எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: ஆச்சரியப்பட வைக்கும் விசுவாசமிக்க தொண்டர் படையை உருவாக்கியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார் என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது.கடந்த ஜூலை 5–ந்தேதி ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் ‘சன்டே மேகசைன்’ பகுதியில் ரொல்லோ ரோமிக் என்னும் பத்திரிகையாளர் எழுதிய சிறப்புக் கட்டுரை வருமாறு:–மே 8–ந்தேதி சென்னையின் ஒரு கோவிலில் நான் இருக்கிறேன். பெருமாளே நீதி கிடைக்கணும், அம்மா விடுதலையாகணும், அம்மாவை சிறையிலடைத்த தீயசக்திகள் அழிந்து போகணும் என்று தொண்டர்கள் கூட்டம் பிரார்த்தனைகளும், பூஜைகளும் நடத்துகிறார்கள். கூட்டத்தினரில் ஒருவர் மாநில அமைச்சர், அவரது கையில் ஒரு பெண்ணின் படத்தை பச்சை குத்தியிருக்கிறார். அவர்தான் தமிழகத்தின் அழிக்க முடியாத தவிர்க்க முடியாத சக்தியான அம்மா.கடந்த செப்டம்பர் 27–ந்தேதி அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு வந்ததிலிருந்து பல தொண்டர்கள் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். இந்த வெறித்தனமான பக்தியை என்னவென்று சொல்வது?
அரசியலுக்கு வரும் முன் தமிழ் சினிமாவில் 100–க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் ஜெயலலிதா. தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆரை தனது குருவாக, வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார். 1987ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தனது பரம வைரியாக இருக்கும் 92 வயது சினிமா கதாசிரியரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்.பால்குடம், சூறைத்தேங்காய்நேர்த்திக்கடன் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்த நிலையில் தீர்ப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கோவில்களிலும், சர்ச்சுகளிலும், பள்ளிவாசல்களிலும் கூட்டமாக கூடி பிரார்த்தனைகள், பூஜைகள் செய்தார்கள். மதுரையில் கட்சிக்காரர்கள் 1008 தேங்காய் உடைத்தார்கள். கோவையில் 2008 பால்குடம் எடுத்தார்கள். செல்வ வினாயகர் கோவிலில் 508 பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினார்கள். எல்லோரது பிரார்த்தனையும் அம்மா விடுதலையாக வேண்டும் என்பது மட்டுமே. எங்கு பார்த்தாலும் மோனலிசா புன்னகையுடன் ஜெயலலிதாவின் ‘கட்அவுட்’களும், பேனர்களும், போஸ்டர்களும், தென்பட்டால், நீங்கள் தமிழ்நாட்டில் நுழைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். வாக்கு வங்கி மிக ஸ்திரமாக இருக்கும் கிராமப்புறங்களில் இது இன்னும் அதிகம்.1948ல் பிறந்த ஜெயலலிதாவுக்கு 2 வயது இருக்கும்போது அவரது தந்தை மறைந்தார்.எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று…
எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று அரசியலுக்குள் நுழைந்தார். ஜெயலலிதா. பிராமணரை எதிர்க்கும் பாரம்பரியம் கொண்ட திராவிடக் கட்சியில் இது பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. ஆனால் அழகும் புத்திசாலித்தனம் ஒருங்கே அமையப் பெற்ற ஜெயலலிதா, இதனை வென்று அரசியல் செய்தார். அவரது ஆங்கிலம் மற்றும் இந்திப் புலமை டெல்லி அரசியலையும் கலக்க உதவியது. ஆனால் எம்.ஜி.ஆரின் நெருங்கிய வட்டத்துக்குள் இருந்தவர்கள், அவரை அப்புறப்படுத்த நினைத்தனர். 24–12–1987 அன்று எம்.ஜி.ஆர். மறைந்தபோது 2 நாட்கள் அவரின் உடல் அருகிலேயே இருந்தார். இறுதியாக அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அதிலிருந்து ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டு ரோட்டில் விழுந்ததை தொலைக்காட்சியில் கோடிக்கணக்கானோர் பார்த்து கண்ணீர் சிந்தினர். அதன் பின்னர் நான்கு வருடங்கள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகளை எதிர்த்து போராடினார். 1991ல் தமிழகத்தின் முதலமைச்சராகி தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார்.
குப்பத்துப் பெண சென்னையில் நான் சந்தித்த மீனவர் குப்பத்துப் பெண்ணான கலா, புரட்சித்தலைவி அம்மா தனி மனுஷியாக போராடுவதால் இவரை எங்களில் ஒருவராகவே நேசிக்கிறோம்’ என்றார். முதல் முறை முதலமைச்சரானபோது உடல் முழுவதையும் மறைக்கும் கோட் அணிந்து தன்னை உங்களின் அன்புச் சகோதரி என்று சொன்னார். மீண்டும் முதலமைச்சரானபோது நகைகள் அணிவதை சுத்தமாகவே கைவிட்டு சந்நியாசி போல் வாழும் அவரை மக்கள் ‘அம்மா’ என்று அழைக்கிறார்கள். அசாதாரணமான சூழலில் அவர் சிறைக்கு போனதும் முதலமைச்சரான பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அறையையோ, அவரது இருக்கையையோ பயன்படுத்த மறுத்துவிட்டார். ஜீன் டிரேஸ்– அமர்த்தியாசென் ஆகியோர் ‘ஆன் அன்செர்ட்டெயின் க்ளோரி’ என்ற புத்தகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி அலசி ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கின்றனர். அதில் நிர்வாகப் புதுமைகளில் எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரே மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டுள்ளனர். விதிகள், வழிமுறைகள், திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை தானே வகுத்து திறம்பட நடத்திய முறைக்கு நாம் தலைவணங்க வேண்டும் என்று சொல்கிறார் பத்திரிகையாளர் சதானந்த மேனன்.
அம்மா உணவகம்,அம்மா பார்மசிமடிக்கணினி, புடவை, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், அரிசி, பசுமாடுகள், பள்ளி குழந்தைகளுக்கு சைக்கிள் போன்றவற்றை விலையில்லாமல் வழங்கியுள்ளார். இப்போது அம்மா உணவகம், அம்மா பார்மசி, அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் என மலிவு விலை பொருட்களையும் வழங்கி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த அன்று காலையிலிருந்தே அவரது இல்லத்தில் குவிந்த தொண்டர்கள் ஏக படபடப்புடன் காத்திருந்தார்கள். அவருக்கு விடுதலை என்று அறிவிப்பு வந்ததும் ஆடி கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். அதிசயமாக அன்று மழையும் கொட்டியது.இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சண்டே மேகசின் பகுதியில் வெளி வந்திருக்கும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Dec 2025- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலி நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
16 Dec 2025



