எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (மே.21) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற வெளியேற்ற போட்டியில் (எலிமினேட்டர்) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த நிலையில், போட்டிக்கு முன் நிகழும் பயிற்சியில் பெங்களூரு அணி கலந்துகொள்ளவில்லை. அதற்கான, காரணம் குறித்து வெளியாகாமல் இருந்தது. தற்போது, பெங்களூரு அணியைச் சேர்ந்த விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குஜராத் காவல்துறை தெரிவித்ததால்தான் பெங்களூரு அணி பயிற்சியை தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன், அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஸ் அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபின்பே காவல்துறை இந்த எச்சரிக்கையை பெங்களூரு அணி நிர்வாகத்திடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
______________________________________________________
மருத்துவமனையில் ஷாருக்கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடல் உச்ச வெப்பநிலையால் (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தனது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் செவ்வாய்க் கிழமையன்று அகமதாபாத் சென்று இருந்தார்.
நடிகர் ஷாருக்கான் உடல் உச்ச வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு கே டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
______________________________________________________
கொல்கத்தா அணி சாதனை
ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் (குவாலிபயர் 1) ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 17 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 4-வது முறையாகும்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகளின் சாதனை பட்டியலில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி கொல்கத்தா 3-வது இடம் பிடித்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 முறையுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த பட்டியல்:- 1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 10 முறை, 2. மும்பை இந்தியன்ஸ் - 6 முறை, 3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 4 முறை, 4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 3 முறை.
______________________________________________________
விஜய் மல்லையா கணிப்பு
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருப்பதாவது, “நான் பெங்களூரு அணியின் உரிமத்தையும், விராட் கோலியை ஏலத்தில் எடுத்த போதும் இதைவிட சிறந்த தேர்வுகளை செய்திருக்க முடியாது என்று எண்ணினேன். இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக என் உள்ளுணர்வு கூறுகிறது. முன்னேறிச் செல்லுங்கள், வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது ஆர்சிபி அணியை மல்லையா வாங்கினார். இதனிடையே, கடந்த 2016-ஆம் ஆண்டு வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் நாட்டைவிட்டு மல்லையா தப்பிச் சென்ற பிறகு அணியின் உரிமையாளர் மாறியது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________
ரத்தன் டாடாவுடன் சச்சின்
51 வயதானவர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1989 முதல் 2013 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி உள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். அதன் மூலம் 34,357 ரன்கள் மற்றும் 201 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மொத்தம் 100 சதங்களை பதிவு செய்துள்ளார். அண்மையில் ரத்தன் டாடா மற்றும் சச்சின் டெண்டுல்கர் என இந்த இரண்டு ஆளுமைகளும் சந்தித்துள்ளனர். அது குறித்து சச்சின் தெரிவித்தது. “மறக்கமுடியாத உரையாடலாக இது அமைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்தன் டாடாவை சந்தித்தேன். அவருடன் நேரம் செலவிடும் வாய்ப்பும் கிடைத்தது.
நாங்கள் இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசிக் கொண்டோம். வாகனங்கள், சமூகத்துக்கான பணி, வனவிலங்கு சார்ந்த எங்களது ஆர்வம் மற்றும் செல்லப்பிராணிகள் மீது நாங்கள் கொண்டுள்ள நேசம் குறித்து பேசினோம். இந்த வகையிலான உரையாடல் விலைமதிப்பற்றது. இந்த நாளை நினைத்துப் பார்த்தால் என் முகத்தில் புன்னகை பூக்கும்” என சச்சின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
______________________________________________________
யுவராஜ் சிங்கின் ஆடும் லெவன்
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் தனது ஆடும் லெவனை இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஐ.சி.சி இணையத்தில் பேசியதாவது, கண்டிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலி தம்முடைய 3வது இடத்தில் விளையாட வேண்டும். அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ஆட வேண்டும். 5வது இடத்தில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக நான் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுப்பேன். அதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்க வேண்டும். தொடர்ந்து ஷிவம் துபே, யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
______________________________________________________
கோலி குறித்து பாண்டிங் கருத்து
இந்தியாவில் வேண்டுமென்றே ஏதேனும் காரணத்தை சொல்லி விராட் கோலியை கழற்றி விடுவதற்கு பலரும் முயற்சிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆனால் விராட் கோலி போன்ற தரமான வீரர் டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத காரணத்தால் இந்திய தேர்வுக் குழுவினர் ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஜெய்ஸ்வாலை ஓப்பனிங்கில் களமிறக்கும் முடிவையும் எடுத்திருக்கலாம். ஆனால் ரோகித் சர்மாவுடன் அவர்கள் விராட் கோலியை ஓப்பனிங்கில் விளையாட வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி பற்றி ஒரு வேடிக்கையான விஷயம் உள்ளது.
இந்தியாவில் உள்ள பலர் அவரை கழற்றி விடுவதற்காக ஒரு காரணத்தை தேடுகின்றனர். ஆனால் என்னை பொறுத்த வரை அவர்தான் இந்தியா தேர்வு செய்வதற்கான முதல் வீரர். அவர் டாப் ஆர்டரில் தன்னுடைய வேலையை செய்வார். அவரைச் சுற்றி நீங்கள் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா போன்ற அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த வீரர்கள் அவர்களுடைய வழியில் விளையாடுவார்கள். ஐ.சி.சி. இணையத்தில் இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது பற்றி நான் ஏற்கனவே சில உரையாடல்களை பேசியுள்ளேன். பெரிய போட்டிகள் வரும்போது அவரை போன்ற வீரர்கள்தான் வேலையை செய்து முடிக்கக் கூடியவர்கள். கிளாஸ் மற்றும் அனுபவம் ஆகியவற்றை உங்களால் எதையும் வைத்து மாற்ற முடியாது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை
07 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-02-2025.
07 Feb 2025 -
நெல்லையில் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்த முதல்வர் ஸ்டாலின்
07 Feb 2025திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனிலுள்ள பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு வாங்கி ருசித்தார்.
-
டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும்
07 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்.
-
சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள்: சென்னையில் ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு
07 Feb 2025சென்னை : சென்னையில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டியவர்கள் மீது ரூ.8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது
-
ஸ்ரேயாஸ் ஐயர்-சுப்மன் கில் பார்ட்னஷிப்பால் தோல்வி : இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி
07 Feb 2025நாக்பூர் : இந்திய அணியின் பேட்ஸ்மேன்க ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது பார்ட்னர்ஷிப்தான் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்தது என்று இங்கிலாந்து கேப்டன்
-
மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு
07 Feb 2025புதுடெல்லி, : மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் வரும் 12-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்
07 Feb 2025சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வருகிற 12-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது
-
சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம்: உடற்கல்வி ஆசிரியர் கைது
07 Feb 2025சேலம் : சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
07 Feb 2025சென்னை: தங்கம் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
பா.ஜ .க.வுக்கு எதிரான குற்றச்சாட்டு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
பாதுகாப்புப்படை தாக்குதலில் பாக்.கில் 12 பயங்கரவாதிகள் பலி
07 Feb 2025பெஷாவர் : பாகிஸ்தான் அருகே உள்ள வடமேற்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
-
நில முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு
07 Feb 2025பெங்களூரூ: சித்தராமையா மனைவி பார்வதி தொடர்பான நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ பரிசளித்த இஸ்ரேல் பிரதமர்
07 Feb 2025நியூயார்க் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவராக நெதன்யாகு அறியப்படுகிறார்.
-
திண்டுக்கல் டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்
07 Feb 2025சென்னை : திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
உள்ளாட்சி பணிகளில் பதவிக் காலம் முடிந்த பிரதிநிதிகளின் தலையீட்டை தடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
07 Feb 2025சென்னை: பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியில் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் தேர்தல் விதிமீறல்: இதுவரை 1,100 வழக்குகள் பதிவு
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
கனடாவில் காணாமல் போன 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் : வெளியான தகவலால் அதிர்ச்சி
07 Feb 2025கனடா : இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20 ஆயிரம் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப
-
இஸ்ரேல் மீது நடவடிக்கை: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை
07 Feb 2025வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான விசாரணைகள் தொடர்பாக சர்வதேச கோர்ட்டு மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டன்..?
07 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்லவில்லையெனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள
-
மணப்பாறை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவு தலைமை ஆசிரியை சரண்
07 Feb 2025மணப்பாறை: 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை போலீசாரிடம் சரண் அடைந்தார்.
-
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை
07 Feb 2025சென்னை : பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
அலெக்ஸ் கேரி புதிய சாதனை
07 Feb 2025இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
2-வது ஒருநாள் போட்டியில் கோலி விளையாடுவாரா..? - துணை கேப்டன் சுப்மன் கில் பதில்
07 Feb 2025நாக்பூர் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி களமிறங்கவில்லை. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவாரா..?
-
தமிழகத்திற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: திருநெல்வேலி அல்வாவைவிட மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வா தற்போது பேமஸ் : அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
07 Feb 2025திருநெல்வேலி : தமிழகத்திற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று மத்திய அரசை மீது கடுமையாக குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது திருநெல்வேலி அல்வாவைவிட