தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மற்றவர்களது உணர்வில் ஆழ்ந்து ஈடுபடும் பண்பே இரக்க உணர்வாகும். நமக்கு அடுத்திருப்பவரது உணர்வையும், பரிவையும் புரிந்துகொண்டு, அவர்களது இடுக்கண்களையும், துன்பங்களையும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஆற்றலே இரக்கவுணர்வாகும். துன்பத்தில் ஆழ்ந்து கிடப்பவரது பாதிப்பை உணர்ந்து கொள்வதற்கு இரக்கவுணர்வு உதவுகிறது. மனத்தளவில் இருவேறு மனிதர்களுக்கு இடையில் நிலவும் இடைவெளியை இரக்கவுணர்வு இணைத்து விடுகிறது. துன்பத்தால் வீழ்ந்து கிடப்பவரது உள்ளத்தின் உணர்வுகளை அதே அலைகளின் அளவில் ஒத்து உணரச்செய்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்குமாறு இரக்கவுணர்வு தூண்டுகிறது. ஒருவருக்கு ஏற்பட்ட சோகத்தைத் தாங்கிக்கொள்ளுமாறு ஊக்கத்தையும், வலிமையினையும், ஆறுதலையும் அது வழங்குகிறது. சகமனித உணர்வு, தயவு ஆகியவற்றின் காரணமாக இரக்கவுணர்வு பெருக் கெடுக்கின்றது. மென்மையான இதயமும், பிறர் உணர்வின் மீதான அக்கறையும், துன்பத்தைப் பற்றிய கரிசனையும் காட்டுவது மெல்லுணர்வு எனலாம். அது ஒருவரது உள்ளத்தை மென்மையினாலும், அருள் பண்பினாலும் போர்த்துகின்றது. மனிதர்கள் சோதனையினாலும், இன்னல்களாலும், இடுக்கண்களாலும் வருந்தும்பொழுது ஆறுதல் அளிக்கிறது. துயருற்றவர் மனதில் இரக்கவுணர்வு தன்னம்பிக்கையைக் கட்டி யெழுப்புகிறது. அன்பைச் செயலளவுக்குக் கொண்டு செலுத்தும் ஆற்றல்மிக்கதாக இரக்கவுணர்வு திகழ்கிறது.
நிகழ்வு : “பாரிசு மாநகரத்தில் இரண்டு விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்பட்ட சிறப் பான வரவேற்பில் பங்குபெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல்லாயிரக்கணக் கான மக்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியில் ஒன்று கூடினர். அவர்கள் இருவரும் வெளியே வந்து நின்ற பொழுது ஆம்ஸ்டிராங் முன்னாலே வந்தார்; காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடைகளை உடைத்துவிட்டு, நேராகத் தான் சென்று அமரக்காத்திருந்த காரை நோக்கி அவர் செல்லவில்லை! வேறு திசையில் சென்றார். அனைவர் கண்களும் அவர் பின்னே சென்றன. சக்கர நாற்காலியில் அவரைக் காணவந்த மனிதரை நோக்கிச் சென்றார்.
கால்கள் ஊன முற்றிருந்த அந்த மனிதரால் நடக்க இயலாது. தனது அறையின் சன்னல் வழியாக ஆம்ஸ்டிராங் அவரைப் பார்த்திருந்தார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழகானதொரு காட்சியினைக் கண்டோம். பழைய நெருங்கிய நண்பர்கள்போல இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என்னருகில் இருந்த நண்பர் என்னிடம் சொன்னார்: “அற்புதமான காட்சி இல்லையா? உலகிலேயே வேகமாகப் பயணம் செய்யும் மனிதரும் உலகில் மெதுவாகச் செல்லும் மனிதரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.” அப்போது என் உள்ளத்தில் ஒரு கேள்வி உதய மாகிறது. எது மிகக் கடினமானது? நிலவுக்குச் செல்வதா? அல்லது நடையற்றுப் போன மனிதர் மீது அக்கறை காட்டுவதா?
