கறிவேப்பிலை அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது.சுமார் 10 முதல் 20 கறிவேப்பிலை இலையை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பிறகு அதில் இருந்து இலைகளை அகற்றுவதற்காக அதை வடிக்கட்டவும். வெறும் கறிவேப்பிலை தண்ணீர் சிலருக்கு பிடிப்பதில்லை. சுவைக்காக எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.இது கலோரிகளை எரிக்கவும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவுகிறது. இதன் மூலமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுப்பதோடு ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு எடையை குறைக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையில் மஹானிம்பைன் என்ற ஆல்கலாய்டு உள்ளது, இது உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஜப்பானில் ஒரிக்ஸ் ரென்டெக் கார்ப்ரேஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி எனப்படும் மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் தானாம்.
விரைவில் இ-ரெயில் மூலம் மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன் திட்டம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. எலான் மஸ்க் என்பவரின் கற்பனையில் உருவான இந்த ஹைப்பர்லூப் பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வணிக ரீதியாக இந்த போக்குவரத்தை செயல்படுத்தவுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இந்த இ-ரயில் போக்குவரத்தை செயல்படுத்த 5 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் இந்த திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது. ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தின் மூலம் 884 மைல் கொண்ட டெல்லி - மும்பை இடையேயான தூரத்தை வெறும் 80 நிமிடங்களில் கடக்க முடியும். வெற்றிகரமான இறுதிகட்ட சோதனைகளை தொடர்ந்து விரைவில் இத்திட்டம் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக போக விரும்புவது சென்னை மெரினா கடற்கரைதான். கிட்டத்தட்ட இரவு 8 மணிக்கே கடற்கரையில் விழா ஆரம்பித்துவிடும். நியூ இயர் கொண்டாட்டத்தின்போது கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டமாக இருக்கும் சென்னை மெரினா கடற்கரை. இங்கே கொண்டாட்டத்துக்கும் பஞ்சமிருக்காது. ஆடல், பாடல் என நள்ளிரவில் அமர்க்களமாகும் சென்னை.கடற்கரையைச் சுற்றியுள்ள அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, காமராஜர் நினைவகம் உள்ளிட்ட இடங்களிலும் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும். அதுமட்டுமின்றி நீங்கள் சென்னையில் உள்ள பல்வேறு மால்களிலும் புதுவருட கொண்டாட்டங்கள் களைகட்டும்.
முட்டையை நாம் நிலத்தின் மீது உடைத்தால் அது அப்படியே உடைந்து கலைந்து போவதை நம்மால் காண முடியும். அதே வேளையில் கடலுக்கு அடியில் உடைத்தால் என்ன ஆகும் தெரியுமா... கடலுக்கு அடியில் சுமார் 18 மீட்டர் அல்லது 60 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டாலே அங்கு அழுத்தம் அதிகரித்து காணப்படும். அது வெளிப்புறத்தில் காணப்படுவதை காட்டிலும் 2.8 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் இருக்கும். இங்கு ஒரு முட்டையை உடைத்தால் அழுத்தம் காரணமாக அது கலைந்து போகாமல் ஒரு ஜெல்லி மீனைப் போல காட்சி அளிக்கும் என்பது ஆச்சரியம் தானே..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்தது
08 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று அக்.8) 2-வது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
-
எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
08 Oct 2025சென்னை : எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட இறுதி தேர்வுப்பட்டி யலை 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப்பரிமாற்ற செய்யும் வசதி விரைவில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி அமல்படுத்தப்பட உள்ளது.
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து 14-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Oct 2025சென்னை : காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் வரும
-
பீகாரை போன்று வாக்குரிமையை பறிக்க முயன்றால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு போராடும்: அமைச்சர்
08 Oct 2025சென்னை : பீகாரை போல தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த மத்திய பா.ஜ.க.
-
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது: பிரதமர் பேச்சு
08 Oct 2025புதுடெல்லி : முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
-
இந்தியாவுடன் மீண்டும் போர்: பாக். அமைச்சர் திமிர் பேச்சு
08 Oct 2025ஜம்மு காஷ்மீர் : இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.
-
தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Oct 2025சென்னை : தலைமை பதவியில் 25 ஆண்டுகள் பயணம் செய்த பிரதமர் மோடிக்கு எடிப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-10-2025.
08 Oct 2025 -
கரூர் நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு செந்தில் பாலாஜி நிதியுதவி
08 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
-
வழக்கறிஞர் மீது தாக்குதல்: திருமாவளவன் விளக்கம்
08 Oct 2025சென்னை : வழக்கறிஞர் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
-
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்
08 Oct 2025சென்னை : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்.
-
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கையா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
08 Oct 2025ஈரோடு : கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
-
ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றும் புதிய வசதி ஜனவரியில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி வரும் ஜனவரியில் அறிமுகமாகவுள்ளது.
-
கரூர் செல்ல அனுமதி கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் விஜய் சார்பில் நேரில் மனு : உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை
08 Oct 2025சென்னை : கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் சார்பில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் த.வெ.க.
-
பீகார் தேர்தல்: தே.ஜ.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஸ்குமார் : பா.ஜ.க. அறிவிப்பு
08 Oct 2025பாட்னா : பீகாரில் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
-
ஆந்திரா: வெடிவிபத்தில் 6 பேர் பலி - முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல்
08 Oct 2025விசாகப்பட்டினம் : ஆந்திரவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்
08 Oct 2025கரூர் : விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளது.
-
கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் கைது
08 Oct 2025சென்னை : கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
-
பிரபல பாடகரின் மரணம்: போலீஸ் டி.எஸ்.பி. கைது
08 Oct 2025திஸ்பூர் : பிரபல பாடகரின் மரணம் குறித்து போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
08 Oct 2025புதுடெல்லி : இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தியா வருகை தந்துள்ளார். மும்பை வந்துள்ள கீர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி சாமி தரிசனம்
08 Oct 2025சென்னை : காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.
-
திருச்செங்கோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.-வின் வெற்றி உறுதி : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
08 Oct 2025திருச்செங்கோடு : திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
2025-வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
08 Oct 2025ஸ்டாக்ஹோம் : வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு, நாகமலை குன்றினை 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவித்தது அரசு
08 Oct 2025சென்னை : நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.