான் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த சாகச விளையாட்டை ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் செல்ப்கான்பிடன்ட் டெவலப்பண்ணுவதற்கும், மனதில் பயத்தை போக்குவதற்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த விளையாட்டு மிகவும் அமேசிங்காக உள்ளதாக தெரிவிக்கின்றனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