இரக்கவுணர்வைப் பண்படுத்தி வளர்த்துக் கொள்ள வழிமுறைகள் : துன்பத்தில் கிடந்து தவிப்போரை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல், மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நெருக்கடியான வேளைகளில் ஒருவரைப் புரிந்துகொண்டு இசைவான உணர்வை வெளிப்படுத்துதல், மூளை வளர்ச்சி குன்றிய, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல், மக்கள் நோயினால் பிடிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுதல், பிறர் துன்பங்களை எதிர்கொள்வதற்கு உதவி புரிதல், மற்றவர்களிடம் இனிமையாக வும், ஈடுபாடுகாட்டும் முறையிலும் நடந்துகொள்ளல், நலிவுற்றவர்பால் அக்கறை காட்டுதல், துன்பத்தில் வீழ்ந்து கிடப்போருக்குக் கைகொடுத்து உதவுதல், நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், வயது முதிர்ந்தோர், புறக்கணிக் கப்பட்டோரைப் பேணுதல், இயற்கைச் சீற்றங்களாகிய வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம், புயல், மழை முதலிய பாதிப்புகள் ஏற்படும்போது அக்கறையை வெளிப்படுத்துதல்.
சேவை : அறிவு, உள்ளம், உடல் ஆகியவற்றைப் பிறர் நலனுக்காக அவர்களது தகுதி, சாதி, வர்க்கம் பாராமல் செயல்படுத்துவதே சேவை. தன்னலமற்ற சேவை புரிந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்குச் செயல்படுவதே சேவையாகும். உடல் உழைப்பின் மூலமாக வளர்ச்சிப் பணிகளுக்கான பங்களிப்பை ஒருவர் வழங்குவதே சேவையாகும். கல்விப் பயிற்சி வாயிலாக ஒருவரது உள்ளடங்கிய ஆற்றல்களைக் கண்டுகொள்ள சேவைச் செயல்பாடு உதவுகிறது.
மற்றவர்களது தேவைகளைக் குறித்துச் சேவை அக்கறை கொள்ளுகிறது. ஒருவருடைய நன்னடத்தை, ஆளுமை ஆகியவற்றின் வளர்ச்சிக்கான ஏராளமான வாய்ப்புகளைச் சேவை ஏற்படுத்துகிறது. கைம்மாறு கருதாமல் தன்னலமின்றி நம்மைத் தருவதற்குச் சேவை உறுதி தருகிறது.
கதை : ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். வுழியில் கள்வர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவரிடம் இருந்த ஆடை உள்ளிட்ட எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர். அவரைக் காயப்படுத்திக் குற்றுயிராய்க் கிடக்குமாறு அடித்துப் போட்டனர். சாலையோரம் கிடந்த அவரைப் பார்த்தவாறு பலரும் கடந்து சென்றார்கள். ஆனால் எவருமே காயமுற்றவருக்கு உதவி செய்ய முன்வரவே இல்லை.
ஆனால் ஏழை மனிதர் ஒருவர் கருணையோடு அவரைக் கண்டு மனமிரங்கினார். அவரது காயங்களைக் கட்டினார். அவரைத் தூக்கினார்; மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் - அவர் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். மறுநாள் மருத்துவமனை உரிமையாளருக்குத் தம்மிடமிருந்த பணத்தையும் எடுத்துக்கொடுத்தார். இரண்டு நாட்கள் கடந்த பிறகு தாம் திரும்பி வரும்போது ஆகும் செலவுகளைக் கொடுத்துவிடுவதாக உறுதி கூறினார்.
