எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
குறைதீர் கூட்டம்
இக்கூட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 338 மனுக்களில் வேளாண்மையைச் சார்ந்த 194 மனுக்கள் மற்றும் வேளாண்மை சாராத 144 மனுக்களுக்கும் பதில்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், வேளாண்மைத் துறையின் மூலம் 11 விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் மானியத்திலானரோட்டோவேட்டர் இயந்திரங்களையும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஒரு விவசாயிக்கு ரூ.17700/-க்கான தீவன தட்டுக்களையும், தாது உப்புக் கலவையினை 5 விவசாயிகளுக்கும், தேசிய தோட்டக்கலைத் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கும், மொத்தம் 19 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி முடிய 19.08 மி.மீ. மழை பெய்துள்ளது. தற்போது மாவட்டத்திலுள்ள அணைகளில் 34 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 15 சதவீதம் நீர் இருப்பு மட்டுமே இருந்தது. மாவட்டத்தில் பிசான பருவத்தில் 58,697 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையினை விட குறைவாக வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 46 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டு, தற்சமயம் 19 கிராமகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேற்படி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 1981.48 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1660/- ஆகவும், இதர ரகங்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1600/- ஆகவும், தமிழக அரசால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2016-17ம் ஆண்டு நெல் மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்த 28,174 விவசாயிகளுக்கு ரூ.54.40 கோடி காப்பீடுட்டுத் தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் வட்டங்களில் உளுந்து பயிருக்கான காப்பீட்டுத் தொகை ஒரு சில கிராமங்களில் குறைவாக பெறப்பட்டுள்ளதாக வரப்பெற்ற புகாரினை ஆய்வு செய்த அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்ட உரிய இழப்பீட்டுத் தொகையினை பெற ஐஊஐஊஐ நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்காச்சோளம் மற்றும் பாசிப்பயிறுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ.30 கோடி காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் (2017-2018) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 65,748 விவசாயிகள் 1,35,902 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். பருத்தி பயிருக்கு விவசாயிகள் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 28.07.2018 ஆகவும், கரும்பு பயிருக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்த கடைசி நாள் 31.10.2018 ஆகவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரை 2017-18ம் ஆண்டு வாழை, வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு இதுவரை 266 விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்தியுள்ளனர். தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையினை செலுத்த கடைசி நாள் 28.02.2018-ல் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அiவைரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரம் கணக்கெடுப்பு பணியினை வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வனத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். பிப்ரவரி-2018ம் தேதி புதன்கிழமை வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், வேளாண்மைத் துறை, வனத்துறை அலுவலர்கள் கொண்ட முத்தரப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை மனுக்களின் மீது அனைத்து துறை அலுவலர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ் கோட்டாட்சித் தலைவர் (திருநெல்வேலி) மைதிலி, வோண்மைத் துறை இணை இயக்குநர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.ராஜேந்திரன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அற்புதம் மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு ரூ. ஆயிரம் நிச்சயம் கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Dec 2025தருமபுரி, தமிழகத்தில் ஏற்கனவே 1 கோடியே 13 லட்சம் பேருடன் மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
-
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்
14 Dec 2025சென்னை, பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


