முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தர்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      விளையாட்டு
Vashington-Sunder 2023-02-2

Source: provided

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா-மத்தியபிரதேச அணிகளும், மும்பையில் நடைபெறும் 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு-மும்பை அணிகளும் மோதுகின்றன.மும்பை அணிக்கு எதிரான அரையிறுதியில் தமிழ்நாட்டின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணியோடு இணைந்து விளையாடுகிறார் . அவரது வருகை சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். இதேபோல மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார்.

________________________________________________

தந்தையான கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் மூன்றாவது முறையாக தந்தையானார். வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. வில்லியம்சன் தனது மனைவி சாரா ரஹீம் மற்றும் புதிதாக பிறந்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பதிவின் தலைப்பில் " இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்" என தெரிவித்தார்.

கேன் வில்லியம்சன் - சாரா ரஹூமுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். கேன் வில்லியம்சன் - சாரா ரஹூம் தம்பதிக்கு 2019 -ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பெயர் மேகி. இவருக்கு வயது 3. இரண்டாவதாக கடந்த 2022-ல் மகன் பிறந்தார். அவருக்கு தற்போது ஒரு வயது என்பது குறிப்பிடத்தக்கது.

________________________________________________

ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இந்த அணியில் ஸ்டீவ் சுமித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணி விவரம்; ஸ்டீவ் சுமித், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்க்ர்ட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட். 

________________________________________________

குல்தீப் யாதவிற்கு சேவாக் ஆதரவு

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களிலேயே குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;-

"மிகைப்படுத்துதல் என்று வரும்போது குல்தீப் யாதவ் மிகவும் குறைவாக மிகைப்படுத்தப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு இப்போதும் ஆன்லைன் பேன்ஸ் கிளப் இல்லை. அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை. மக்கள் யாரும் இவர்தான் அடுத்த பெரிய ஸ்டார் என்று கொண்டாடியதில்லை. என்னைக் கேட்டால் தற்போது பெறுவதை விட அவர் அதிக பாராட்டு மற்றும் மிகைப்படுத்தலுக்கு தகுதியானவர்" என்று பதிவிட்டுள்ளார்.

________________________________________________

இங்கிலாந்து அணி குறித்து மெக்கல்லம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை தொடர்ந்து இந்திய தொடரிலும் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக மெக்கல்லம் கூறியுள்ளார். ஆனால் 18 மாதங்களுக்கு முன் சொந்த மண்ணிலேயே வெற்றி பெறுவதற்கு தடுமாறிய இங்கிலாந்து அணி தற்போது பன்மடங்கு உயர்ந்து கடைசி 8 தொடர்களில் 4 வெற்றி 3 டிராவை பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே தம்முடைய தலைமையில் இங்கிலாந்து அணி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பெருமிதத்தை வெளிப்படுத்தும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"நாங்கள் இங்கே தோற்றுள்ளோம். 2 - 2 என்ற கணக்கில் ஆஷஸ் தொடர் டிரா ஆனது. ஆனால் 18 மாதங்களுக்கு முன்பிருந்த அணியை விட தற்போது நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். எனவே அடுத்த 18 மாதங்கள் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நாங்கள் சில ஸ்பெஷலானதை சாதிப்போம். எங்களுடைய அணியில் இருக்கும் சில குறைகளை தொடர்ந்து நாங்கள் உளியை வைத்து சரி செய்கிறோம். இந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருப்பது மோசமல்ல" என்று கூறினார்.

________________________________________________

குஜராத்தை வீழ்த்திய பெங்களூரு 

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 110 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

________________________________________________

மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கும் பி.சி.சி.ஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு இந்திய அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ வலியுறுத்துவது உண்டு. அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் அடிக்க முடியாமல் பார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு. ஆனால் பிரபல நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. நேரடியாக இந்திய அணிக்கு தகுதி பெறுவார்கள். 

அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை ரஞ்சி டிராபியில் விளையாட பி.சி.சி.ஐ கூறியதாகவும், ஆனால் அவர்  ரஞ்சி டிராபியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல் வெளியானது. இதனால் பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.  இதற்கிடையே காயம் காரணமாகத்தான் ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அவருக்கு காயம் இல்லை என பயிற்சியாளர் தெரிவிததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். மார்ச் 2-ந்தேதி தொடங்கும் அரையிறுதி போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து