ஜப்பானின் பேனாஸோனிக் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ள புதிய மெகாபோன், பேசும் குரலை ஆங்கிலம், சீனம், கொரியா என பல மொழிகளில் இன்ஸ்டன்டாக மொழிபெயர்க்கிறது. 10 ஆயிரம் மெகாபோன்களை முதல்கட்டமாக தயாரித்துள்ள பேனாஸோனிக் நிறுவனம், அதனை 2018 ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ‘படிகளை கவனியுங்கள்’, ‘ரயில் தாமதமாக வருகிறது’ உள்ளிட்ட 300 ப்ரீசெட் வார்த்தைகளை துல்லியமாக 3 மொழிகளில் ஆட்டோமேடிக்காக மொழிபெயர்க்கும் திறன் கொண்டது இந்த மெகாபோன்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஆடைகள் ஆண் பெண் வேறுபாட்டை காட்டி வருகின்றன என்ற போதிலும் பால் பேதத்தை, அதாவது பாரபட்சமான அணுகுமுறையை அவை உருவாக்கக கூடாது என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக பாலின சமத்துவத்தை அதான்ங்க.. ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை பிரச்சாரம் செய்யும் வகையில் ஸ்பெயினில் உள்ள பில்பாவ் நகரில் இந்த பிரச்சாரம் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு குட்டை பாவாடை அணிந்து வந்த 15 வயது சிறுவனை இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரத்தில் அமைந்திருக்கும் Castleview Primary Schoolதான் தற்போது தனது பள்ளியில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் குட்டை பாவாடை அதாவது ஸ்கர்ட் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளது. பாலின பேதத்தை களைந்து ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்துக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் வறண்ட நிலமான பாலைவன பூமி சஹாரா. உலகில் சஹாரா பாலைவனம் மூன்றாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,200,000 சதுர கிலோமீட்டர்கள். கடந்த 100 ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் 10% வளர்ச்சியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். சஹாராவில் மக்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? சுமார் 2.5 மில்லியன் மக்கள் சஹாராவை தங்கள் வீடு என்று அழைக்கிறார்கள். இவர்கள் இங்கு நாடோடிகளாக வாழ்கின்றனர். ஒட்டகங்களுடன் பயணம் செய்யும் பெடோயின் நாடோடி மக்கள் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சுற்றிலும் பாலைவனத்தைச் சுற்றி நகர்கிறார்கள். பருவ மாற்றம் மற்றும் அவர்களின் தேவைகளைப் பொறுத்து இயற்கை வளங்களுக்கு அருகில் கூடாரங்கள் அடித்து முகாம்களை உருவாக்குகிறார்கள். சஹாரா வறண்டது என்ற போதிலும் இரவில் வெப்பநிலை வியக்கும் அளவில் குறைகிறது. வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும். பல மலைத்தொடர்களில் பனி தவறாமல் விழுகிறது. சஹாரா பாலைவனத்தில் மொத்தம் 20 ஏரிகள் உள்ளன. சஹாராவில் உள்ள ஒரே நன்னீர் ஏரி சாட் ஏரி. இங்கு 1960கள் வரையிலும் கூட சிங்கங்கள் வாழ்ந்தன. அவை பாலைவனத்தின் வறட்சியால் அழியவில்லை. மனிதர்களின் வேட்டையினாலேயே அவை முற்றிலும் அழிந்து போயின என்பது மிகுந்த சோகம்தானே.
இன்றைய நவீன மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடங்கள், சாலை குறியீடுகள், திசைகாட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ஏரானமானவற்றை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியும் சிலர் வழி தவறி விடுகின்றனர். ஆனால் எந்த வரைபடத்தையும் வைத்திருக்க முடியாத நீருக்கு அடியில், பல்லாயிரம் மைல்கள் ஆழமுள்ள கடலுக்குள்.. அதுவும் சூரிய ஒளி புகாத கும்மிருட்டில்.. ஆனால் சில சுறாக்கள் தங்கள் உடலிலேயே இயற்கை ஜிபிஎஸ் அல்லது காந்தமானியை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல நூறு மைல்கள் சென்றாலும் மீண்டும் தனது இருப்பிடத்துக்கு மிகச் சரியாக அவை திரும்பி விடுகின்றனவாம். ஆய்வில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடலுக்கு அடியில் நீந்தி சுறாக்கள் மிகச் சரியாக ஆஸ்திரேலியா வந்து விட்டு 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இது இயற்கையின் ஆச்சரியம் தானே..
ஸ்மார்ட்போனில் எக்ஸ்-ரே வசதி வழங்கும் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் (HawkSpex mobile) எனும் புதிய ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு நீங்கள் நினைக்கும் பொருளினுள் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடியும். பழ வகைகளை சாப்பிடும் முன் அதனுள் ஏதேனும் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாக பார்க்க முடியும்.
அமெரிக்கா என்றாலே எல்லோருக்கும் வானளாவிய கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகள், செழிப்பு மிக்க நாடு என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் அங்கும் கூட சற்று கூட வளர்ச்சியடையாத கிராமம் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... நம்பித்தான் ஆக வேண்டும். அரிசோனா மாகாணத்தில் கிராண்ட் கேன்யோன் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள சுபாய் என்ற கிராமம்தான் இன்னும் வளர்ச்சியடையாத கிராமம். வளர்ச்சியடையாத என்றால் அந்த கிராமத்துக்கு சாலை வசதி, ரயில் போக்குவரத்து வசதி கூட கிடையாது. சுமார் 300 பேர் மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்துக்கு நடந்தோ அல்லது 2 பேர் செல்லக் கூடிய சிறிய விமானத்திலோதான் செல்ல முடியும். அங்கு முழுக்க முழுக்க அமெரிக்காவின் அசலான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இருந்த போதிலும் அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் 2 சர்ச்சுகள், விடுதிகள், ஆரம்ப பள்ளிகள், பலசரக்கு கடை மற்றும் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள மக்கள் ஹவாசுபாய் மொழியை பேசுகின்றனர். விவசாயம்தான் பிரதான தொழில். விவசாய பணிகளை கழுதை அல்லது குதிரையை வைத்து மேற்கொள்கின்றனர். விவசாய பொருள்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த அதிசய கிராமத்தை பார்வையிட வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காகத்தான் அங்கு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு பழங்குடியின பாதுகாப்பு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது கூடுதல் தகவல். அமெரிக்கா என்பது ஒரு கனவுதான் என்பது இப்போதாவது புரிந்தால் சரி..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
17 Nov 2025செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
கும்கி 2 திரைவிமர்சனம்
17 Nov 2025நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது.
-
பீகார் புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு கூடுதலாக இடம்
17 Nov 2025பாட்னா : பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ள நிலையில் அமைச்சரவைியல் பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
17 Nov 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
17 Nov 2025கேரளா, துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சவுதி அரேபியாவில் கோர சம்பவம்: புனித பயணம் மேற்கொண்ட 45 இந்தியர்கள் விபத்தில் பலி
17 Nov 2025மெக்கா : சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


