முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      தமிழகம்
Satyaprada-Sahu-2023-04-27

சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூம் எனப்படும் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து,  தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். பின்னர் தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்புக்கும், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் வாக்கு சதவீதத்தில் குளறுபடியா? என கேள்வி எழுந்தது.  இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்கு சதவீதம் குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கையில்., “செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால் சில குளறுபடிகள் நடைபெற்றன. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை எனக் கூறி, ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள். இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது. 

தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் கால தாமதம் ஆகும். அதன் காரணமாகவே செயலி மூலமாக மீடியாவுக்கு அப்டேட் செய்தோம். திருவள்ளூர், வேலூர்,  கிருஷ்ணகிரி,  சேலம், ஈரோடு,  நிலகிரி,  கோவை,  தேனி,  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்ட எல்லை பகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர். தமிழ்நாட்டில், எந்த தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு கேட்டு கோரிக்கை வைக்கப்படவில்லை”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து