சேவை மதிப்பு நலனைப் பண்படுத்தி உருவாக்கிக் கொள்ள வழிமுறைகள் : தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் மற்றவர்களுக்கு நன்மை செய்தல். தேவை கருதி எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சிறிய உதவிகள் செய்தல். மற்றவருக்கு உதவி புரிதல். ஆறுதல் கூறுதல், வழிகாட்டுதல். வலியச் சென்று பிறருக்கு உதவுதல். பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்தத் தேவைகளையும் நலன்களையும் தியாகம் செய்தல். பிறர் எளிதில் சந்திப்பதற்கு உரியவராக இருத்தல். இன்னல்கள் நேரிடும்போது தக்க நேரத்தில் உதவுதல். முதியோர், பார்வையற்றோர் இல்லங்களுக்குச் சென்று உதவுதல். நாட்டுக்கு நற்பணி செய்யத் தயாராக இருத்தல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 2 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 6 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 2 days ago |
-
விரைவில் திரைக்கு வரும் பேய காணோம் படம்
04 Jul 2022குளோபல் எண்டர்டெயின்மெண்ட் தேனி பாரத் R.
-
விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் : தே.மு.தி.க. தலைமை அறிக்கை
04 Jul 2022சென்னை : விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தே.மு.தி.க. தலைமை தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
04 Jul 2022பர்மிங்காம் : இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
-
அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
04 Jul 2022வாஷிங்டன் : நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற வெளிநாட்டினர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது.
-
டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
04 Jul 2022கோபன்ஹேகன் : டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
மாய கங்கா பாடலை வெளியிட்ட ஜி.கே. ரெட்டி
04 Jul 2022என்.கே. புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கும் படம் பனாரஸ். இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.
-
இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம்: இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து எழுதப்பட வேண்டும் : பெட்னா அமைப்பின் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
04 Jul 2022சென்னை : இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம் என்றும், இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.
-
ஆப்கனில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
04 Jul 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
-
ராக்கெட்ரி விமர்சனம்
04 Jul 2022மாதவன் முதன் முறையாக இயக்கி நடித்துள்ள படம் ராக்கெட்ரி. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
-
இங்கிலாந்தில் 2023-க்கான உக்ரைன் மீட்பு மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
04 Jul 2022லண்டன் : உக்ரைன் மீட்பு மாநாடு 2023 இங்கிலாந்தில் நடத்தப்படும் என அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு
04 Jul 2022மாஸ்கோ : உக்ரைனின் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.
-
யானை விமர்சனம்
04 Jul 2022ஹரி இயக்கத்தில் வெடிக்காரன் பட்டி சக்திவேல் தயாரிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் யானை.
-
5,689 மெகாவாட் உற்பத்தி: தமிழகத்தில் 2-வது முறை உச்சம் தொட்ட காற்றாலை மின் உற்பத்தி
04 Jul 2022சென்னை : தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக 5689 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
-
கனல் இசை வெளியீட்டு விழா
04 Jul 2022த நைட்டிங்கேல் புரொடக்சன் தயாரிப்பில் சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனல்’.
-
ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு: தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் : முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
04 Jul 2022சென்னை : தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் என்றும், ஒரு ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு என்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.
-
கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை செய்ய கோரிய வழக்கு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி
04 Jul 2022மதுரை : கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதை தடை செய்ய கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ. 1,25,244 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து - 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
04 Jul 2022சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய்
-
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக விசைதறிகள் வேலை நிறுத்தம் : ரூ.12 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு
04 Jul 2022ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.
-
பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் பலி
04 Jul 2022இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனர்.
-
டி பிளாக் விமர்சனம்
04 Jul 2022யூடியூப் புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள் நிதி நடித்திருக்கும் திரைப்படம் ‘டி பிளாக்’.
-
செஸ் ஒலிம்பியாட் தரவரிசை: 2,696 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இந்திய அணி
04 Jul 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் தரவரிசையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
-
ஐஸ்வர்யா ராஜேஸ் வெளியிட்ட கிப்ட் பஸ்ட் லுக்
04 Jul 2022பி.பி. சினிமாஸின் முதல் தயாரிப்பான கிஃப்ட் படத்தினை இயக்குனர் பா.பாண்டியண் இயக்கி வருகிறார்.
-
நீலகிரி, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
04 Jul 2022சென்னை : தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியே : சென்னை, ஜகோர்ட் உத்தரவு
04 Jul 2022சென்னை : மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இமாச்சல்லில் பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி
04 Jul 2022குலு : இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு பிரதம் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.