முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முகம் ஜொலிக்க

ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சை, முகம், கழுத்துப் பகுதியைத் துடைத்து எடுத்து, பின், பாதி தக்காளியை எடுத்து சர்க்கரையைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும பொலிவு தக்க வைக்கப்படும்.

புதிய தகவல்

மேற்குவங்கத்தை சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தை எழுதியுள்ளார்.அவரது மற்றொரு பாடல் நமக்கு அருகாமையில் உள்ள வங்க தேசத்தின் தேசியப்பாடலாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமைப்பெற்ற ஒரே உலக கவிஞர் நமது ரவீந்திர நாத் தாகூர்தான்.

கோமோடோ டிராகன் எனப்படும் பல்லிகள்

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னெஸ்ஸி என்ற இடத்தில் உள்ள மிருககாட்சி சாலையில் கோமோடோ டிராகன் எனப்படும் ராட்சத பல்லி இன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் பெண் பல்லிகள் ஆண் துணை இல்லாமலேயே தானே கருவுற்று குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் மிகவும் அரிதாகவே இவை நடந்ததாக சொல்லப்படுகிறது. 

புதிய உடை

கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உடையவர்கள் அணிந்து கொள்ளக்கூடிய சிறப்பு டி-சர்ட் உடையை உருவாக்கி உள்ளனர். இதை அணிந்து கொண்டால் சுவாச நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் கண்டுபிடித்து எச்சரிக்கும். டிசர்ட்டின் மேல் உள்ள கண்ணாடி இழையால் ஆன சிறிய ஆண்டனா சென்சாராகவும், கடத்தியாகவும் செயல்படுமாம்.

உலகின் மிகப்பெரிய தேவாலயம்

உலகின் மிகப்பெரிய தேவாலயம் ரோமிலுள்ள வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம். இதன் விதானம் 138 மீட்டர் உயரம் கொண்டது. பொறியாளர்கள், மின்சார வேலைப்பார்பவர்கள், விதானத்தில் மேலே ஏறுபவர்கள் என்று இந்த விதானத்திற்கு மட்டும் நிரந்தரமாக 70 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் விதானத்தின் மேல் ஏறி தேவைப்படும்போது ஜன்னல்களை திறக்க வேண்டும், மூட வேண்டும், பழுது பார்க்க வேண்டும், விளக்குகளை பொருத்த வேண்டும். இதுதான் அவர்களின் பணி. இதுபோக, திருவிழா நாட்களில் 5 ஆயிரம் விளக்குகளும், 1000 தீபங்களும் கொண்டு விதானத்தை அலங்கரிக்கப்பதும் இவர்கள் கையில்தான் இருக்கிறது.  ஆலயத்தின் முன்னாள் ஒரு லட்சம் பேர் கூடுவதற்கேற்ற மிகப்பெரிய சதுக்கம் உள்ளது. இந்த ஆலயம் செயின்ட் பீட்டர் இறந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கட்டி முடிக்க 150 ஆண்டுகளுக்கும் மேலானது. 1453-ம் ஆண்டு தொடங்கி 1609-ல் முடிவடைந்தது.

உங்களுக்கு அருகில் ப்ரீ வைபை கிடைக்குமா?

இன்றைக்கு பெருநகரங்களில் பெரும்பாலான வணிக தளங்களில் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவே வந்து விட்டன. அதை மேற்கொள்வதற்கு இன்டர்நெட் வசதி அவசியம். வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இருக்கக் கூடாது என கருதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் இணையதள வசதியையும் இலவசமாகவே அளிக்கின்றன. இவ்வாறு ப்ரீயாக கிடைக்கும் வைபை வசதியை கண்டுபிடிக்க நாம் ஒவ்வொருமுறையும் வைபை ஆப்சனை ஆன் செய்து ஸ்கேன் செய்து..... இனி இந்த கவலை வேண்டாம். ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களில் செயல்படக் கூடிய ஹாட்ஸ்பாட் மேப் எனப்படும் செயலி உங்களுக்கு உதவும். இதை இன்ஸ்டால் செய்து கொண்டால் உங்கள் லோகேஷனை டிடெக்ட் செய்து விட்டு உங்களுக்கு அருகிலேயே எங்கே இலவச வைபை வசதி கிடைக்கும் என்ற தகவலை தெரிவிக்கும். சில இடங்களில் பாஸ்வேர்ட் தேவைப்படுமே என்று கவலைப்படுபவர்களுக்கு அதற்கான தனி பட்டியலையும் இணைத்து காட்டும். இனி எங்கு சென்றாலும் இலவசமாக இன்டர்நெட் வசதியை பெறலாம் ஜாலியாக.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago