முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு சூடானில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் விடுவிப்பு

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

சூடான்  - தெற்கு சூடானில் போராட்டக்காரர்களால் மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்கள், இந்திய அரசின் தலையீட்டுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, தெற்கு சூடானில் இயங்கிவரும் தமிழக நிறுவனமான 'தார் பெட்ரோலியம் இயக்க நிறுவன'த்தின் தயாரிப்பு இயக்குநர் அஜய் ராஜா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தெற்கு சூடானில் மிதுன் மற்றும் எட்வர்ட் என்னும் இரண்டு இந்தியர்களை விடுவிக்க நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி. என்னுடைய நண்பர்கள் திரும்பிவிட்டனர்'' என்று கூறியுள்ளார். கடந்த மார்ச் 9-ம் தேதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இரண்டு இந்தியர்கள் தெற்கு சூடானில் கடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் சுஷ்மா சுவராஜுக்கு ட்வீட் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago