எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தென்சென்னை தொகுதிக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் பிரச்சாரமும் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தென்சென்னை தொகுதிக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டார். அக்கா 1825 (365x5 years) என்ற தலைப்பில் தேர்தல், தமிழிசை சவுந்தரராஜனின் தென்சென்னை உத்தரவாதம் என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த தேர்தல் அறிக்கையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி ஆற்றுநீரை சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய நீர்வள அமைச்சகம் மற்றும் மாநில அரசுடன் ஒருங்கிணைந்து தென்சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மொத்தம் 25 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு மீட்டெடுக்கப்படும். மிகப் பெரிய அளவில் மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்படும்.விருகம்பாக்கம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
மழைக்காலங்களில் உடனடியாக உதவிக்கு வருவோர் பிரிவு, முதல் பதிலளிப்போர் முற்றம் உருவாக்கப்படும். மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வழித்தடத்தில் மெட்ரோ-3 திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தை ஒருங்கிணைத்து தென்சென்னை தொகுதிக்குள் வட்ட/ லூப் வழித்தடங்கள் தொடங்கப்படும். மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் இந்த வழித்தடங்களில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.
வடபழனி, திருவான்மியூர், தி நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும். வேளச்சேரி-பரங்கிமலை (செயின்ட்தாமஸ் மவுண்ட்) இடையேயான பறக்கும் ரயில் வேளச்சேரி திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை - கடலூர் இடையே கடல் வழி போக்குவரத்து ஏற்படுத்தப்படும். இதன் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். அம்மா உணவகங்கள் போல் ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.
சைதாப்பேட்டை, மாம்பலம் ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும். சோழிங்கநல்லூரில் புதிதாக மிகப்பெரிய பன்னோக்கு இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனை அமைக்கப்படும். நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும். பிரதமரின் காப்பீட்டு திட்டம் தகுதி உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 இலவச பொது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். போதை மறுவாழ்வு மையம் ஒன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஏற்படுத்தப்படும். நவீன வசதிகளுடன் சுற்றுசூழல் பூங்காக்கள் அமைக்கப்படும். பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மடிப்பாக்கம் ஏரி, புழுதிவாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, நன்மங்கலம் ஏரி ஆகியவை தூய்மைப்படுத்தப்பட்டு அங்கு படகுக் குழாம்கள் அமைக்கப்படும். எம்.ஆர்.டி.எஸ் நிலையங்களில் உள்ள கூடுதல் இடங்களில் மாடி தோட்டங்கள் ஆகியவை அமைக்கப்படும். மிகப்பெரிய மீன் சந்தை அமைக்கப்படும். மீனவ கிராம பெண்களுக்கு மீனவ அக்கா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வங்கிக் கடன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தென் சென்னையின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பணி செய்யும் மகளிருக்கான விடுதி அமைக்கப்படும். இளம்பெண் அரசியல்வாதிகள் ஊக்கப்படுத்தும் திட்டமாக வீரப் பெண் திட்டம் உருவாக்கப்படும். பணிபுரியும் பெண்களுக்காக மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும்.
கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளர்களுக்கு இலவச தங்கும் அறை, மலிவு விலை உணவகம் ஏற்படுத்தப்படும். எம்.பியாக பெரும் ஊதியம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்க செலவிடுவேன்.
தென் சென்னை தொகுதியில் இளைஞர் நாடாளுமன்றம் உருவாக்கப்படும். சென்னை சவுத் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பிரத்தியேக விளையாட்டு அரங்கம் 2027-க்குள் பெரும்பாக்கத்தில் அமைக்கப்படும்.
நீட் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கான இலவச பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
அலெக்ஸ் கேரி புதிய சாதனை
07 Feb 2025இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை
07 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.
-
ஸ்ரேயாஸ் ஐயர்-சுப்மன் கில் பார்ட்னஷிப்பால் தோல்வி : இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி
07 Feb 2025நாக்பூர் : இந்திய அணியின் பேட்ஸ்மேன்க ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது பார்ட்னர்ஷிப்தான் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்தது என்று இங்கிலாந்து கேப்டன்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-02-2025.
07 Feb 2025 -
நெல்லையில் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்த முதல்வர் ஸ்டாலின்
07 Feb 2025திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனிலுள்ள பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு வாங்கி ருசித்தார்.
-
சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள்: சென்னையில் ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு
07 Feb 2025சென்னை : சென்னையில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டியவர்கள் மீது ரூ.8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது
-
தமிழக மீனவர்கள் விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
07 Feb 2025புதுடெல்லி: தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
-
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் வரும் 12-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்
07 Feb 2025சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வருகிற 12-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது
-
டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும்
07 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்.
-
ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ பரிசளித்த இஸ்ரேல் பிரதமர்
07 Feb 2025நியூயார்க் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவராக நெதன்யாகு அறியப்படுகிறார்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
07 Feb 2025சென்னை: தங்கம் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
திண்டுக்கல் டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்
07 Feb 2025சென்னை : திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
உள்ளாட்சி பணிகளில் பதவிக் காலம் முடிந்த பிரதிநிதிகளின் தலையீட்டை தடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
07 Feb 2025சென்னை: பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியில் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம்: உடற்கல்வி ஆசிரியர் கைது
07 Feb 2025சேலம் : சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டன்..?
07 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்லவில்லையெனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் விடுதலை
07 Feb 2025ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் டிசம்பர் 24ம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு
07 Feb 2025புதுடெல்லி, : மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
பா.ஜ .க.வுக்கு எதிரான குற்றச்சாட்டு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
டெல்லியில் தேர்தல் விதிமீறல்: இதுவரை 1,100 வழக்குகள் பதிவு
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி : மத்திய வெளியுறவு செயலர் தகவல்
07 Feb 2025புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்புப்படை தாக்குதலில் பாக்.கில் 12 பயங்கரவாதிகள் பலி
07 Feb 2025பெஷாவர் : பாகிஸ்தான் அருகே உள்ள வடமேற்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
-
கனடாவில் காணாமல் போன 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் : வெளியான தகவலால் அதிர்ச்சி
07 Feb 2025கனடா : இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20 ஆயிரம் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப
-
தமிழகத்திற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: திருநெல்வேலி அல்வாவைவிட மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வா தற்போது பேமஸ் : அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
07 Feb 2025திருநெல்வேலி : தமிழகத்திற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று மத்திய அரசை மீது கடுமையாக குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது திருநெல்வேலி அல்வாவைவிட
-
இஸ்ரேல் மீது நடவடிக்கை: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை
07 Feb 2025வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான விசாரணைகள் தொடர்பாக சர்வதேச கோர்ட்டு மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
-
மணப்பாறை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவு தலைமை ஆசிரியை சரண்
07 Feb 2025மணப்பாறை: 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை போலீசாரிடம் சரண் அடைந்தார்.