எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில்,டிச.16 - நாகர்கோவிலில் ம.தி.மு.க. மாநில தணிக்கு குழு உறுப்பினர் கோட்டார் கோபால் இல்ல திருமணவிழா மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற குமரி மாவட்ட மதிமுகவினருக்கு பாராட்டுவிழா ஆகியவை நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு பல தலைவர்கள் போராடி இணைத்தனர். இது போன்று பல பகுதிகளை இணைத்த போது தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளா வசம் சென்றது. முல்லை பெரியாறு அணையால் எந்த பாதிப்பும் இல்லை. பூகம்பம் வந்தாலும் இடியாது. கேரள சகோதரர்களே, நாங்கள் உங்களை பகைவர்களாக நினைக்கவில்லை. உங்களுக்கு துன்பம் விளைவித்து நாங்கள் இன்பம் காண விரும்பவில்லை. கேரள மக்கள் 35 லட்சம் பேரை சாகடித்து விட்டு நாங்கள் சாகுபடி செய்ய விரும்பவில்லை. தமிழகத்தின் நிதி பங்களிப்பில் கட்டப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாயில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கேரள அரசு மீறிவிட்டது. நெய்யாறு இடதுகரை சானலில் கேரள அரசு தண்ணீர் தரவில்லை. அரபிக்கடலில் வீணாகும் தண்ணீர் குமரி மாவட்டத்திற்குள் வரட்டும் என்ற எண்ணம் கேரள அரசுக்கு இருக்கறதா? நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி அணை பிரச்சனையில் 22 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் இழந்துவிட்டது. தற்போது 5 மாவட்டங்கள் முல்லைப்பெரியாறு பிரச்சனையால் கேள்விக்குறியாக உள்ளது. கேரள அரசு இடுக்கி அணையை கட்டியது. ஆனால் அவர்கள் நினைத்த அளவிற்கு அணைக்கு நீர்வரத்து இல்லை. இந்த அணை விவசாயத்துக்கு கட்டப்பட்டது அல்ல. மின்சாரத்திற்காக கட்டப்பட்ட அணை. அந்த அணைக்கு போதிய தண்ணீர் இல்லாததால் முல்லை பெரியாறு அணையை இடித்து தில் உள்ள 30டிஎம்சி தண்ணீரை இடுக்கி அணைக்கு கொண்டு செல்லலாம் என அவர்கள் திட்டம் போட்டு அணையை இடிக்க ரூ.40 கோடி ஒதுக்கி உள்ளனர். அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழக அரசு அணையில் மத்திய தொழிற்படை பாதுகாப்பு கேட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக நான் பிரதமரை சந்தித்து பேசினேன். அப்போது லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொல்ல நீங்கள் ஆயுதங்கள் கொடுத்தீர்கள். அந்த காயம் ஆறுவதற்குள்ளே முல்லை பெரியாறு அணை உடைவதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள். அணையை உடைத்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு உடைவதற்கான தொடக்க நாளாக இருக்கும் என கூறினேன். இவ்வாறு நான் கூறியதற்காக என் மீது ராஜதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. ஆனால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
இந்திய ஒருமைப்பாட்டை காக்க உச்சநீதிமன்றம் முனையும் என்று நம்புகிறேன். ஒருவேளை உச்சநீதிமன்றமும் கைவிட்டுவிட்டால் அணையை காப்பாற்ற நாம் தான் போராட வேண்டியுள்ளது. வருகிற 21ம் தேதி முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் 14 வழிகளிலும் திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ சால்வை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், மாநிலதுணை பொதுசெயலாளர் நாசரேத்துரை, கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


