முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் இற்றை கடைபிடித்தால் நல்லது

செவ்வாய்க்கிழமை, 11 ஜூலை 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

மாணவ பருவம் என்றும் இனிமையானதே, அதிலும் கல்லூரிக் காலம் போன்ற பொன்னான நாட்கள் நமக்கு கிடைத்திருந்தால் அது வரமே. கல்லூரி படிப்பிற்கு பின் என்ன செய்ய போகிறோம் என்ற ஒரு கேள்வியோடு உள்நுழைந்து அதற்க்கு விடையுடன் வெளிவந்தால் அதைவிட இனிமை எதுவும் இருக்க முடியாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை கடைபிடித்தால் கல்லூரியை விட்டு தன்னம்பிக்கையோடு வெளி வரலாம்.


1) ஆங்கில வழி உரையாடல் சரளமாக பேச தெரிந்துகொள்வது பல வழிகளில்  உதவும். உங்களை பற்றி (Self  Introduction) சொல்லச் சொன்னால் குறைந்தது 1 நிமிடம் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். அதோடில்லாமல் உங்களுக்கு பிடித்த பாடம் (Favorite subject) பற்றி பேசச் சொன்னால் 5 நிமிடங்கள் பேசுமளவிற்கு ஆங்கிலத்தில் தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். இவை நேர்காணலின் (Interview) போது  உதவும்.


2) கணிப்பொறி சார்ந்த ஏதாவதொரு பாடம் படித்து சென்று சான்றிதழ் வைத்திருப்பது நல்லது. தற்போதைய trend ல் உள்ள ஒரு Computer Language அல்லது Basic Computer Course தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பு.


3)  Inter college competition, Summer Internship மற்றும் Conference போன்றவற்றில் பங்கேற்பது மிக  மிக அவசியம். நிறைய நட்பூக்களும்,  தொடர்புகளும்  கிடைக்கும். நமது Resume value உயரும். Summer Internship தேடுதலுக்கு உதவ தனி இணைய தளம் உள்ளது 


4) College Seniors உடன் என்றும் தொடர்பில் இருங்கள். வேலை நிலவரம் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கு உதவியாய் இருக்கும்.


5) முடிந்தால் Part time job ஒன்று செய்ய முயற்சி செயுங்கள்.


6) இந்த துறைக்கு அல்லது இந்த பணிக்குதான் செல்வேன் என ஒரு குறிக்கோள் வைத்து வேலை செய்யுங்கள் / படியுங்கள். மனதளவில் இயங்கி கொண்டே இருக்க இந்த குறிக்கோள் உதவும். கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம் அல்லது முதல் ஆறு மாதம் இந்த குறிக்கோளை தேர்ந்தெடுக்க பயன்படுத்தி கொள்ளுங்கள்.


7) Extra curricular activities like Sports, Singing, Playing  instruments, Drawing, Martial Arts, Swimming, Trekking, Poem writing, Learning new language, etc..  இப்படி உங்களது கவனத்தையும், படைப்பாற்றலையும், சக்தியையும் கோரும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது அவசியம்.

இன்றைய நிலை:

முடிந்த வரை On campus / Off  Campusல் வேலை பெற முயற்சி செய்யுங்கள்.

Reference இல்லாமல் சொந்த முயற்சியில் வேலை கிடைப்பது  சிறிது கடினம்.

கொஞ்சம் பொறுத்திருந்தால் / முயற்சி செய்தால் consultancy மூலமாக வேலைக்கு சேரலாம்  ஆனால் 3-4 மாத சம்பளத்தை consultancyக்கு நாம் கொடுக்க வேண்டும்.

நீங்கள் விரும்பிய வேலை  கிடைக்கவில்லை என்றால் காத்திருங்கள் அல்லது கிடைத்த வேலையில் சேர்ந்து விரும்பிய வேலைக்காக முயற்சி செய்துகொண்டே இருங்கள். முயற்சி வெற்றியை தரும்.

இது எனது/என்னை சுற்றி நடந்த அனுபவம், அதாவது average middle class மாணவர்களின் நிலைமை. இந்த சூழ்நிலை உங்களுக்கு வரலாம் வராமலும் போகலாம். ஆகவே பயப்பட ஒன்றுமில்லை, இலக்கு வைத்து செயல்படுங்கள். இழக்க ஒன்றுமில்லை உங்களிடம்  (மாணவர்களிடம் ), இந்த உலகில் அடைய நிறையவே இருக்கிறது.வாழ்த்துக்கள்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து