முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கார்/ பைக்குகளுக்கு நைட்ரஜன் நிரப்பலாமா

நமது பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டயர்களில் ஏர் நிரப்புவது வழக்கம். அவை பொதுவான காற்றுதான். ஆனால் தற்போது புதிதாக சில பெட்ரோல் நிலையங்களில் நைட்ரஜன் வாயு நிரப்புகின்றனர். இவை வாகனங்களுக்கு நல்லதா... கொஞ்சம் பார்க்கலாமா...இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது. இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. வாகனங்களில் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறையாது. மேலும் பிரஷர் அளவை துல்லியமாக கணக்கிடும் எந்திரங்கள் தற்போது வந்துள்ளதால் டயருக்கு தேவையான துல்லியமான பிரஷர் கிடைக்கும். முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக்ட் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடிக்காது. பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் அதிகரிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் சாய்ஸ்...நைட்ரஜன் தானே.

இங்கிலாந்துக்கு முதலிடம்

பிறந்தது முதல் 3 மாதங்களில் நீண்ட நேரம் அழுது அடம் பிடித்து தொந்தரவு செய்யும் குழந்தைகள் குறித்த ஆய்வில் உலக நாடுகளின் குழந்தைகள் இடம் பெற்றனர். இதில், இங்கிலாந்து குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரமும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களும் அழுகின்றன. கனடா, இத்தாலியிலும் இதேநிலைதான்.

செயற்கையாக மழை

சீனாவின் வடமேற்கு மாகாண பகுதிகள் நிலவும் கடும் வறட்சியால் ஏற்பட்ட குடிநீர் தட்டுபாட்டை போக்க செயற்கையை மழையை பொழிய செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 9,60,000 சதுர மைல் பரப்பளவில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் இந்த திட்டத்திற்கு  சுமார் 17 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அளவாக பயன்படுத்த

அமெரிக்காவின் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு கவனக் குறைபாடு, சுறுசுறுப்பாக இயங்க முடியாதது, நடத்தை முறைகளில் மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தினமும் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சுமார் 151 இளம் வயதினரிடம் இச்சோதனை நடத்தப்பட்டது.

உலகில் தினமும் எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என தெரியுமா?

சுற்றுச்சூழலுக்கு மிகவும் உயிர் நாடி மரங்களும் தாவரங்களும். அவற்றை மனிதன் நாள்தோறும் அழித்து வருகிறான். இதனால் கொடிய நோய்களால் அழிந்தும் வருகிறான். உலகம் முழுவதும் சுமார் 3.04 டிரில்லியன் மரங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அவற்றில் சுமார் 27 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. அதுவும் எதற்காக, கழிவறை காகிதம் தயாரிப்பதற்காக. அவ்வாறு பார்த்தால் ஆண்டுக்கு 9.8 மில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன. தோராயமாக ஒரு மறுசுழற்சி கொண்ட காகிதத்தில் அச்சடிக்கப்படும் நியூ யார்க் டைம்ஸ் மூலமாக 75 ஆயிரம் மரங்களை காப்பாற்ற முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிகவும் உயரமான மலைப்பிரதேசங்களில் வளரும் அரிய வகை மலர் கண்டுபிடிப்பு

மிகவும் உயரமான இடங்களில் வளரும் அரிய வகை மலரை கண்டறிந்துள்ளனர். சீனாவின் யுன்னான் பிரதேசத்தில் உள்ள துணை ஆல்பைன் மலைப்பகுதியில் சுமார் 3590 மீட்டர் உயரத்தில் இந்த செடி வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. Entosthodon elimbatus என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செடி நான்கு முதல் எட்டி மிமீ உயரம் வரை வளரக் கூடியது. மேலும் பாறைகளின் பிளவுகளில் உள்ள மண்ணில்தான் இது வளருமாம். இந்த விசித்திரமான தாவரம் குறித்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழ்களிலும் கடந்த 2020இல் வெளியிடப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago