எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பன்னாட்டு மருந்துகளின் கம்பெனிகளின் தூண்டுதலுக்கு பலியாகி விட்டார் என்று நடிகர் கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்,
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆங்கில மருத்துவம் தோன்றி நூற்றி அம்பது ஆண்டுகள் தான் ஆகிறது. தமிழ்மருத்துவம் என்பது கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது, தமிழ்மருத்துவம், இன்றைக்கும் பூண்டு.சீரகம், வெங்காயம் மிளகு போன்றவற்றை உணவில் எடுத்துக்கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாது. ஏடிஎஸ் கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு கசாயம் அருந்தலாம், அதை 15 ஆண்டுகளுக்கு முன்னரே தேவசகாயம் என்ற மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். நிலவேம்பு கஷாயத்தை பற்றி மக்களை குழப்புகிற செயலில் யாரும் இறங்க வேண்டாம். திமுக ஆட்சியில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு ஏற்பட்டபோது, நிலவேம்பு கஷாயம் தான் வழங்கப்பட்டது. அப்போது கமல் சென்னையில் தானே இருந்தார். அப்போது ஏன் எதுவும் பேசவில்லை. அதிமுக ஆட்சியில் எது செய்தாலும் குற்றமாக கருதி கொண்டு பேசுகிறார். பன்னாட்டு மருந்துகளின் வியாபாரம் படுத்து விட்டதால் அந்த நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள முயன்று வருகின்றன. அதற்கான செய்திகளை பரப்ப திட்டமிட்டு வருகின்றன. அதற்கு கமலஹாசன் அடிமையாகி விட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை அரசு தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. டெங்கு ஓழிப்பை அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து மக்கள் இயக்கமாக மாற்றி போர்க்கால நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் உற்பத்தி செய்யும் கொசுக்களை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். டெங்கு காய்ச்சல் விரைவில் கட்டுப்படுத்தப்படும்.
டெங்கு விவகாரத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திமுக மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. அரசு நடவடிக்கைகள் குறித்து பொய்ப்பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் திமுக ஆக்கப்பூர்வமான பணியை செய்யவில்லை.
அரசு கட்டிடங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக கருதினால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. அதில் எந்த தயக்கமும் காட்டாது. அம்மாவின் அரசு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளும், அதில் எந்த மாறுபாடும் இல்லை. அரசு கட்டிடங்கள் தரம் குறைந்திருப்பதாக கருதப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிப்பட்ட கட்டிடங்களை தமிழக அரசு இடிப்பதற்கும் தயங்காது.
டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் நிதி கேட்டிருப்பது, கமிஷன் அடிப்பதற்கு தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார், கமிஷன் கொள்ளை என்பதெல்லாம் திமுக ஆட்சியில் தான் நடந்தது. 1 லட்சத்து 80 ஆயிரம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த தீர்ப்பு வரும் 25-ம் தேதி வரவிருக்கிறது. இந்தியாவே தமிழ்நாட்டை எள்ளிநகையாடும் வகையில் நடந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல் தமிழ்நாட்டையே தலைக்குனிய வைத்தவர்கள் கமிஷன் கொள்ளை என்றெல்லாம் பேசலாமா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் இமாலய சாதனை படைத்தவர்கள், விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்தவர்கள், சர்க்கரை, பூச்சி மருந்தில் ஊழல் புரிந்தவர்கள் திமுகவினர், உலகிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட முதல் ஆட்சி திமுக ஆட்சி தான்,. எனவே ஸ்டாலினுக்கு அதை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
உள்ளாட்சித்தேர்தல் நடத்தவிடாமல் இடைக்கால தடையாணை பெற்றவர்கள் திமுகவினர் தான், நாங்கள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த தயாராக இருந்த போது அதற்கு முட்டுக்கட்டை போட்டது திமுக. நீதிமன்றத்தில் இடைக்கால தடையாணைக்கு அடிப்படை காரணகர்த்தாவே திமுக தான். கருணாநிதியே மீண்டும் எழுந்து வந்தாலும் அதிமுக ஆட்சியையும் கட்சியையும் அசைத்து பார்க்கக்கூட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள