எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த செய்தியாளர் பயணம் ஆலத்தூர் வட்டாரத்திற்குப்பட்ட மங்கூன், பெரம்பலூர் வட்டாரத்திற்குட்பட்ட நெடுவாசல், செங்குணம்;; உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்துறை இணை இயக்குநர் சுதர்சன் தலைமையில் நேற்று (26.04.17) மேற்கொள்ளப்பட்டது.
சமச்சீர் வளர்ச்சி
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப்பெருக்கும் வகையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டத்தின்கீழ் ஆலத்தூர் வட்டம் செங்குணம் பகுதியில் ரூ.1.61 லட்சம் மதிப்பில் ரூ.80,500 அரசு மானிய உதவித்தொகையுடன் பயனடைந்த ஜெகன்மோகன் என்ற விவசாயி தனது நிலத்தில் அமைத்திருந்த ஒருங்கிணைந்த பண்ணையையும், பெரம்பலூர் வட்டத்தில் நெடுவாசல் பகுதியில்; சுரேஸ் என்பவரது வயலில் 100 சதவீத மானிய உதவியுடன் சொட்டுநீர் பாசன அமைப்பு உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த மக்காச்சோள வயலினையும், செங்குணம் பகுதியில் நாகராஜன் என்பவரது வயலில் அமைக்கப்பட்டிருந்த உளுந்து விதைப்பண்ணையையும் செய்தியாளர்களுடன் சென்று வேளாண் இணைஇயக்குநர் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
அதனை தொடர்ந்து வேளாண்த்துறை இணை இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தில்; தலா 25 விவசாயிகள் வீதம் 50 விவசாயிகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தலா ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.66,000 மதிப்புடைய இரண்டு ஜெர்சி மாடுகள், ரூ.30,000 மதிப்புடைய 11 வெள்ளாடுகள், ரூ.5,000 மதிப்புடைய 30 நாட்டுக்கோழிகள், ரூ.20,000 மதிப்பில் அமைக்கப்பட்ட சாணஎரிவாயுக்கலன், ரூ.25,000 மதிப்பிலான மண்புழு தயாரிக்கும் அமைப்புகள்,ரூ.15,000 மதிப்புடைய தீவனப்புல் வளர்ப்பு திட்டம் என மொத்தம் ரூ.1,61,000 மதிப்பிலான இத்திட்டத்தை அரசின் 50 சதவீத மானிய உதவித்தொகையான ரூ.80,500 மதிப்பிலான ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கென ஒரு வட்டாரத்திற்கு ரூ.20.12 லட்சம் வீதம் இரண்டு வட்டாரங்களுக்கு 40.24 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஒரு விவசாயி தனது தொழில் சார்ந்து தன்னிறைவு அடைவதுடன், அங்கு உருவாக்கப்படும் பயோ கேஸ் மூலம் வீட்டிற்குத்தேவையான எரிவாயுவையும் உற்பத்திசெய்துகொள்ள முடிகின்றது.
விவசாய பணிகளுக்காக தேவைப்படும் நீரின் அளவினை குறைக்கும் வகையில் விவசாய நிலங்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு நுண்ணீர் பாசன அமைப்பு ஏற்ப்படுத்திட 2015 முதல் நடப்பாண்டுவரை மொத்தம் 444 விவசாயிகளுக்கு 453.77 ஹெக்டேர் பரப்பிலான வயல்களுக்கு அரசின் மானிய உதவியுடன் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசன அமைப்புகளை ஏற்ப்படுத்திட சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.1,00,000- வரையும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம் மான்யமாக ரூ.75,000- வரையும், தெளிப்புநீர் பாசன கருவி சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.19,600ஃ- வரையிலும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம மான்யம் ரூபாய் 14,700- வரையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் வட்டம் செங்குணம் பகுதியில் விவசாயிகளுக்கு தரமான விதை வினியோகம் செய்யும் பொருட்டு விதைப்பெருக்குத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைப்பண்ணையம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து பயிர் செய்துள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.25 வீதம் உற்பத்தி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 248 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல்விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 223 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரகு 3.94 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களான உளுந்து மற்றும் துவரை 23.11 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 20.1 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை 17.55 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 13.79 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், விநியோகம் செய்ய நெல் 39.86, வரகு 3.94, உளுந்து 4.50, துவரை 1.15 மற்றும் நிலக்கடலை 7.12 மெட்ரிக் டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதுடன், விதை உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலையும் கிடைக்கின்றது. இவ்வாறு தெரிவித்தார்.
இப்பயணத்தின்போது ஆலத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் ராஜசேகரன்(ஆலத்தூர்), கீதா(பெரம்பலூர்), வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!