எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ பொறுமை கடலினும் பெரிது’ என்றெல்லாம் மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். பொறுமையில் சிறந்த தருமரை மகாபாரதம் போற்றிப்பேசுகிறது.
அவசரப்பட்டு ஒரு காரியம் செய்து அதன் விளைவு விபரீதமாகி விடும் போது, “அவ்வளவு அவசரம் ஏன்? பொறுமையாகச் செய்திருக்கலாம் அல்லவா?” என்று பெரியவர்கள் குறைபடுவதைக் காண்கிறோம்.
பெரியவர்கள் நமக்காக ஒன்றைச் செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, அதில் தாமதம் ஏற்பட்டால், சிறியவர்களால் பொறுமையுடன் இருக்க முடியாது. மாறாக, பெரியவர்கள் மீது கோபமும் ஆத்திரமும் தான் உண்டாகும். ஆனால் அவசரத்தால் விளைந்த பாதிப்புகளை அனுபவித்தவர்களுக்குத்தான் பொறுமையின் அருமை தெரியும்.
அவசரப்பட்டு செய்யும் காரியத்தில் உணர்ச்சி வேகம் இருக்குமே தவிர, அறிவுத்திறனுக்கு அங்கே வேலை இருக்காது. திட்டமிடலும் நிதானமும் இல்லாத செயல் தோல்வியைத்தான் தரும். காரணம், அதில் தவறுகள் நேரும் வாய்ப்புகள் அதிகம். பொருள் விரயம் ஏற்படும்.
என் நண்பர் ஒருவர் இடம் வாங்கி வீடு கட்டுவதில் தீவிர அவசரத்தில் இருந்தார். பத்து லட்சம் கொடுத்து ஒரு காலிமனை வாங்கினார். உண்மையில் அதன் மதிப்பு ஐந்து லட்சம் தான். பத்து லட்சம் விலை சொன்னால் தான் வாங்கு பவர் ஏழு லட்சத்திற்கு வருவார் என்று தான் அந்த வியாபாரி பத்து லட்சம் என்று விலை சொன்னார். நண்பரோ அவசரத்தில் பத்து லட்சம் கொடுத்து வாங்கிவிட்டார். பிறகுதான் அதே லே-அவுட்டில் அதே வியாபாரி, அதே அளவு விஸ்தீரணம் கொண்ட இடத்தை நண்பர் இடம் வாங்கியதற்கு முன்பும், பின்பும் குறைந்த விலைக்கு விற்றுக்கொண்டிருக்கிறார் என்கிற உண்மை தெரியவந்தது.
அவர் இடம் வாங்குவதில் பொறுமை காட்டியிருந்தால் அக்கம் பக்கத்தில் விலை விசாரித்திருப்பார். உண்மை விலை தெரியவந்திருக்கும். இவருக்கு ஐந்து லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்காது.
பொறுமையாகச் செயல்படும் காலத்தில், திட்டமிட்டு வேலையை அமைத்துக் கொள்கிறீர்கள். நல்ல பொருட்களை உரிய காலத்தில் வாங்கி சேமித்துக் கொள் கிறீர்கள். வேலையைத் தொடங்கும்போது, திறமையைத் தேடிப்பெற்று, நல்ல முறையில் முடித்துகொள்கிறீர்கள். வேலையின்போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டா லும், அது சிறிய தவறாகத்தான் இருக்கும். அதன் பாதிப்பும் அதிகம் இருக்காது. தவறைத் திருத்திக்கொள்ளவும் முடியும்.
பொதுவாக ஆண்கள் செய்யும் பல ஆடம்பரச் செலவுகள் மனைவியின் விருப்பத்தை உத்தேசித்தே இருக்கும். மனைவியோ, பக்கத்து வீட்டுக்காரி வாங்கியிருக்கிறாள் என்பதற்காக, தானும் வாங்க வேண்டும் என்று விரும்புவாள். பட்டுப் புடவை, தங்க வளையல், தங்க நெக்லஸ், வைரமூக்குத்தி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்றவை மனைவியின் விருப்பத்திற்காக கணவன் வாங்கும் பொருட்களே.
