முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா சாதனைகள்: ‘நியூயார்க் டைம்ஸ்’ புகழாரம்

சனிக்கிழமை, 11 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆச்சரியப்பட வைக்கும் விசுவாசமிக்க தொண்டர் படையை உருவாக்கியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார் என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது.கடந்த ஜூலை 5–ந்தேதி  ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் ‘சன்டே மேகசைன்’ பகுதியில் ரொல்லோ ரோமிக் என்னும் பத்திரிகையாளர் எழுதிய சிறப்புக் கட்டுரை வருமாறு:–மே 8–ந்தேதி சென்னையின் ஒரு கோவிலில் நான் இருக்கிறேன். பெருமாளே நீதி கிடைக்கணும், அம்மா விடுதலையாகணும், அம்மாவை சிறையிலடைத்த தீயசக்திகள் அழிந்து போகணும் என்று தொண்டர்கள் கூட்டம் பிரார்த்தனைகளும், பூஜைகளும் நடத்துகிறார்கள். கூட்டத்தினரில்  ஒருவர் மாநில அமைச்சர், அவரது கையில் ஒரு பெண்ணின் படத்தை பச்சை குத்தியிருக்கிறார். அவர்தான் தமிழகத்தின் அழிக்க முடியாத தவிர்க்க முடியாத சக்தியான அம்மா.கடந்த செப்டம்பர் 27–ந்தேதி அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு வந்ததிலிருந்து பல தொண்டர்கள் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். இந்த வெறித்தனமான பக்தியை என்னவென்று சொல்வது?

அரசியலுக்கு வரும் முன் தமிழ் சினிமாவில் 100–க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் ஜெயலலிதா. தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆரை தனது குருவாக, வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார். 1987ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தனது பரம வைரியாக இருக்கும் 92 வயது சினிமா கதாசிரியரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்.பால்குடம், சூறைத்தேங்காய்நேர்த்திக்கடன் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்த நிலையில் தீர்ப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கோவில்களிலும், சர்ச்சுகளிலும், பள்ளிவாசல்களிலும் கூட்டமாக கூடி பிரார்த்தனைகள், பூஜைகள் செய்தார்கள். மதுரையில் கட்சிக்காரர்கள் 1008 தேங்காய் உடைத்தார்கள். கோவையில் 2008 பால்குடம் எடுத்தார்கள். செல்வ வினாயகர் கோவிலில் 508 பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினார்கள். எல்லோரது பிரார்த்தனையும் அம்மா விடுதலையாக வேண்டும் என்பது மட்டுமே. எங்கு பார்த்தாலும் மோனலிசா புன்னகையுடன் ஜெயலலிதாவின் ‘கட்அவுட்’களும், பேனர்களும், போஸ்டர்களும், தென்பட்டால், நீங்கள் தமிழ்நாட்டில் நுழைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். வாக்கு வங்கி மிக ஸ்திரமாக இருக்கும் கிராமப்புறங்களில் இது இன்னும் அதிகம்.1948ல் பிறந்த ஜெயலலிதாவுக்கு 2 வயது இருக்கும்போது அவரது தந்தை மறைந்தார்.எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று…

எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று அரசியலுக்குள் நுழைந்தார். ஜெயலலிதா. பிராமணரை எதிர்க்கும் பாரம்பரியம் கொண்ட திராவிடக் கட்சியில் இது பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. ஆனால் அழகும் புத்திசாலித்தனம் ஒருங்கே அமையப் பெற்ற ஜெயலலிதா, இதனை வென்று அரசியல் செய்தார். அவரது ஆங்கிலம் மற்றும் இந்திப் புலமை டெல்லி அரசியலையும் கலக்க உதவியது. ஆனால் எம்.ஜி.ஆரின் நெருங்கிய வட்டத்துக்குள் இருந்தவர்கள், அவரை அப்புறப்படுத்த நினைத்தனர். 24–12–1987 அன்று எம்.ஜி.ஆர். மறைந்தபோது 2 நாட்கள் அவரின் உடல் அருகிலேயே இருந்தார். இறுதியாக அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அதிலிருந்து ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டு ரோட்டில் விழுந்ததை தொலைக்காட்சியில் கோடிக்கணக்கானோர் பார்த்து கண்ணீர் சிந்தினர். அதன் பின்னர் நான்கு வருடங்கள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகளை எதிர்த்து போராடினார். 1991ல் தமிழகத்தின் முதலமைச்சராகி தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார்.

குப்பத்துப் பெண சென்னையில் நான் சந்தித்த மீனவர் குப்பத்துப் பெண்ணான கலா, புரட்சித்தலைவி அம்மா தனி மனுஷியாக போராடுவதால் இவரை எங்களில் ஒருவராகவே நேசிக்கிறோம்’ என்றார். முதல் முறை முதலமைச்சரானபோது உடல் முழுவதையும் மறைக்கும் கோட் அணிந்து தன்னை உங்களின் அன்புச் சகோதரி என்று சொன்னார். மீண்டும் முதலமைச்சரானபோது நகைகள் அணிவதை சுத்தமாகவே கைவிட்டு சந்நியாசி போல் வாழும் அவரை மக்கள் ‘அம்மா’ என்று அழைக்கிறார்கள். அசாதாரணமான சூழலில் அவர் சிறைக்கு போனதும் முதலமைச்சரான பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அறையையோ, அவரது இருக்கையையோ பயன்படுத்த மறுத்துவிட்டார். ஜீன் டிரேஸ்– அமர்த்தியாசென் ஆகியோர் ‘ஆன் அன்செர்ட்டெயின் க்ளோரி’ என்ற புத்தகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி அலசி ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கின்றனர். அதில் நிர்வாகப் புதுமைகளில் எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரே மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டுள்ளனர். விதிகள், வழிமுறைகள், திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை தானே வகுத்து திறம்பட நடத்திய முறைக்கு நாம் தலைவணங்க வேண்டும் என்று சொல்கிறார் பத்திரிகையாளர் சதானந்த மேனன்.

அம்மா உணவகம்,அம்மா பார்மசிமடிக்கணினி, புடவை, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், அரிசி, பசுமாடுகள், பள்ளி குழந்தைகளுக்கு சைக்கிள் போன்றவற்றை விலையில்லாமல் வழங்கியுள்ளார். இப்போது அம்மா உணவகம், அம்மா பார்மசி, அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் என மலிவு விலை பொருட்களையும் வழங்கி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த அன்று காலையிலிருந்தே அவரது இல்லத்தில் குவிந்த தொண்டர்கள் ஏக படபடப்புடன் காத்திருந்தார்கள். அவருக்கு விடுதலை என்று அறிவிப்பு வந்ததும் ஆடி கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். அதிசயமாக அன்று மழையும் கொட்டியது.இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சண்டே மேகசின் பகுதியில் வெளி வந்திருக்கும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து