எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பெறகூடிய வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியு;ள்ளார்கள். அந்த வகையில் மறைந்த முதல்வர் முதன் முதலாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற 1991 -96 காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைத்து மக்களோடும் சமமான பங்குதாரர்களாக உள்ள ஒரு புதிய சமுதாயம் உருவாக்கப்படவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் 1993 ஆம் ஆண்டு உடல் ஊனமுற்றோருக்கான தனி இயக்கத்தை உருவாக்கினார்கள். மேலும் 1994 ஆம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான மாநில கொள்கையை வெளியிட்டார்கள்.
விழிப்புணர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள தனிப்பட்ட திறமைகளை கருத்தில் கொண்டு அவர்களை உடல் ஊனமுற்றோர், செவிடர், குருடர் என்று அழைப்பதை தவிர்த்து மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்ற அவர்களை மாற்று திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக அரசு மாற்றுதிறனாளிகளுக்கென மாற்றுதிறனாளிகள் நலத்துறையினை உருவாக்கி மாற்றுதிறனாளிகள் சமுதாயத்தில் அங்கமாக அனைவராலும் ஏற்கவும் சமுதாய வளர்ச்சியில் மாற்றுதிறனாளிகளும் பங்கேற்று அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2011 முதல் 2017 வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இதுவரை 79708 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகளில் 48227 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 4545 பயனாளிகளுக்கு ரூ.32,67,66,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடும் ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 513 பயனாளிகளுக்கு ரூ.3,76,02,000 மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 105 பயனாளிகளுக்கு ரூ.79,29,000ஃ- வழங்கப்பட்டு வருகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1000 வீதம் 210 பயனாளிகளுக்கு ரூ.1,43,73,000ஃ- வழங்கப்பட்டு வருகிறது. கை, கால் பாதிக்கப்பட்ட, செவித் திறன்குறையுடைய,
பார்வையற்ற மாற்றுத் திறனாளியை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு வழங்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த 382 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,29,70,000ஃ- ரூபாயும் மற்றும் 382 நபர்களுக்கு 4 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 1528 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி உதவி தொகை
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்திட ஏதுவாக மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 294 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24,17,500- வழங்கப்பட்டு சுயதொழில் செய்து வருகின்றனர். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு 1 முதல் பட்டய படிப்பு வரையிலான கல்வி உதவித்தொகை இதுவரை 4500 மாணவ மாணவிகளுக்கு ரூ.97,92,000- வழங்கப்பட்டுள்ளது. கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.1,16,47,350- மதிப்பில் 205 பயனாளிகளகுகு வழங்கப்பட்டுள்ளது. கால்கள் பாதிக்கப்பட்ட கைகள் நல்ல நிலையில் உள்ள மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.14,96,900- மதிப்பில் 490 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 625 பயனாளிகளுக்கு ரூ.29.68 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மிதிவண்டிகள், 705 மாற்றுத்திறனாளிகளுக்கு 31.72 இலட்சம் மதிபீட்டில் மடக்கும் சக்கர நாற்காலிகள், 675 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.02 இலட்சம் மதிப்பிட்டில் காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவிகள், 450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.07.87 இலட்சத்தில் ஊன்றுகோல்கள், 726 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.0.73 இலட்சம் மதிப்பீட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மடக்கும் ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடிகள், 715 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.73 இலட்சம் மதிப்பீட்டில் கால்தாங்கிகள், செயற்கை அவையங்கள், பிரையிலி கைக்கடிகாரங்கள், உருப்பெருக்கிகள், 400 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.60 இலட்சம் மதிப்பீட்டில் மோட்டார் பொறுத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகள் ஆக மொத்தம் 4326 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2644 அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் ரூ.9 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சி.அ.ராமன், தெரிவித்துள்ளார்கள.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா தலையீடு : அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
14 May 2025சவுதி : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
தங்கம் விலை ரூ.400 சரிவு
14 May 2025சென்னை : சென்னையில் நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையானது.
-
350 ட்ரோன்களை பறக்கவிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்த துருக்கி..!
14 May 2025புதுடில்லி : இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர் களையும் துருக்கி வழங்கியது தெரிய வந்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க : எடப்பாடி பழனிசாமி பேட்டி
14 May 2025சென்னை : தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கூடுதல் பாதுகாப்பு
14 May 2025புதுடெல்லி : பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு : ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்
14 May 2025புதுடில்லி : 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அ
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
14 May 2025ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
-
நீலகிரி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : நோயாளிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
14 May 2025ஊட்டி : முதல்வர் மு.க.
-
அருணாச்சல் எங்களுடையதே: சீனாவுக்கு இந்தியா கண்டனம்
14 May 2025புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
-
தமிழகத்தில் தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 May 2025சென்னை : தமிழகத்தில் இன்று (மே 15) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மத்திய, தமிழக அரசு, அமாலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
14 May 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
-
நாளை வெளியாகும் சூரியின் மாமன்
14 May 2025காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
-
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
14 May 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.
-
சீனா - துருக்கி ஊடகத்தின் எக்ஸ் பக்கங்கள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை
14 May 2025புதுடெல்லி : சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2025
14 May 2025 -
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கைது செய்யப்பட்ட இந்திய வீரரை ஒப்படைத்தது பாக்.,
14 May 2025புதுடெல்லி : பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் நேற்று (மே.14) ஒப்படைத்தது.
-
அடுத்த 4 நாட்களுக்கு தென்னிந்தியாவில் கனமழை
14 May 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.
-
அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு: தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்கனுமா ? - மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி
14 May 2025மதுரை : அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு, தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
ஜி.பி.முத்து - கிராம மக்கள் இடையே வாக்குவாதம்
14 May 2025தூத்துக்குடி : ஜி.பி. முத்து மற்றும் கிராம மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக த.வெ.க. களத்தில் முதன்மையாக நிற்கும் : விஜய் அறிக்கை
14 May 2025சென்னை : சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக த.வெ.க. முதன்மை சக்தியாக களத்தில் நிற்கும் என்று அதன் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார் அனிதா ஆனந்த்..!
14 May 2025ஒட்டாவா : கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக அனிதா ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார்.
-
எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் கொண்டாட்டம் வேண்டாம்: சுனில் கவாஸ்கர் கோரிக்கை
14 May 2025மும்பை : சமீபத்திய தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளதால் எஞ்சிய ஐ.பி.எல்.
-
'தி வெர்டிக்ட்' முன்னோட்டம் வெளியீடு
14 May 2025கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்'. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.