முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விண்வெளியின் கருந்துளையிலிருந்து வெளிச்சம்

விண்வெளி அறிவியல் குறித்து உற்று கவனித்து வருபவர்களுக்கு தெரியும் பிளாக் ஹோல் என்பது குறித்து. பிரபஞ்சத்தில் அறியமுடியாத புதிரான அப்பகுதி குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தலையை பிய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனித முயற்சிகளுக்கு அப்பால் விரியும் அதை நோக்கி பயணிக்கும் துணிச்சலும் ஆற்றலும் இன்னும் மனித இனத்துக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் தான் முதன்முறையாக பிளாக் ஹோலின் பின் புறத்திலிருந்து வெளிச்சம் வருவதை விண்வெளி வீரர்கள் கண்டுள்ளனர். சுமார் 1800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து இந்த ஒளி வநதுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அரிதான நிகழ்வு குறித்து நேச்சர் இதழிலும் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தெரு நாய்களின் சொர்க்கம் எனப்படும் கிராமம்

கோஸ்டா ரிக்கா நாட்டில் உள்ள சான்டா பார்பரா என்ற மலையில் அமைந்துள்ளது Territorio de Zaguates என்ற மலைக்கிராமம். இதன் பொருள் தெரு நாய்களின் சொர்க்கம் என்பதாகும். இங்கு ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் எதற்கு வருகின்றனர் தெரியுமா.. இங்குள்ள சான்டா பார்பரா மலையை பார்ப்பதை காட்டிலும் இந்த கிராமத்தை பார்க்கத்தான் வருகிறார்கள். இதில் அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. நாய்களின் சரணாலயம், நாய்களின் புகலிடம், நாய்களின் சொர்க்கம் எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அத்தனை வகையான நாய்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.இங்கு மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரமாக சுற்றி திரியும் வகையில் பராமரிக்கப்படுகின்றன. கலப்பின நாய்கள், நாட்டு நாய்கள், உயர் ரக நாய்கள் என பல்வேறு வகையான நாய் இனங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. ஒரு தனியார் தன்னார்வ நிறுவனத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமம் நாய்களுக்காக நிர்வகிக்கப்படுகிறது.இங்கு நாய்ளுக்கு தேவையான அனைத்து உணவு, மருந்து, நீச்சல் போன்ற பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான நாய்கள் அந்த மலை கிராமத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. சில அரிய வகை நாய் இனங்களும் இங்குள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

'மனித மூளை' ஆச்சரியம்

கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனித உறுப்பு மூளைதான். மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பது போன்றவைகள்தான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை.  சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவில் இருக்கும். இதில், பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையேயான ஓய்வில்லாத மின் ரசாயன பரிமாற்றம் தான் நம் சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருக்கும்.

இயற்கை வழி

முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

வெகு தொலைவில் இல்லை

முன்பு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், வாயில் இருக்கு வழி என்ற பழமொழிக்கு ஏற்ப கேட்டுகேட்டுதான் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் திசை காட்டி பலகைகள் வந்தன. அவையும் கால போக்கில் டிஜிட்டல் போர்டுகளாக மாறினவே ஒழிய பலகைகள் இருந்து கொண்டுதான் இருந்தன. கணணி உலகம் அதையும் மாற்றி ஜிபிஎஸ் கருவியை அறிமுகம் செய்தது. இருந்தாலும் ஜிபிஎஸ் கருவியில் நாம் பார்க்கும் படத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தன. தற்போது அதையும் களையும் வகையில் புதிய ஆக்மென்ட் ரியாலிட்டி தொழில் நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.  அதென்ன ஆக்மென்ட் ரியாலிட்டி... வெர்ச்சுவல் ரியாலிட்டியில் செயற்கையான உலகை நிஜம் போல பார்ப்போம்.  ஆனால் ஆக்மென்ட் ரியாலிட்டியில் நிஜ உலகின் மீது டிஜிட்டல் இமெஜ்கள் பரவி இருக்கும். இதன் மூலம் இடத்தின் பெயர், செல்லும் பாதை, செல்ல வேண்டிய திசை, அடைய வேண்டிய முகவரியின் தொலைவு அனைத்தும் நிஜ காட்சிகள் மீது பரவியிருக்கும். இதற்கான சோதனை ஓட்டம் இப்போதே அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது.

அழவைத்த புத்தகம்

புற்றுநோயால் பாதிப்புள்ளாகி இறந்த இந்திய அமெரிக்கரான பால் கலாநிதி எழுதிய வாழ்கை வரலாறான ‘மூச்சுக்காற்று வெறும் காற்றாகும் போது' என்ற புத்தகத்தை படித்த பில் கேட்ஸ், “இது ஒரு அற்புதமான புத்தகம். எளிதில் அழாத என்னை இந்த புத்தகம் கண்ணீர் சிந்த வைத்தது என்று தெரிவித்து வியந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago