எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் வழக்கம் போல; மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் (5.39 சதவீதம் அதிகம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். 2,120 மேல்நிலைப் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீதம் எடுத்து முதலிடம் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் -2 பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளை நேற்று காலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் அறிந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்பட்டது. தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717ஆகும். பள்ளி மாணவர்களாக தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 ஆகும். இதில் மாணவிகள் 4 லட்சத்து 24 ஆயிரத்து 285 ஆகும். மாணவர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 646. பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்து 516 ஆகும். தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 415 ஆகும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 94.80 சதவீதம், மாணவர்கள் 89.41 சதவீத பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.39 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்து 127 மேல்நிலைப்பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. இம்மாவட்டத்தில் 97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். 96.99 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு 2-வது இடம் பிடித்துள்ளது. 96.39 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தை கோவை பிடித்துள்ளது.
மாற்று திறனாளி மாணவர்களில் 2835 பேர் தேர்வினை எழுதினர். இதில் 2506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 62 கைதிகள் தேர்வு எழுதியதில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல் - 95.94 சதவீதம், வேதியியல் - 95.82 சதவீதம், உயிரியல் - 96.14 சதவீதம், கணிதம் - 96.31 சதவீதம், தாவரவியல் - 93.95 சதவீதம், விலங்கியல் - 92.97 சதவீதம், கம்ப்யூட்டர் அறிவியல் - 99.51 சதவீதம், வணிகவியல் - 95.65 சதவீதம், கணக்குப் பதிவியல் - 94.80 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 85.94 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30 சதவீதம், மெட்ரிக் பள்ளிகள் 98.70 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 92.72 சதவீதம், பெண்கள் பள்ளிகள் 94.81 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 83.91 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மார்ச் மாதம் 24-ம் தேதி நடந்த தேர்வுகளில் மட்டும் 36 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு வரும் 27-ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் (புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்) ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது. மறு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு மட்டும், மறுதேர்வு முடிவடைந்த பின், தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி–தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில், தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தரவரிசை முறையானது மாணவர்கள் மனஅழுத்தம் இருக்கக் கூடாது என்பதற்காக ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ்-1 வகுப்பு) மார்ச் - ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை (அரியர்ஸ்) மார்ச் 2020 பருவத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நேற்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.