எந்த ஒரு முதலீட்டின் மூலமும் வருமானம் வரவேண்டும். அதுவே சரியான முதலீடு ஆகும். தங்க நகைகளை வாங்கி, பெட்டிக்குள் வைத்துக்கொள்வதால் அதில் போட்ட முதலீடு, வருமானம் அற்ற முதலீடு. இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் தங்கம் வாங்கியபோது உள்ள விலையை விட, இப்போது தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறதே… இப்போது நான் அந்தத் தங்கத்தை விற்றால் லாபம்தானே? என்று கேட்கலாம்.
ஆனால் லாபம் கிடைக்கும் என்பதற்காக வாங்கிய தங்கத்தை விற்று விடுவீர் களா? மாட்டீர்கள். வேண்டுமானால், அவசரப் பணத்தேவைக்கு அதைக்கொண்டு போய் அடகுவைத்து பணம்பெறலாம். அந்தப் பணத்திற்கும் நீங்கள் வட்டி கட்டியாக வேண்டும். மீண்டும் அந்த நகையை மீட்க உங்களிடம் பணம் வரும் வரை நீங்கள் வட்டி கட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
பட்டுப்புடவைகளில் போட்ட பணம் இன்னமும் பயனற்ற செலவு. அந்தப் புடவையை நம் மனைவி எங்காவது திருமண நிகழ்ச்சிக்கு கட்டிக்கொண்டு செல்வாள். அது ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பயன்படும்; அவ்வளவு தான். மற்ற நாளெல்லாம் அது பெட்டியினுள் தூங்கும். அதே பணம் வங்கியில் இருந்தால் வளரும்.
பொதுவாக பணக்காரர்கள் காசு விஷயத்தில் சிக்கனமாக இருப்பதைப்போல், நடுத்தர வர்க்கத்தினர் இருப்பதில்லை. அதனால்தான் செல்வந்தர்கள் செல்வந்தர் களாக இருக்கிறார்கள் ; அல்லது மேலும் செல்வந்தர்களாகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரோ, சற்று பணம் வந்ததும் தாங்கள் கீழ்நிலை நடுத்தர வர்க்கத்தை விட சற்றே மேலே உயர்ந்து மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினர் போல் தங்களைக் காட்டிக்கொள்வார்கள். இது அவர்களின் தாழ்வு மனப்பான்மை யின் வெளிப்பாடு.
பணக்காரர் வீடுகளை விட நடுத்தர மக்களின் வீடுகளில்தான் உயர்ரக நாய் வளர்க்கிறார்கள். அதற்கு செலவு செய்கிறார்கள். மீன் தொட்டிகளில் விதவிதமான மீன் வளர்க்கிறார்கள். அதற்கு செலவு செய்கிறார்கள். விதவிதமான குரோட்டன்ஸ் செடிகள் வளர்க்கிறார்கள். அதற்கு செலவிடுகிறார்கள்.
இந்த ஆடம்பரம் எல்லாம் எதற்கு? தங்கள் வீட்டுக்கு வரும் அவர்களைச் சார்ந்த நடுத்தர குடும்பத்தினர் இவர்களை உயர்வாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் ஒரு பணக்காரனுக்கு தாழ்வு மனப்பான்மை இருப்பதில்லை. அவன் ஒவ்வொன்றையும் அவசியத்தின் பேரிலேயே வைத்துக்கொண்டிருக்கிறான். அவசியத்தின் பேரிலேயே அதற்கு செலவு செய்கிறான். அவன் செலவிடுகிற ஒவ்வொரு பைசாவும் அவனுக்கு வேறொரு பைசாவை சம்பாதித்துத் தருவதாகவே இருக்கும்.
