முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கரடிகளை காப்பாற்றிய நாய்க்கு சர்வதேச விருது

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயிலிருந்து 100 கோலா கரடிகளை மீட்க உதவிய துணிச்சலான நாய்க்கு சர்வதேச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ பரவியது. இதில் ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள் கருகியதுடன், பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட அரிய வகை விலங்கான கோலா கரடிகளை மீட்கும் பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுடன் இணைந்து  பயிற்சி பெற்ற நாய் ஒன்றும் அவர்களுக்கு இணையாக தீரமாக போராடி உதவியது. பீர் (Bear) எனப் பெயரிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியன் கூலி இன நாய்தான் இந்த வீர சாகசத்துக்கு சொந்தக்காரி.  இதற்காக ஆஸ்திரேலியாவின் Sunshine Coast பகுதியில் அமைந்திருக்கும் University of the Sunshine Coast பல்கலை கழகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீர தீர சாகசத்தை புரிந்த பீருக்கு International Fund for Animal Welfare என்ற சர்வதேச விலங்குகள் தன்னார்வ அமைப்புதான் விருது வழங்கி கவுரவித்துள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்த நாய் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விவிஐபி மரம்

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி புத்தர் காம்ப்ளக்சுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் விவிஐபி மரம் என கருதப்படும் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த புகழ்பெற்ற மரத்தை பேணிக் காக்க ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது  அந்த மாநில அரசு.இந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களும், 4 காவலர்களும் பாதுகாப்பு பணியி்ல் எப்போதும் ஈடுபட்டுள்ளனர்.

துரியன், பலாப்பழங்களை கொண்டு போனை சார்ஜ் செய்யலாம்

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர், துரியன் பழக் கழிவுகளை கொண்டு சூப்பர் மின்தேக்கிகளாக மாற்ற முடிந்தது, இதன் மூலம் ஆற்றலை சீராக வெளியேற்ற முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பரிசோதனை முறையில், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் தங்கள் போன், மடிக்கணினி மற்றும் பிற அன்றாட கேட்ஜெட்களை சார்ஜ் செய்ய முடியும். துரியன் மற்றும் பலாப்பழங்களிலிருந்து வரும் கழிவுகளை “விரைவான மின்சார சார்ஜ் செய்ய” energy stores-களாக மாற்றலாம். துரியன் மற்றும் பலாப்பழங்கள் இந்த ஆய்வுக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏனெனில் அவற்றின் போரோசிட்டி மற்றும் பெரிய பரப்பளவு காரணமாக அவை  தேர்வு செய்யப்பட்டன. துரியன் மற்றும் பலா-பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் சூப்பர்-மின்தேக்கிகள் தற்போது பயன்படுத்தப்படும் பொருட்களை விட கணிசமாக சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் விலையுயர்ந்த கிராபெனின் அடிப்படையிலான பொருட்களுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியை உருவாக்கலாம். மேலும் இந்த முறை, வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளுக்கு உதவுவதோடு, புதைபடிவ எரிபொருளை ஆற்றலாக மாற்றுவதற்கான தற்போதைய முறைகளுக்கு ஒரு மாற்றையும் வழங்க முடியும்.

அமெரிக்காவில் ஒரு விநோத கிராமம்

அமெரிக்கா என்றாலே எல்லோருக்கும் வானளாவிய கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகள், செழிப்பு மிக்க நாடு என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் அங்கும் கூட சற்று கூட வளர்ச்சியடையாத கிராமம் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... நம்பித்தான் ஆக வேண்டும். அரிசோனா மாகாணத்தில் கிராண்ட் கேன்யோன் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள சுபாய் என்ற கிராமம்தான் இன்னும் வளர்ச்சியடையாத கிராமம். வளர்ச்சியடையாத என்றால் அந்த கிராமத்துக்கு சாலை வசதி, ரயில் போக்குவரத்து வசதி கூட கிடையாது. சுமார் 300 பேர் மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்துக்கு நடந்தோ அல்லது 2 பேர் செல்லக் கூடிய சிறிய விமானத்திலோதான் செல்ல முடியும். அங்கு முழுக்க முழுக்க அமெரிக்காவின் அசலான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இருந்த போதிலும் அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் 2 சர்ச்சுகள், விடுதிகள், ஆரம்ப பள்ளிகள், பலசரக்கு கடை மற்றும் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள மக்கள் ஹவாசுபாய் மொழியை பேசுகின்றனர். விவசாயம்தான் பிரதான தொழில். விவசாய பணிகளை கழுதை அல்லது குதிரையை வைத்து மேற்கொள்கின்றனர். விவசாய பொருள்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த அதிசய கிராமத்தை பார்வையிட வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காகத்தான் அங்கு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு பழங்குடியின பாதுகாப்பு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது கூடுதல் தகவல். அமெரிக்கா என்பது ஒரு கனவுதான் என்பது இப்போதாவது புரிந்தால் சரி..

உலகிலேயே முதன் முதலாக அனைத்து இடங்களிலும் தங்கம் ஜொலிக்கும் ஹோட்டல் எது தெரியுமா?

அந்த ஹோட்டலில் எங்கு திரும்பினாலும் தங்கம் ஜொலிக்கிறது. அதன் சுவர்கள், கைப்பிடிகள், கதவுகள் அவ்வளவு ஏன் நீச்சல் குளம், பாத்டப், வாஷ்பேஷின் கூட தங்கத்தால் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. அது இந்த ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா... வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில்தான். 5 நட்சத்திர ஹோட்டலான இதில் அனைத்து இடங்களிலும் 24 காரட் தங்கம் ஜொலிக்கிறது.  இதன் மொத்த கட்டுமான செலவு மட்டும் ரூ.1512 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...உண்மையிலேயே சொர்க்கத்துக்கு வந்து விட்டோமோ என்று எண்ணுகிற அளவுக்கு ஜொலிக்கிறது. தங்கம் பதிக்கப்பட்ட உலகின் முதல் ஹோட்டல் என்ற பெருமையையும் இந்த ஹோட்டல் பெற்றுள்ளது. உலகமே கொரோனா கட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் வீழ்ச்சி அடைந்து விட்டது என்று கதறிக் கொண்டிருந்த 2020 ஆண்டில் ஜூலை மாதம் தான் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது என்பது ஆச்சரியம் தானே..

உலகிலேயே அதிக வயது கொண்டவர் வாழ்ந்த நாடு

உலகிலேயே அதிக வயது கொண்ட மூதாட்டி வாழ்ந்த நாடு பிரான்ஸ்தான். ஜெனே லூயி கால்மென்ட் என்ற மூதாட்டி 1872 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 122 வயது வரை வாழ்ந்தார். 1997 இ்ல் மறைந்தார். அதிகாரப்பூர்வமாக அதிக வயது வரை வாழ்ந்தவர் என்ற ஆவணப்படுத்தப்பட்டது இவரது வாழ்வாகும். மேலும் பிரான்சில் மக்களின் சராசரி ஆயுள் காலம் மற்ற நாடுகளை காட்டிலும் அதிகம்். 2018 நிலவரப்படி சராசரி ஆயுள் பெண்களுக்கு 85.3 ஆண்டுகள், ஆண்களுக்கு 79.4 ஆண்டுகள். அதிக ஆயுள் கொண்ட மனிதர்கள் பட்டியலில் பிரான்ஸ் உலகில் 14 ஆவது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago