முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு-19 உலகக் கோப்பையில் கைகுலுக்க மறுத்த இந்தியா, வங்கதேச அணி கேப்டன்கள்

சனிக்கிழமை, 17 ஜனவரி 2026      விளையாட்டு
Indian---Bangladesh

புலவாயோ, இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

4 குழுக்களாக...

19 வயதுக்குள்பட்டோருக்கான ஐ.சி.சி. 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் நான்கு அணிகள் வீதம் நான்கு குழுக்களாக 16 அணிகள் விளையாடுகின்றன. இந்திய அணி குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

பந்துவீச்சு தேர்வு... 

முதல் போட்டியில் டக்வெர்த் லீவிஸ் முறையில் அமெரிக்காவை வென்ற இந்திய அணி நேற்று (ஜன.17) ஜிம்பாப்வேயின் புலவாயோ கிரிக்கெட் திடலில் நடைபெறும் தொடரின் 7-வது போட்டியில் வங்கதேச அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.

கைகுலுக்க மறுப்பு...

இந்தப் போட்டியில் காசு சுண்டுதலில் வெற்றிபெற்ற வங்கதேச கேப்டன் அப்ரார், இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரேவிடம் கைகுலுக்க நெருங்கி வந்த போது, ஆயுஷ் அவரை கண்டுகொள்ளாமல் கைகுலுக்க மறுத்துவிட்டார். பின்னர், இரு அணிகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்ட பின்னரும், இரு அணி வீரர்களும் கைகுலுக்குவதை மறுத்துவிட்டனர்.

சிறுபான்மையினர்...

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால ஆட்சியில் அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதனால், இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஹிந்து தொழிலதிபர், பத்திரிகையாசிரியர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

ரஹ்மான் விடுவிப்பு...

இருதரப்பிலும் தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில், வங்கதேச வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதியளிக்கக் கூடாது என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்திருந்த வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை, அணியில் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியதால், அவர் அணியில் இருந்து ஜன. 3 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.

இலங்கைக்கு மாற்ற... 

 

இதன் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப அங்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. டி20 போட்டியில் வங்கதேச அணி வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் எனக் கூறி, பாகிஸ்தான் அணியைப் போன்றே வங்கதேசத்துக்கான போட்டிகளையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட விவகாரமும் பெரிய பேசுபொருளானது. முன்னதாக, கடந்தாண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பயங்கரவாத - ராணுவ சண்டை ஆசியக் கோப்பை வரை எதிரொலித்தது. இந்த இரு தொடர்களிலும் இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்களும் கைகுலுக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து