முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூச்சுப் பயிற்சி, தினமும் உடற்பயிற்சி மூலம் ஆஸ்துமா கட்டுப்படுத்தலாம்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      வாழ்வியல் பூமி

காற்று மாசுபடுதல், மக்களின் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் பல காரணங்களால் இந்தியாவில் நாள்தோறும் பலதரப்பட்ட நோய்கள் பெருகி வருகின்றன. பெரும்பாலான சுவாச நோய்களுக்கு விழிப்புணர்வு இல்லாததே முதன்மை காரணமாக உள்ளது. உலக சுகாதார மையத்தின்படி 300 மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்தியாவை பொருத்தவரை 15-20 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவினால்  பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 17 சதவீத மக்கள் ஆஸ்துமாவினால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளில் 5-11 வயதுள்ளவர்களில் 15 சதவீதம் பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர்.வேல்குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மதுரையில் நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் தழும்பு நோய், நுரையீரல் புற்றுநோய், குழந்தைகளுக்கான ஆஸ்துமா போன்றவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆஸ்துமாவின் சிகிச்சைக்கு இன்ஹெலர் மருத்துவமுறையே சிறந்ததாக கருதப்படுகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன் இன்ஹெலர் மருத்துவமுறை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே இருந்தது.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் : ஆஸ்துமாவின் அறிகுறிகள் : சுவாசத்தை வெளிவிடும்போது மெல்லிய அல்லது சற்று அதிக சப்தத்தில் விசில் சப்தம் கேட்கும். சாதாரணமாக நிற்காத இருமல் ஏற்படும். பொதுவாக இரவில் அதிகம் இருக்கும்.

உங்கள் மார்பைச்சுற்றி ரப்பர்பாண்ட்களை இறுக்கியது போன்ற உணர்வோ அல்லது எரிச்சல் உணர்வோ ஏற்படும். ஒரு ஸ்ட்ரா மூலம் சுவாசிக்க முயல்வது போலவோ, அதிலும் மோசமாகவோ நிலைமை இருக்கும். நீங்கள் சுவாசத்தை உள்ளிழுக்க முடியாது. அதே நேரத்தில் சுவாசத்தை வெளிவிடுவது அதைவிட மிகக் கடினமாக தோன்றும்.

இன்று உலக ஆஸ்துமா தினம். பிரதி ஆண்டு மே மாதம் முதல் செவ்வாய்கிழமை உலக ஆஸ்துமா தினமாக கருதப்படுகிறது. மக்களுக்கு ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த    அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆஸ்துமா நோய்களை கண்டறியவும், ஆஸ்துமா நோயாளிகளை 50 சதவீதமாக குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும்  முக்கிய நோக்கமாகும்.

சிகிச்சை முறைகள் : தினமும் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். நோயின் காரண காரியத்தை அறிந்து முழுமையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான மருந்து உட்கொள்ளுதல், உணவு பழக்கவழக்கங்கள், ஒழுங்கான வாழ்க்கை முறை, வெளியில் அதிகளவு உணவு உண்ணமால் இருப்பது, முறையாக இன்ஹெலரை பயன்படுத்துவது இவை மூலமாக கண்டிப்பாக ஆஸ்துமாவை குணப்படுத்துலாம்.

இதுவரை 3000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் ஆஸ்துமா நோய் தொற்று நோயல்ல. முறையான மருத்துவத்தினாலும், மூச்சுப்பயிற்சி, தினமும் உடற்பயிற்சி செய்வதினாலும் இந்நோயை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்