எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி நிலையில் உள்ளது.என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவி த்துள்ளார்.
சட்டசபையில் நேற்று சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:,
புதிய தொழில் தொடங்குவதன் மூலம் மாநிலம் வளர்ச்சி பெறுவதுடன், வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுவதால், தொழில்கள் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை, மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. புதிய தொழில் கொள்கை, வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் கொள்கை, மற்றும் உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவை 2014 ஆம் ஆண்டு இதயதெய்வம் அம்மா அவர்களால், வெளியிடப்பட்டன. தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இதுவன்றி, தனியார் துறையில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டம் 2012, என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்களில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கு, இது வகை செய்கிறது.
தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்குத் தேவையான உகந்த சூழல் நிலவுவதாலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலம் பேணுகிற சமூக, பொருளாதார சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாலும், முதலீட்டாளர்கள் அனைவரும் விரும்பி வந்து தொழில் முதலீடு செய்கிற பாதுகாப்பான இடமாக, தமிழ்நாடு விளங்குகிறது. மாநிலங்களின் வளர்ச்சி அளவைகளின்படி, தமிழ்நாடு முன்னோடி நிலையில் உள்ளது.
இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தைச் சேர்ந்த, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்ட, அந்நிய நேரடி முதலீட்டு புள்ளி விவரங்களின்படி, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், மகாராஷ்டிரம், புதுடெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து, தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. மே 2011 முதல் நவம்பர் 2014 வரையிலான கால கட்டத்தில், தமிழ்நாடு 48 ஆயிரத்து 192 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (ஊஆஐநு) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 2011 ஆம் ஆண்டு கு அம்மா அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல், செப்டம்பர் 2014 வரையிலான காலக் கட்டத்தில், தமிழ்நாடு ஈர்த்துள்ள கூடுதல் முதலீடு 2 லட்சத்து 58 ஆயிரத்து 382 கோடி ரூபாயாகும். இந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்பவர்கள், ஊஆஐநு-ன் இணைய தளத்திலிருந்து அதனைத் தெரிந்து கொள்ளலாம்.
முதலீடுகளை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
இந்திய அரசின் தொழில் கொள்கை - உருவாக்கத் துறை வெளியிட்ட, """"தொழில் நிதி உதவிக்கான செயலகம் (ளுஐஹ) புள்ளி விவரங்கள்"" என்னும் நூலில், முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் மிகவும் விரும்பித் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு அம்மா அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இவற்றின் முதலீட்டு அளவு 31 ஆயிரத்து 706 கோடி ரூபாயாகும். இது தவிர, தொழில் துறையின் கீழ் உள்ள, வழிகாட்டு மையம் , ஒற்றைச் சாளர முறையின் வாயிலாக 42 திட்டங்கள் மூலம், கூடுதலாக 9 ஆயிரத்து 379 கோடி ரூபாய் ஈர்த்துள்ளது. மொத்தத்தில் கடந்த 3 ஆண்டுகளில், 75 திட்டங்களின் வாயிலாக ஈர்க்கப்பட்ட மொத்த முதலீடு 41 ஆயிரத்து 85 கோடி ரூபாயாகும். இது தவிர, 17 ஆயிரத்து 134 கோடி முதலீடு செய்வதற்கு, 7 புதிய திட்டங்களுக்கு, அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்வின் போது கையெழுத்திடப்படும்.
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமும், அரசாணைகள் மூலமும் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த முதலீட்டுத் தொகை 66 ஆயிரத்து 664 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இதில் 15 ஆயிரத்து 982 கோடி ரூபாய்க்கான 12 தொழில்கள் தொடங்கப்படவே இல்லை. எஞ்சிய 50 ஆயிரத்து
682 கோடி ரூபாயில், நான்காயிரம் கோடி ரூபாய், ஹூண்டாய் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் அடங்கும். 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், பரிசீலனையில் இருந்து, தொழில் துவங்கப்பட்ட இந்த ஹூண்டாய் நிறுவனம், 2.2.2008-ல் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே துவங்கப்பட்ட இதனையும் நீக்கி விட்டால், எஞ்சிய தொகை 46 ஆயிரத்து 682 கோடி ரூபாய் தான். அதிலும் மைனாரிட்டி திமுக ஆட்சி முடியும் வரை செய்யப்பட்ட முதலீடு, 25 ஆயிரத்து 126 கோடி ரூபாய் தான். ஆனால் மே 2011 முதல் டிசம்பர் 2014 வரை செய்யப்பட்ட முதலீடு, 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும்.
ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஏதுவாக, ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு சென்னையில் ஒரு வர்த்தக ஆதரவு மையத்தினை ஏற்படுத்தியுள்ளது. 2011-ஆம் ஆண்டு மே மாதம், மாண்புமிகு அம்மா அவர்களது தலைமையில் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாடு அரசு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதரவுடன், 970 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது சுமார் 5 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 18 ஜப்பானிய பெரும் தொழில் நிறுவனங்களை நிறுவ, ஜப்பான் வர்த்தக அமைப்பு, வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவை தவிர, 300க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமையப் பெற்றுள்ளன. ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதால், வேலை வாய்ப்பும் பெருகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ன் கணக்குப்படி, 31.3.2006 நாளைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்து 10 ஆயிரமாகும். 31.3.2011 நாளைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 21 ஆயிரத்து 904 ஆகும். அதாவது, முந்தைய திமுக ஆட்சியில் பதிவுடன் ஏற்படுத்தப்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் 29 லட்சத்து 12 ஆயிரம் ஆகும். 31.12.2014 அன்றைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1 கோடியே 64 லட்சத்து 38 ஆயிரத்து 84 ஆகும். அதாவது, கடந்த நான்காண்டுகளில், 80 லட்சத்து 16 ஆயிரத்து 180 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களான, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டால், தென் தமிழகமும் தொழில் வளர்ச்சி அடையும் என்பதால், இந்தப் பகுதிகளில் தொழில் துவங்க முனைவோருக்கு, பல்வேறு சலுகைகளை, மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்தப் பூங்காக்களை ஏற்படுத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழில் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரிதும் உதவி வருவதால், அவைகளை ஊக்குவிக்கும் வகையில் சுலபமான கடன் வசதி, தொழில்நுட்ப வசதி, எளிய விற்பனை வசதி, கட்டமைப்பு வசதிகள் போன்ற, பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. புதிதாக துவங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வழங்கப்படும் முதலீட்டு மானியம் 15 விழுக்காட்டிலிருந்து
25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 593 நிறுவனங்களுக்கு 230 கோடியே 30 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
வேலையில்லா இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்,
1 லட்சம் ரூபாய் முதல்5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன்வருவோருக்கு, திட்ட மதிப்பீட்டில் 15 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 75 ஆயிரம் ரூபாய் என்றிருந்த மானிய உதவி,
25 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என, கடந்த ஆண்டு முதல், உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது வரை, 2 ஆயிரத்து 63 தொழில் முனைவோருக்கு 9.56 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு, மாண்புமிகு அம்மா அவர்களது தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இது வரை, 685 ஏக்கர் பரப்பில் 14 புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 14 இடங்களில் 19 கோடி ரூபாய் செலவில், தொழிற் பேட்டைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிட்கோ நிறுவனத்தால் 247 கோடி ரூபாய் மதிப்பில், 590 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; 11 கோடி ரூபாய் மதிப்பிலான 26 தொழிற்கூடங்கள் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2006 முதல் 2011 வரையிலான, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 160 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமே புதிதாகப் பதிவு செய்யப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு மூன்றாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், 2015 ஆம் ஆண்டு ஜனவரி வரை, மொத்தம் 3.94 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பதிவானதை விட, கூடுதலாக 2.16 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை, மிகவும் பெருமையுடன் இந்த அவையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
முனைப்பான மின் திட்டங்கள்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
2011 ஆம் ஆண்டு மே மாதம், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், 4 ஆயிரத்து 640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு, தற்போது கிடைத்து வருகிறது. இது தவிர, வல்லூர் மூன்றாம் அலகிலிருந்து, நமது பங்காக 350 மெகாவாட் மின்சாரம், இன்னும் சில நாட்களில் கிடைக்கப் பெறும். மேலும், 2 ஆயிரத்து 163 மெகாவாட் மின்சாரம் இன்னும் சில மாதங்களில் கிடைக்கும்.
இது தவிர, 660 மெகாவாட் திறன் கொண்ட, எண்ணூர் அனல் மின் திட்டம், 1,320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம், என 1,980 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் துவக்கப்படவுள்ளன.
இது தவிர, எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் மற்றும் உப்பூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின் மூலம், 2 ஆயிரத்து 260 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், வடசென்னை அனல் மின் திட்டம் மூன்றாம் நிலை (800 மெகாவாட்), உடன்குடி அனல் மின் திட்டம் விரிவாக்கம் (2 ஒ 660 மெகாவாட்), தூத்துக்குடி அனல் மின் திட்டத்திற்கான மாற்று திட்டம் (2 ஒ 660 மெகாவாட்) என மொத்தம் 3 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சார திட்டங்களுக்கான சுற்றுச் சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவன்றி, மத்திய அரசால் நிறைவேற்றப்படவுள்ள 4,000 மெகாவாட், செய்யூர் அனல் மின் நிலையத்தில் நமது பங்காக 1,600 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கப் பெறும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அரசால் முடிக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், 2000 மெகாவாட் திறனுள்ள சில்லஹல்லா நீரேற்றும் மின் திட்டத்திற்கான ஆய்வுப் பணி, மற்றும் 500 மெகாவாட் திறனுள்ள, குந்தா நீரேற்றும் மின் திட்ட பணிகள், ஆகியவை முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. மேலும், 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு, நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் வாங்குவதற்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில், 16 ஆயிரத்து 33 மெகாவாட் அனல் மின் உற்பத்திக்கும்,2 ஆயிரத்து 607 மெகாவாட் புனல் மின் உற்பத்திக்கும், நீண்ட காலக் கொள்முதல் மூலம் 3 ஆயிரத்து 300 மெகாவாட், மற்றும் நடுத்தர கால கொள்முதல் மூலம்,
500 மெகாவாட், என மொத்தம் 22 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இந்த அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர், இது வரை முடிக்கப்பட்ட திட்டங்கள், நடுத்தர கால மற்றும் நீண்டகாலக் கொள்முதல் ஆகியவற்றின் வாயிலாக 4 ஆயிரத்து 640 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. எனவே தான், மின் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டு, மின் தேவையை முழுவதும் பூர்த்தி செய்யும் நிலையை, எட்டிக் கொண்டு இருக்கிறோம். !இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Dec 2025- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலி நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
16 Dec 2025



