முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொம்பு வைத்த கிரீடங்கள் எப்போது தோன்றின தெரியுமா?

ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேகம் தேவை

இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.

உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மைக்ரோ சாப்டின் ஹோலோ லென்ஸ்

உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மைக்ரோ சாப்டின் ஹோலோ லென்ஸ் கண் கண்ணாடிகள் தனது இரண்டாவது எடிசனை வெலியிட்டுள்ளது. நிஜ உலகத்துடன் ஹோலோ கிராம் என்னும் மாய உலகத்தையும் இணை்த்து காட்சிகளையும், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்தின் மூலம் அவற்றின் கேமிங் வசதிகள் மூலமாக பல்வேறு பரிமாணங்களை புரிந்து கொள்ளவும் இந்த கண் கண்ணாடிகள் உதவும். முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த விந்தையான கண்ணாடிகள் பல்வேறு துறையினருக்கும் டிஜிட்டல் இமேஜ்கள் மூலம் ஒத்திகை பார்ப்பதற்கு மிக சிறந்த கருவியாக அமையும். அதே நேரத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்துடன் கூடிய பொழுது போக்கு சாதனமாகவும் இருக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

வீட்டு குறிப்பு

ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால்  பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.

அரிதான நோய்

சீனாவை சேர்ந்த ஹூவாங் சுன்சய் என்பவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் 15 கிலோ கட்டியுடன் இதுவரை 4 முறை அறுவை சிகிச்சைச் செய்தும் பலன் தரவில்லை. இவரை, சீனாவில் ’யானை நாயகன்’ என்று கூறுகின்றனர்.

டைட்டானக்கில் நாயகி ஓவியத்தை வரைந்தது யார் தெரியுமா

டைட்டானிக் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். இதில் மைய பாத்திரங்களாக லியோனார்டோவும், கதே வின்ஸ்லெட்டும் நடித்திருப்பர். ஒரு சந்தர்ப்பத்தில் நாயகியை நாயகன் ஓவியமாக தீட்டுவது போன்ற காட்சி இருக்கும். அப்போது அந்த ஓவியத்தை வரைவது போன்ற கரங்கள் மட்டுமே காட்டப்படும். அந்த ஓவியத்தை வரைந்தவர் வேறு யாருமல்ல... படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனேதான். அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர் என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago