முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியா கூட்டணியின் 8 வாக்குகளும் செல்லும்: சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : சண்டிகர் மேயர் தேர்தலில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட இன்டியா கூட்டணியின் 8 வாக்குகளும் செல்லும் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் வெற்றிப் பெற்றதாக அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவிப்பை அடுத்து அவர் மேயராவது உறுதியாகியுள்ளது.

பஞ்சாப் - அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது. இதனிடையே, சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இன்டியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷி எண்ணினார். காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி (இன்டியா கூட்டணி) வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார்.

ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷி அறிவித்தார். இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் மனோஜ் சோன்கர் சண்டிகர் மேயராக பதவியேற்றார்.

இதனிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 5-ந்தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மஷியை கடுமையாக எச்சரித்தது. தேர்தல் நடத்திய அதிகாரி ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டதாக விமர்சித்தது. மேலும், சண்டிகர் மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரையும் காலவரையின்றி ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

சண்டிகர் மேயர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "சண்டிகர் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்துள்ளது. அதனால், ஆவணங்களை நாங்களே ஆய்வு செய்யப்போகிறோம். சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளையும், வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான வீடியோவையும் நாங்கள் 20-ந்தேதி(நேற்று) ஆய்வு செய்வோம். தேர்தல் நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சண்டிகர் மேயர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. செல்லாத வாக்குகள் என்று தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளையும் சேர்த்து மீண்டும் எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

இதன்படி சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது குறித்து நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் அதிகாரியால் செல்லாத வாக்குகள் என்று அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும். அதையும் சேர்த்தால் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 20 வாக்குகள் கிடைக்கும். தேர்தல் அதிகாரியின் அறிவிப்பை ரத்து செய்வதாகவும், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து