முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும்: அகிலேஷ் யாதவ் உறுதி

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      அரசியல்
Image Unavailable

லக்னோ, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க முடியும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லக்னோவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

பா.ஜ.க.வை எளிதில் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை நாடு முழுவதும் வியாபித்து பரவியுள்ளது. அடுத்துவரும் தேர்தல்களில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஒற்றுமை மேலும் வலுவடையும்.  - அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர்,புல்பூர்  மக்களவைத் தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க தோல்வியைத் தழுவியுள்ளது. இரு தொகுதிகளிலும் சமாஜ் வாடி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் எங்கள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.கவை எளிதில் தோற்கடிக்க முடியும். இந்த நம்பிக்கை நாடு முழுவதும் வியாபித்து பரவியுள்ளது. அடுத்துவரும் தேர்தல்களில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஒற்றுமை மேலும் வலுவடையும். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து