எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக திருச்செந்தூரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பேட்டி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 14ம் தேதி இடிந்த விழுந்த கிரி பிரகார மண்டபத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்றுஇரவு பார்வையிட்டார். பின்னர் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த பேச்சியம்மாள் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பேச்சியம்மாளின் மகள் சுமதி, மகன் சுரேஷ் ஆகியோரிடம் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் படிப்பு செலவிற்கு உதவி செய்வதாக சரத்குமார் கூறினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து நேரில் கேட்டறிந்தேன். அங்கு உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்செந்தூரில் கோயிலில் கடந்த 14ம் தேதி பக்தர்கள் வரும் பிரகாரத்தில் மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரவித்துக்கொள்கிறேன். திருச்செந்தூர் முருகன் கோயில் சிறந்த சுற்றுலா மையமாகவும், ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. மண்டபம் இடிந்து விழுந்த இடத்தில் புதிய மண்டபம் கட்ட வேண்டும் பக்தர்கள் வலியுறுத்தி வருகிறேன். இக்கோயிலுக்கு நிறைய பக்தர்கள் வருகிறார்கள். தெய்வாதீனமாக பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இங்கு புதிய மண்டபம் கட்டினால் தான் பக்தர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும்.மதுரவாயல் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய உயிரை பற்றி கவலைபடாமல் ராஜஸ்தான் சென்ற தமிழக போலீசாரை பாராட்டுகிறேன். அங்கு என்ன சூழ்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மரணம் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. அது பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். என்னை பொறுத்தவரை அந்த சம்பவம் பற்றி முழுமையான விசாரணை நடக்கும் வரை எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. முழுமையாக விசாரணை பற்றி தெரிந்ததும் கருத்து கூறலாம். அங்கு எந்த சூழ்நிலையில் நடந்தது. பாதுகாப்பு குறைபாடா என்பது பற்றி விசாரணைக்கு பிறகு தான் முடிவு செய்ய முடியும். அதுவரை யாரும் கருத்து சொல்ல கூடாது.
அதிமுக வெல்லும்
உள்ளாட்சி தேர்தலை கண்டிப்பாக நடத்தியாக வேண்டும். அப்போது லோக்கல் டிபார்ட்மெண்ட் முறையாக வேலை செய்யும். பார்லிமெண்ட் தேர்தல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் பயணித்துவிட்டோம். மாபெரும் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நாங்கள் அவர்களோடு இருந்தோம். தற்போது எங்களது இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் நேரடியாக கூறுகிறோம். வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம் போன்ற பல பாலிசிகள் உள்ளது. இப்போது மக்களிடம் நேரடியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். எங்களது நிலைபாடு குறித்து தேர்தலுக்கு பிறகு தெரிவிப்போம். இவ்வாறு சரத்குமார் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் சுந்தர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன், வடக்கு மாவட்ட செயலாளர் வில்சன், தூத்துக்குடி மாவட்ட தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயகோபால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திகுமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாள் சோடா ரவி, ஒன்றிய மாணவரணி செயலாளர் காமராஜ் உட்பட கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.