முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் வன்முறை வெடித்த 15 நாட்களில் 3 லட்சம் முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம்

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

மியான்மர் : மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக 15 நாட்களில் 3 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

மியான்மரில் புத்த மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். அதேநேரம், ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். பல தலைமுறைகளாக வசித்து வரும் அவர்களுக்கு குடியுரிமை வழங்காமல் அந்நாட்டு அரசு பாகுபாடு காட்டுவதாக கூறப்படுகிறது. அதேநேரம், முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் மோதல் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். பிறகு வன்முறை கட்டுக்குள் இருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி மீண்டும் மோதல் வெடித்தது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு ராணுவமும் துணை நிற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல கிராமங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இதில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தொடரும் வன்முறை காரணமாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடான வங்கதேசத்தில் குடியேறி வருகின்றனர்.

இதுகுறித்து ஐ.நா.அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜோசப் திரிபுரா நேற்று கூறியபோது, “ஆகஸ்ட் 25-ம் தேதியிலிருந்து இதுவரை 2.9 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்” என்றார்.

வங்கதேசம், மியான்மர் இடையிலான எல்லை 278 கி.மீ. நீளத்துக்கு நீண்டுள்ளது. பெரும்பாலான ரோஹிங்கியா முஸ்லிம்கள் நடை பயணமாகவும் படகுகள் மூலமும் வங்கதேசத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

மியான்மருடனான வங்கதேச எல்லைக்கு அருகே அகதிகள் முகாம்கள் உள்ளன. அதில் ஏற்கெனவே 3 லட்சம் பேர் தங்கி உள்ள நிலையில், மேலும் அகதிகள் வந்து கொண்டே இருப்பதால் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து