முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று  மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 31-ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில்  இன்று  (15-ம் தேதி) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. 

மகர விளக்கு பூஜையின்போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். மகரவிளக்கு பூஜையையொட்டி இந்த திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது. இன்று மாலை 6.30 மணிக்கு இந்த திருவாபரண பெட்டி சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும்.

பாரம்பரிய முறைப்படி வரவேற்புக்கு பிறகு 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெறும்.

மகரவிளக்கு பூஜை நடைபெறும் அதே நேரத்தில் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக ஐதீகம் என்பதால் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்கவும், மகர ஜோதியை காணவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளனர். மகர ஜோதி தெரியும் மலைப்பகுதிகளில் பக்தர்கள் இப்போதே கூடாரம் அடித்து தங்க தொடங்கி விட்டனர். மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக இன்று அதிகாலை மகர சங்கரம பூஜையும் நடைபெறும். சபரிமலையில் பக்தர்கள் குவிந்து உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பக்தர்கள் வேடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி சபரிமலையில் தாக்குதல் நடத்தலாம் என்ற ரகசிய தகவல் மத்திய உளவுத்துறைக்கு கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு ஐ.ஜி., 2 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து