முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகில் மனிதன் பயன்படுத்துவது வெறும் 1 சதவீதம் நீரை மட்டுமே

உலகம் நீராலானது என்பதை நாம் அறிவோம். பூமியில் சுமார் 71 சதவீதம் நீர்பரப்பே உள்ளது. அவற்றில் 96.5 சதவீத பரப்பை கடல்கள் பகிர்ந்து கொள்கின்றன. பனிப்பாறைகள் 2 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. மீதமுள்ள ஆறு, குளம், குட்டை, அருவி, ஏரி ஆகியவற்றில் உள்ள நீரை மட்டுமே மனிதன் பயன்படுத்துகிறான். பூமியில் உள்ள பாதுகாப்பான நீரில் 1 சதவீதம் மனிதன் பயன்படுத்துகிறான்.

இந்தியாவுக்கு முதல் நோபல் பரிசு

உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தவர் கவிஞர் ரவீந்திராத் தாகூர். இவர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இளம் பருவத்திலேயே இலக்கியம், ஓவியம், இசை , கவிதை என்று பன்முகத்திறமைக் கொண்டிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்விமுறையை அறிந்துகொண்டார். அதன்படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வங்காளத்தில் 'சாந்தி நிகேதன்' பள்ளியைத் துவங்கினார். இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்காக தாகூருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு கடந்த 1913 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்பரிசை வென்ற  முதல் ஆசியர் என்ற பெருமையும் தாகூருக்கு உள்ளது.

மிகவும் உயரமான மலைப்பிரதேசங்களில் வளரும் அரிய வகை மலர் கண்டுபிடிப்பு

மிகவும் உயரமான இடங்களில் வளரும் அரிய வகை மலரை கண்டறிந்துள்ளனர். சீனாவின் யுன்னான் பிரதேசத்தில் உள்ள துணை ஆல்பைன் மலைப்பகுதியில் சுமார் 3590 மீட்டர் உயரத்தில் இந்த செடி வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. Entosthodon elimbatus என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செடி நான்கு முதல் எட்டி மிமீ உயரம் வரை வளரக் கூடியது. மேலும் பாறைகளின் பிளவுகளில் உள்ள மண்ணில்தான் இது வளருமாம். இந்த விசித்திரமான தாவரம் குறித்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழ்களிலும் கடந்த 2020இல் வெளியிடப்பட்டன.

சயின்ஸ் பிக்சன் பாணியில் 2 நகரங்களை இணைக்கும் ரியல் டைம் வீடியோ போர்ட்டல்

சயின்ஸ் பிக்சன் எனப்படும் அறிவியல் புனைகதைகள் அல்லது அறிவியல் புனைவு படங்கள் என்பவை அறிவியலின் மாயாஜாலத்தை காட்டுவது போல சித்தரிக்கும். ஓரிடத்தில் நடப்பதை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தெரிந்து கொள்வது போன்ற விதவிதமான டிவைஸ்களை காண்பிப்பார்கள்.இது போன்ற கருவிகள் ரியல் வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பது பொது மக்களுக்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது. தற்போது அதை நனவாக்கும் வகையில், இதற்கு ஓர் உதாரணமாக போலந்து லிதுவேனியா நாடுகளுக்கு இடையே மக்கள் சம காலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு ரியல் டைம் வீடியோ போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் உள்ள விலினியஸ் மற்றும் போலந்து நாட்டில் உள்ள லுப்ளின் நகர மக்கள் ரியல் டைம்மில் நேரடியாக சந்தித்துக் கொள்ள வசதி செய்யும் வகையில் இந்த மிகப் பெரிய வீடியோ போர்ட்டல் அமைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து ஒருவர் அதன் மூலம் மற்ற நகரத்திலிருக்கும் நபரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். ஏறக்குறைய சயின்ஸ் பிக்சன், மாயாஜால படங்களில் வருவதைப் போல மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. Benediktas Gylys Foundation என்ற அறக்கட்டளையின் உதவியுடன் இந்த போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளதாக அதன் தலைவர் Benediktas Gylys தெரிவித்தார்.  மேலும் இந்த போர்ட்டல் மூலம் மக்களிடையே ஒற்றுமை, நல்லுறவு போன்றவை வளர்ந்து கடந்த கால கசப்புகள் மறைய உதவும் என்றார்.அதே போல பெருந்தொற்று காலத்தில் நம்மிடம் அறுந்து போன உறவுகளின் பாலங்களை மீண்டும் இணைக்க இந்த போர்ட்டல் உதவுவதுடன் சர்வதேச அளவிலான நாடுகளுடன் ஒத்துழைப்பு, நல்லுறவு, அண்டை நாடுகளுடன் நட்புறவு போன்றவை மேம்படும் என போலந்து அமைச்சர்Krzysztof Stanowski தெரிவித்தார்.ஹாரி பாட்டர் பாணியிலான இந்த அமைப்பானது  தலா சுமார் 11 டன் எடை கொண்டதாகும். இதன் பராமரிப்பு பகுதியளவில் லிதுவேனியன் மற்றும் போலந்து உள்ளாட்சிகளின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் Reykjavik மற்றும் London போன்ற நகரங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவலை வேண்டாம்

வங்கியில் பணம் இருந்தாலும் கையில் பணம் இல்லாத கஷ்டத்தைப் போக்க உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை டோர் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை ஸ்நாப் டீல் அறிவித்துள்ளது. இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனம், ஒரு ரூபாய் கட்டணத்தில் 2,000 ரூபாய் பணத்தினை டோர் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கேஸ்@ஹோம் என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் 2,000 ரூபாயை ஆர்டர் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. டோர் டெலிவரி முறையில் உங்கள் வீட்டுக்கு வரும் டெலிவரி செய்பவரிடம் உள்ள பிஓஎஸ் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டினை ஸ்வைப் செய்து நீங்கள் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஸ்நாப்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக குர்காவுன் மற்றும் பெங்களூரு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், மற்ற இந்திய நகரங்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago