எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மராட்டியத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை பா.ஜ.க. தகர்த்துள்ளது. மேலும் அங்கு பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி கண்டது. இதில் பா.ஜ.க. மட்டும் 88 இடங்களை கைப்பற்றியது.
மராட்டியத்தில் மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில் 227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சி நாட்டிலேயே பணக்கார மாநகராட்சியாக அறியப்படுகிறது. காரணம், இங்கு இந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மதிப்பு ரூ.74 ஆயிரம் கோடியாகும். இது சில சிறிய மாநிலங்களின் பட்ஜெட் மதிப்பை விட அதிகம். இதனால் மும்பை மாநகராட்சியை கைப்பற்ற கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவியது.
இங்கு கடந்த 25 ஆண்டுகளாக ஒன்றுப்பட்ட சிவசேனா அதிகாரம் செலுத்தி வந்தது. கடந்த 2022-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இரு அணிகளாக உடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியின் பெயர், சின்னம் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வசம் வந்தது. உத்தவ் சிவசேனா என்ற பெயரில் உத்தவ் தாக்கரே கட்சி நடத்தி வருகிறார்.
இந்த தேர்தலில் பா.ஜனதாவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதேபோல சுமார் 20 ஆண்டு காலம் அரசியல் எதிரிகளாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி வைத்தனர். காங்கிரஸ் கட்சி, வஞ்சித் பகுஜன் அகாடி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. இதனால் தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது.
இந்தநிலையில் 114 வார்டுகளில் வெற்றிபெறும் கூட்டணி, நாட்டின் பணக்கார மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் என்ற நிலையில், தேர்தல் முடிந்து நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது, பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி கண்டது. இதில் பா.ஜனதா மட்டும் 88 இடங்களை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 28 இடங்களில் வெற்றி பெற்றது. உத்தவ் சிவசேனா 65 வார்டுகள், நவநிர்மாண் சேனா 8 வார்டுகள் என இந்த கூட்டணி கட்சிகள் 73 இடங்களை பிடித்து தோல்வியை தழுவியது.
காங்கிரஸ் வெறும் 14 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மும்பை மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. இங்கு முதன் முறையாக பா.ஜனதா மேயர் பதவி ஏற்க உள்ளார். 25 ஆண்டு காலம் மாநகராட்சியை தன்வசப்படுத்தி வைத்திருந்த தாக்கரேக்களின் கொடி மும்பை மாநகராட்சி கோட்டையில் இருந்து இறக்கப்பட்டு உள்ளது. மும்பையில் தாக்கரேக்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி மாநகராட்சியை தங்கள் கூட்டணி கைப்பற்றியதால் பா.ஜனதாவினர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். வெற்றியை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர்.
இதேபோல துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் செல்வாக்கு மிகுந்த தானே மாநகராட்சியிலும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. இங்கு சிவசேனா அதிக வார்டுகளில் வெற்றி பெற்று இருப்பதால், அக்கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட உள்ளது. முதல்-மந்திரி தேவந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரின் சொந்த ஊர் உள்ள நாக்பூர் மாநகராட்சியையும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் கைப்பற்றி உள்ளது.
மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில் பா.ஜனதா கூட்டணி 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளில் அபார வெற்றி கண்டுள்ளது. ஆனால் 25 மாநகராட்சிகளில் பா.ஜனதா மேயர் பதவி ஏற்பார்கள் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். காங்கிரஸ் கட்சி லாத்தூர், சந்திராப்பூர், பிவண்டி, பர்பானி, கோலாப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த மாநகராட்சிகளின் மேயர் பதவியை காங்கிரஸ் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. உத்தவ் சிவசேனா, ராஜ்தாக்கரே கட்சிகளின் கூட்டணியால் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற முடியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Mar 2026சென்னை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய
-
தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது: தனித்தேர்வர்கள் உள்பட 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
10 Mar 2026சென்னை, தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப
-
சர்வதேச விமான நிலையமாக மாறும் மதுரை விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
10 Mar 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை: மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 Mar 2026சென்னை, கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை மற்றும் மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ஈரான் போர் குறித்து ட்ரம்ப் - புதின் ஆலோசனை
10 Mar 2026மாஸ்கோ, ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
10 Mar 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை
10 Mar 2026லாகூர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும்: பார்லி., மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
10 Mar 2026சென்னை, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை அடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளிய
-
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை: பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட
-
திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் என்.டி.ஏ சார்பில் பொதுக்கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
10 Mar 2026திருச்சி, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று (புதன் கிழமை) மாலை நடக்கிறது.
-
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
10 Mar 2026கொழும்பு, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
-
நாட்டில் 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு: எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தால் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக
-
ராமேஸ்வரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட தமிழ்நாட்டிற்கு 5 புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்
10 Mar 2026திருச்சி, நெல்லை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
-
தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
10 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
த.வெ.க. சார்பில் விருப்பமனு: 60 பேரிடம் விஜய் நேர்காணல்
10 Mar 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட த.வெ.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 60 பேரிம் விஜய் நேற்று நேர்காணல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த பி.சி.சி.ஐ.
10 Mar 2026மும்பை, ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை இல்லாத அளவிலான பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம்: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை
10 Mar 2026சென்னை, மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
-
வருகிற 13-ம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிற
-
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப்
10 Mar 2026வாஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால் இதுவரை தாக்கப்பட்டதைவிட ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்
-
போர் விரைவில் முடிவுக்கு வரும் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிவு
10 Mar 2026நியூயார்க், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது.
-
தமிழகத்தில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அச்சம்: மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி. கோரிக்கை
10 Mar 2026சென்னை, வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் தமிழகத்தில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், இந்த பிரச்சனையில் மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: வரும் 17-ம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகிறேன்: செந்தில் பாலாஜி
10 Mar 2026கரூர், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொர்பாக வருகின்ற மார்ச் 17 அன்று சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக தமிழக முன்னாள
-
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி
10 Mar 2026கொல்கத்தா, தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
10 Mar 2026மும்பை, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் நேற்று நல்ல ஏற்றம் கண்டன.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரியில் பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரம்.
- திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு.