நேரு விருந்துக்கு அழைக்கப்பட்டார். அரசாங்க அதிகாரிகள் அரசு செலவில் ஏற்பாடு செய்திருந்த விருந்து அது. நேரு வந்தார்; பார்த்தார். பெரிய மேஜை முழுவதும் ஏகப்பட்ட பலகாரங்கள் ; பழங்கள் ; பிஸ்கட்டுகள் ; கேக்குகள் என்று சுமார் நூறு பேர் சாப்பிடத்தக்க உணவுகள் அந்த மேஜை முழுவதும் நிறைத்து வைக்கப்பட்டிருந்தன.
உண்மையில் நேருவும், அவரோடு விருந்துண்ணப் போகும் அதிகாரிகளும் ஒரு நாலைந்து பேர்தான். ஆனால் விருந்துக்குத் தருவிக்கப்பட்டிருந்த உணவு வகைகளோ எக்கச்சக்கம்.
நேரு கோபத்துடன், பக்கத்திலிருந்த அதிகாரியிடம், “என்னய்யா! நான் என்ன கடோத்கஜனா, இவ்வளவு உணவையும் உண்பதற்கு? எதற்காக எனக்கு இத்தனை வகை உணவுகளை வரவழைத்து, பொருள் விரயம் செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதிகாரி, நேருவின் காதோடு காதாக சொன்னார்;
“இல்லை. இத்தனை வகை உணவுகளும் உங்களுக்காகவும் எனக்காகவும் தருவிக்கப்படவில்லை. இங்குள்ள அரசு ஊழியர்கள் இந்த வகை உணவுகளை எல்லாம் வாங்கிச் சாப்பிட வசதி இல்லாதவர்கள்.
எனவே, உங்களுக்காக வரவழைப்பதுபோல், அரசாங்க செலவில் தங்களுக்கு வரவழைத்திருக்கிறார்கள். நாம் சாப்பிட்டு விட்டு கிளம்பிய பிறகு, இங்குள்ள மிச்சத்தை எல்லாம் அவர்கள் சாப்பிட்டு மகிழ்வார்கள் அவ்வளவுதான்” என்றார்.
நேரு, புன்சிரிப்போடு தலையசைத்துக் கொண்டார். அதாவது நேரு கோபப் பட்டது, உண்மை அறியாமல், உண்மை அறிய வந்தபோது, அவருக்கே, ஏழ்மைப் பட்ட அரசு ஊழியகள் மீது பரிதாபம் வந்துவிட்டது.
நம் வீட்டிலேயே சிலர் பொறுமை இழந்து பேசி விடுவார்கள். அதை நாமும் நிதானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக, அவர்கள் நோய்வாய்ப்பட்டி ருக்கும்போதோ, பலவீனமாக இருக்கும்போதோ, இப்படி நடக்கும். அப்போது பேசு வது அவர்கள் அல்ல. அவர்களுடைய பலவீனம் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பதிலுக்கு நாம் கோபமாகப் பேசிவிட்டால், அதன் மூலம் நாம் மீண்டும் திரும்பப்பெற முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுவோம். “அப்படி பேசாமல் இருந்திருக்கலாமே. சற்று கோபத்தை அடக்கிக்கொண்டு, வார்த்தைகளைக் கொட்டாமல் இருந்திருக்கலாமே!” என்று பின்னால் பலமுறை வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அப்படி வருந்துவதாலும் பயனில்லை.
பல சந்தர்ப்பங்களில் நம்மால் ஒரு காரியத்தின் விளைவுகள் பின்னால் எப்படி இருக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் பொறுமையைக் கடைபிடிப்பதே நல்லது. விரும்பத்தகாத விளைவுகள் வராமல் தடுக்கத் திட்டமிடுவதும் சாத்தியமாகும். ஆனால் பொறுமையை இழக்கும் போது அதற்கான நஷ்டத்தையும் ஏற்க நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தேவைதானா?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை டிசம்பர் 25-ல் திறப்பு
23 Sep 2025மதுரை : திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.