முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தினமும் இதை ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்க கடுமையான நரம்பு தளர்ச்சியையும் குணப்படுத்தலாம்.

  1. கோபத்தின் போதும்,ஒரு பொருளை எடுக்கும் போதும் நம்மை அறியாமல் நமது கை நடுங்கும் இது நரம்பு தளர்ச்சியின் அறிகுறியாகும்.
  2. 40 மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வரும் நரம்பு தளர்ச்சி மற்றும் அதனால் ஏற்படும் சோர்வு பற்றியும் அதனை சரி செய்யும் முறைகளையும் பார்க்கலாம்.
  3. உடல் சோர்வு, தூக்கமின்மை, ஞாபக மறதி, எண்ணம் தடுமாறுவது  ஆகியவை  நரம்பு பிரச்சினையின் அறிகுறிகள் ஆகும்,இதுபோன்ற பாதிப்புகளை உரிய நேரத்தில் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
  4. நரம்பு தளர்ச்சி ஒரு மனிதனுக்கு இயற்கையாக வருவது அல்ல,தவறான உணவு பழக்கம் காரணமாக செயற்கையாக இந்த நோய் ஏற்டுகிறது.
  5. தேவைக்கு அதிகமாக அல்லது  குறைவாக உணவை சாப்பிடுவதன்  காரணமாக வெள்ளைஅணுக்கள் மற்றும் சிகப்பு அணுக்களின்  தன்மையில் ஏற்படும் குறைபாடு காரணத்தினால்  நரம்பு தளர்ச்சி  நோய் ஏற்படுகிறது.
  6. நமது உணவு பழக்கத்தை சரிசெய்தால் நோயின் தீவிரம் குறையும்.
  7. 40 மற்றும் 50 வயதில் ஏற்படும் சர்க்கரை நோய் இந்த நரம்பு தளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
  8. சர்க்கரை நோய் வந்த பின் சர்க்கரை மற்றும் இதர பொருள்களை குறைவாக உட்கொள்வதாலும்,சர்க்கரை  நோய்க்கு சாப்பிடும் மருந்துகளும் நமது உடலின் செயல்பட்டை மாற்றி  நரம்பு தளர்ச்சியை தீவிரப்படுத்துகிறது.
  9. நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை அதிகப்படுத்தினால் நரம்பு தளர்ச்சி  நோய் குறையும்.
  10. இரும்பு சத்து அதிகமுள்ள முருங்கை பூவை பயன் படுத்தி நலம் பெறலாம்.
  11. 200 கிராம் முருங்கை பூவை எடுத்து நெயில் வறுத்து நன்றாக குழைய வேக வைத்த  பச்சரிசி சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால்  நரம்பு தளர்ச்சி நோயின் தீவிரம் குறைந்து நோய் குணமாகும்.
  12. காலை ஒரு வேளை மட்டுமே முருங்கை பூவை சாதத்தை சாப்பிட வேண்டும். 
  13. 50 வயதுக்கு மேல் முருங்கை பூவை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் வாரம்  மூன்று நாள் சாப்பிட்டால் போதுமானது.
  14. முருங்கை பூவை  நெயில் வறுக்கும் போது உடன் சுவைக்கு  மிளகு,சீரகம் சேர்த்து பொங்கல் போல் செய்தும் சாப்பிடலாம்.
  15. வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு, கை நடுக்கம் போன்றவற்றிற்கு முருங்கை பூ உணவு உதவுகிறது.
  16. இதை போலவே முருங்கை காயும் நல்ல உணவு பொருளாக உள்ளது,முருங்கை காயை நறுக்கி நன்றாக வேக வைத்து அதன் சதை பகுதியை எடுத்து கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு போட்டு வதக்கி வேக வைத்த பச்சரிசி சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
  17. இதை சாப்பிட்டால் பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்,உடல் வலிமையையும் அதிகரிகிறது,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் வழங்குகிறது. 
  18. முருங்கை காயையும்,முருங்கை பூவையும்,முருங்கை இலையையும் போட்டு சூப் செய்து தினமும் அருந்தலாம்.
  19. முருங்கை காயும்,முருங்கை பூவும் உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் நரம்பு தளர்ச்சியை சரி செய்யும். நரம்பு தளர்ச்சி நோய் குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago